Friday, May 20, 2022

வாசகசாலை


இருளடைந்த வெளி 

*

உண்பதற்கும்

உறங்குவதற்குமே வீடு.

சீக்குண்ட கோழியாக

சுருண்டு கிடக்காதேயென

சுற்றித் திரிபவர்

வீடே உலகமென முடங்கிப்போனார்.

வலபக்கச் சுவர் ஆயிரத்தி எட்டுச் செங்கல்

இடப்பக்கச் சுவர் எட்டுநூத்தி எட்டு

மேல்பக்க கலவையின் கணம்

ஒரு டன் இருக்கக் கூடுமென

தன் யூகத்தினை 

எழுதி அடித்து 

திருத்தம் செய்தபடியே இருந்தார்.

தன் தலைமுடியை தானே

கணக்கிட முடியாதுபோக

வரையும்போதே எண்ணிக்கொண்டேனென

தன் புத்திசாலித்தனத்தை

மெச்சிக்கொண்டவர்

எண்ணிவர பணிக்கிறார்.

தினசரி ஒரு இடம் கூறி

அங்கிருக்கும் மரத்தின்

இலைகளை.


அழியாத் துயர்

*

வேர்களை

வெளியெங்கும் பரப்பி

புலப்படாத புள்ளிகளால்

அச்சத்தில் நாட்களை

நகர்த்தும் காலத்தில்

தொங்கவிடப்பட்ட உடலின்

ஆசனதிறப்பில்

அதிகாரம் திமிர்த்த மரமொன்றில்

கிளைத்த லத்தியை ஈட்டியாக்கி

வம்சத்தை துண்டாடச் செய்திருத்தல்

காட்சி அல்ல.

திரைச்சிலையை இழுத்துவிட

மறைந்து போவதற்கு.

No comments:

Post a Comment