Monday, May 2, 2022

அம்ருதா 2018

 1

சொட்டும் ஒலிகளால் 
நிரம்பும் பாத்திரம் வழிந்தது
நிலம் உறிஞ்சி குளிர்ந்திட
தழைத்தது விருட்சம்.

பின்பொரு நாளில்
நின்றிருந்தவனின் தலையில்
ஒலிச்சொட்டுகள்
சிலிர்த்த உடலுள்
ஒளியின் நடனம்.

2. பலூன்
காற்றடைக்க பறந்தாடுவதற்கும்
நிரப்புகையில்
வெடித்து துக்கடாவதற்கும்
மத்தியில் 
ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது வாழ்வு.

No comments:

Post a Comment