Saturday, December 27, 2014

நன்றி: இளஞ்சேரல்

தோட்டாக்கள் பாயும் வெளி-
ந.பெரியசாமியின் கவிதைகள் குறித்து...
இளஞ்சேரல்

         கவிதைகளின் நிலைகளில் அதன் பதிவாக்கங்களில் பொருளும் காட்சிகளும் காட்சியும் படிமங்களும் வேறு நிலத்திற்குரியவனுக்கு அந்நியமாகவே தெரியும். எனினும் நாம் கவிதைகளை வாசிக்கிற பொழுது ஒரு புதிய நிலத்தை புதிய அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளப்போகி றோம் என்னும் உணர்வுடன்தான் அணுக வேண்டும். நாம் நமது ஊருடனும் உறவுகளுடனும் அந்நியமாதலைத் தொடர்ந்து நிகழ்த்திவருகிறோம். மிகவிரைவாக ஒரு பிடியைத் தளர்த்திக் கொள்கிறோம். அப்படியான விடுபடல் மூலமாக மனமகிழ்ச்சி கொள்கிறோம். அந்நிய நிலமாக அந்நியமனிதர்களாக ஒவ்வொன்றையும் அறியத் துவங்கியிருக்கிற காலமிது. தொலைவிலிருப்பவர்களிடம் உறவுகளைப் பற்றிக் கொள்ள முனைவதும் அருகிலிருப்பவர்களிடமிருந்து வெகு தொலைவு இடைவெளியை உருவாக்குவதுமாகவே மனித உணர்வுகளின் வாழ்வு பல்லாயிரம் ஆண்டுகளாகவே நடக்கிற தொடர் பெயரெச்சம் இது.
           ந.பெரியசாமியின் கவிதைகள் மாற்று சமூகத்தைப் புணரமைக்க நினைக்கிறது. கோம்பக்காட்டுப் புதூர்,புதுடெல்லி, புதூர் என்கிற நிலப்படிமங்கள் எல்லாமே புதுவகையான சமூகப் புத்தாக்கம்தான். ஒரு புகழ்பெற்ற கவிதையொன்று எழுதியவர் ந.முத்து என நினைவு
சமத்துவபுரம்
கழிவுகள் சுத்தம் செய்ய
அதே வெட்டியான்- என்பதாக.
         நிலச்சமண் என்பது இனவரைவியலுக்குட்பட்ட தாகவே இருப்பினும் அங்கு தோன்றியெழுவது புதிய சமூகத்தின் இயல்புகள்தான். தலைமுறைவேறுபாடுகளும் சிந்தனைகளின் தொடர்ச்சிதான். ஆனால் மொழியில் மட்டும் எதுவும் நிகழ்வதேயில்லை. அல்லது நிகழ விடுவதேயில்லை. ந.பெரியசாமியின் ஒரு கவிதை
எழுத மறந்த பக்கங்களில்...

தினமும் எழுதத் தீர்மானித்தேன்
வெண்மை மிளிரும் தாள்கள் நிறைந்த
நோட்டு ஒன்றை வாங்கி வந்தேன்
ஓரே ஒரு படம் வரைஞ்சிக்கிறேன்
ஆசையாக்க் கேட்டவனிடம் தந்தேன்
மரம் ஒன்றை வரைந்திருந்தான்
நாளையிலிருந்து துவங்கலாமென வைத்தேன்
நிறைய்ய கடந்தன நாட்கள்

திடுமென நினைவு சுட
எழுதத் தீர்மானித்து எடுத்தேன்
முதல் பக்கத்திலிருந்த மரம்
அடுத்த பக்கத்தில் துளிர்த்திருந்தது
அடுத்தடுத்த பக்கங்களில்
காக்கை கூடு கட்டியிருந்தது
மேலும் பல பக்கங்களில்
இலைகள் உதிந்து கிடக்க
காய்களும் இறைந்து கிடந்தன
மர நிழலில் அமர்ந்திருந்தவர்கள்
சேகரித்த பழங்களைத் தின்றனர்
துப்பிய கொட்டைகளில்
சிலது துளிர்த்தும் இருந்தன
பிரபஞ்சம் எங்கும்.---பக்-44

      தொல்காப்பியமும் சங்கப் பாடல்களும் வகைப்படுத்திய நிலங்களின் தன்மை மாறியிருக்கிறது. மலைகள் தரைமட்டமாக்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளும் மேம்பாலங்களும் உருவாக்கப்படுகிறது. குளங்கள் பேருந்து நிலையங்களாகிறது. ஆறுகள் சாலைகளாகவும் கனிம வளங்களைத் தோண்டியெடுக்கிற நிலமாகவும் மாறியிருக்கிறது. காதலர்களின் வாய்க்கால்களும் குரங்குக் குதிர்களும் இல்லை. கடல்வளங்களுக்காகவும் மீன்களுக்காகவும் சாகிறவர்கள் அதிகமாகிறார்கள். கடற்கரைகளுக்குக் காற்று வாங்க வருபவர்கள் குறைந்து வீட்டிலேயே உடற்பயிற்சிக்கூடங்களிலும் நடைபயிற்சி இயந்திரங்களுடன் வாழப்பழகிக் கொள்கிறார்கள். இளையோர் சமூகம் கிழட்டுத்தன்மையையும் கிழடுதட்டிய சாகப்பிரியப்படாமல் இந்தச் சமூகத்தை மேன் மேலும் என் தலைமுறையோடு இந்த மண்ணும் அழியட்டும் என நினைக்கிற கிழடு தட்டிய தத்துவங்க ளை வைத்துக் கொண்டு திரிகிற நிறுவனத் தலைமைகள். இதற்கிடையில் உண்மையையும் அறத்தையும் ஏதோ தன் சொத்து என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டு திரிகிற தீவிர இலக்கியப் பிரதியாளர்கள். பதிப்பாளர்கள். நூலாசிரியர்கள். மயிரளவு சுருங்கிப் போன உடையைப் போலவே கருத்துப் போன இன உணர்வாளர்கள். இன உணர்வாளர்களின் கருப்புக்கவிதைகள். எல்லாவற்றையும் விற்று டாலராக்க முனைகிற நிறுவனங்களும் அரசுகளும். ஒரு களையைப் பிடுங்கினால் ஓராயிரம் களைகள் முளைக்கிற சமூகம். தொண்ணூறு சதமான மரமண்டைகளும் பாதி வெந்த அரைவேக்காட்டு மக்கள்.
       இந்த மக்களுக்காக எழுதுகிற படைப்பாளர்கள். இந்த மக்களின் உய்வுக்குப் பாடுபடுகிற சிந்தனையாளர்கள். ரத்த அணுக்களில் கலந்து விட்ட சமூகப் பொறுப்புணர்வை புற்றுக்கட்டியாக அகற்றுகிற வடிவில் ஒவ்வொரு கவிதையையும் எழுதுகிற கவிஞன். எப்படியும் விடியும் விடிந்து விடும் என்று நம்பிக்கையோடு இயற்கையுடன் உரையாடி உரையாடி தனக்கு இணக்கமான சிந்தனையுள்ள நண்பர்களுடன் உரையாடி இலக்கியம் எழுதுகிற படைப்பாளர்கள் சோர்வடையாமல் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கலப்பட வியாபாரியும் கஞ்சா விற்பவனும் ரேசன் அரிசியையும் டீசலையும் அடிமாடுகளையும் கடத்துகிறவர்கள் இந்த உலகில் தைரியமாகவே வாழ்கிறபோது படைப்பாளர்கள் வாழ முடியாதா என்ன. கவிஞனும் கவிதையும் வாழாதா என்று மொழியின் துணிவுடன் எழுதுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
         ந.பெரியசாமியும் தன் கவிதைகளின் வழியாக அப்படித்தான் துணிவுமிக்க சொற்களுக்குச் சொந்தக்கார மனுசராகத் தெரிகிறார். கடந்த இரண்டு தொகுப்பிலிருந்து சற்று வேறுபடுகிறார். காட்சிகளை விவரிக்கிற பொழுதும் அனுபவங்களைப் பேசும் பொழுதும் அவருடைய உணர்விற்கு நம்மையும் ஆட்படச் செய்கிறார். இந்தத் தொகுப்பில் அல்லாத அவர் எழுதுகிற முகநூல் மற்றும் சிற்றிதழ் கவிதைகளிலும் தனித்த இயல்பை அவர் தொடர்ந்து கவனப்படுத்தப்படுபவராகவே உள்ளார். அறம், அரசியல்,நிலம், வளம், மனித உணர்வின் அதீத வெளிப்பாடுகளும் காலமும் தொடர்ந்து பின்பற்றுகிற கவிஞராக உள்ளார். கவிதையின் அமைப்பியலை நேசிப்பவராகவும் அறியப்படுகிறார்.
         உணர்வின் வெளிப்பாடுகளாக மட்டும் கவிதைகள் அறியப்படுவதில்லை. கவிதைக்கே உரிய இயல்புகளும் கவித்துவமும் நல்லியல்புகளும் மிகவும் முக்கியம் என்பதை சங்கப்பாடல்களின் தன்மை நமக்கு உணர்த்துகிறது. ஒரு செய்யுளில் கம்பன் கவிதைக்குரிய அமைப்பை தெளிவு படுத்திவிடுகிறார்
புவியினுக் கணியாய் ஆன்ற
  பொருள் தந்து புலத்திற்றாகி
அவியகத் துறைகள் தாங்கி
  ஐந்திணை நெறிய ளாவிச்
சவியுறத் தெளிந்து தண்ணென்
  றெழுக்கமும் தழுவிச்  சான்றோர்
கவியெனக் கிடந்த கோதா
  வரியினை வீரர் கண்டார்
        செய்யுட் வடிவமும் யாப்பும் அணியிலக்கணங்க ளுடன் சமூக வரைவிலக்கணங்களை எழுதினார்கள் புலவர்கள். பெரும் நிலவியல் சமூகங்களை ஒழுங்கு செய்தார்கள். நீதி இலக்கிய வகைமைகள் என்றே ஒரு மாபெரும் இலக்கியவடிவம் சமூகத்தை மேம்படுத்தியது போர்கள் மலிந்த காலத்தில் நீதியிலக்கியங்கள் நிலங்களின் தன்மையைப் பேசியது.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான்
             என்று வள்ளுவரும் நீதியைப் போற்றினார். ந.பெரியசாமி உள்ளிட்ட நவீன காலத்தின் கவிஞர்களும் கவிதைகளும் நீதியையும் அறத்தையும் எழுதி வருகிறார்கள். அறம் நீதி தர்மநிலை குறித்தெல்லாம் இப்பொழுது யார்யார் எழுதுகிறார்கள். யார் கோட்பாடுகளை எழுதுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். இலக்கியவாதிகள் சில காரியங்களைச் செய்யாமல் விடுகிறபொழுது அந்தக் காரியங்களை சுயநலக்காரியக்காரர்கள் செய்யத்துவங்கிடுவார்கள்.
          பதினேழாம் நூற்றாண்டுகள் வரையில் இந்த மனிதசமூகத்தின் அரசுகள் பேரரசுகள் எல்லாம் இலக்கிய வாதிகளின் படைப்பாளர்களின் கைகளில்தான் இருந்தது. மொழியைத் தன் ஆதிக்கத்தில் வைத்திருந்த படைப்பாளர்கள் தன் சொல்லுக்குக் கட்டுப்படுகிறளவு மன்னர்களையும் கீழ்ப்படியவைத்தார்கள். நாலடியாரின் ஒரு பாடல்
“அறுசுவை யுண்டி அமர்ந்தில்லான் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாகும்-வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன்று
உண்டாக வைக்கற்பாற்று அன்று.“
செல்வத்தையும் போகத்தையும் பொருட்படுத்தவேண் டாமென்று போதிக்கிற நீதி இலக்கியம் இது. பெருஞ்செல்வத்தைக் குறிவைத்து மொழியைப் பயண்படுத்திக் கொள்கிற காலத்தில் ந.பெரியசாமி உள்ளிட்ட கவிஞர்களின் கவிதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. நீதியும் அறமும் பேசுவதால்தான் கவிதை நூல்களை அங்காடிகள் புறக்கணிக்கிறது. வாசகர்கள் புறக்கணிப்பதில்லை.
இருளும் ஒளியும்
மரம்
தன் நிழலைக் கிடத்தி
இரண்டாகக் கிழித்தது என்னை
அம்மனச் சிறுவனாகி
மிதந்தலைந்தேன் குளத்தில்
அருகிலிருக்கும் நந்தவனத்தில்
எச்சிலாக்கினேன் புளியமரம் ஒன்றை
தோழிகளுக்குப் பூக்களைக் கொய்தேன்
காம்புகளில் மீந்த தேன் சுவைத்தேன்
மயக்கத்தில் புரண்டேன்
வெய்யில் சுட்டது
கூலிச்சீருடை அணிந்து
பிழைப்புக்குத் தயாரானேன்
சுருங்கியது மரநிழல்- பக் 39
             ந.பெரியசாமியின் கவிதை பற்பல சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது. வாழ்க்கை என்பதும் இயற்கையென்பதும் வேறுவேறு அல்ல. மில்லினார் கோடினார் உயிர்களில் மனிதனின் இருப்பு மயிரளவு கூட கிடையாது. மயிர் அணியும் செங்கோல்களின் அலப்பரை தாங்கமுடிவ தில்லை. அறம் பேசுகிறவன் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. தர்மநீதிகள் போதிக்கிறவன் நீதி கூறுபவன் நீதியைப் பின்பற்றவேண்டிய அவசியம் இல்லையென்பதை இந்த நூற்றாண்டில்தான் மனிதன் கண்டுபிடித்திருக்கிறான். ஒரு மனிதனின் நல்ல ஆடையும் நல்ல முகச்சவரமும் உடல் ஒழுங்கும் ஒருவனுக்கு அருவருப்பைத் தந்துவிடுகிறது. ஒருவனின் நீதிமான் கடவுள் ஒருவனுக்கு அருவருப்பான கடவுள்.
         அவனுடைய குழந்தைகள் சாத்தான்கள். அவற்றை ஈவு இறக்கமற்றுக் கொலைகள் கூட செய்யலாம். யாரும் கேட்கமாட்டார்கள். புதைகுழியில் பொக்லைன்களால் வழித்துக் கொண்டுபோய்க் கொண்டு மண்கொண்டு மூடலாம் அல்லது ஒரு சேர தீவைத்துக் கொளுத்தலாம் யாரும் கேட்கமாட்டார்கள். ஒரு கவிஞன் தன் கவிதையில் எழுதினால் அதில் கலையம்சம் இல்லையென்பான் ஒரு நாதாரி. அந்த நாய்க்கு குளுருட்டப்பட்ட அறையும் சிக்கனும் வறுவலும் ஆம்லெட்டும் சீமைச்சாராயமும் வழங்கவேண்டும். அவன் போதிக்கிற கவிதை முறையை அழகியலை,அறத்தை, விற்பனையைக் கொண்டு போய்ச் சொல்வது என்பதை அவன் சொல்வான். இவனைப் போன்ற விலைவிமர்சகர்களுக்கும்  விலைகவிஞர்களுக்கு மத்தியில் நல்ல கவிதையை எப்படி நிரூபிப்பது. இவர்களைப் போன்ற சொம்புதேர் வாழ்க்கை வாழ்கிற சொருபிகளுக்கு மத்தியில் ஒரு நேர்மையான கவிஞனை எப்படி நிறுவுவது..
நீதியும் அறமும் பேசாத சொற்களில் சொகுசு கொண்ட சொற்கள் மிகவிரைவில் பல்லக்கு ஏறிவிடும். அந்தப் பல்லக்கை மூத்த படைப்பாளர்கள் சிலரும் வாக்கு வங்கியைக் கணக்கில் கொண்டு ஆதரிப்பவர்களும் சொகுசு, பவிசு சொற்களைத் தூக்கிப் போற்றித் திரிவார்கள். அதறக்கு அரங்கேற்றங்களும் கும்பாபி சேகங்களும் பாலாபிசேகங்களும் நடக்கும் வாய்ப்பும் உள்ளது. அதே போலவே புழுதிவாரித்தூற்றுதல்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு படைப்பு எதிர்கொள்ளப்படுகிற நிலையைக் கூட இன்னும் நம்மால் ஒழுங்கு செய்யமுடியாமல்தான் இருக்கிறோம். இங்கு நாம் புகழ்பெற்ற அரவிந்தரின் கவிதையொன்று வாசிக்கலாம்.
Rose, I have loved
Rose, I have loved thy beauty, as l love
The dress that thou worn, the transient grass,
O’er which thy happy careless footsteps move,
The yet-thrilled waysides that have watched thee pass.
Soul, I have loved thy sweetness as men love
The necessary air they crave to breathe.
The sunlight lavished from the skies above,
And firmness of the earth their steps beneath.
But were that beauty all, my love might cease
Like love of weaker spirits; weren’t thy charm
And grace of soul, mine might with age decrease
Or find in death a silence and a term,
But rooted to the unnameable in thee
Shall triumph and transcend eternity.
 நம் அறிந்த கவிதையின் நாயகனாகவும் அறத்தின் போதனையாளராகவும் விளங்கிய அரவிந்தரின் ஆசிரமத்தின் மீது தற்காலத்தில் கூறப்படுகிற விமர்சனங்கள். அங்கு நடந்து வருகிற சம்பவங்கள் காட்சிகள் பத்திரிக்கை விமர்சனங்கள், தற்கொலைகள் பாலியல் சம்பவங்கள் நமக்கு அதிர்ச்சி தருகிறது. உலகின் மகத்தான மனிதர்களுக்கு தொடர்ந்து அவர்களின் சாவுக்குப்பின்னால் நடக்கிற கொடுரங்கள் அச்சமூட்டுகிறது. புனிதத்தைச் சிதைப்பதும் ஒரு தலைமுறையின் மகத்தான சிந்தனையை புகழை வாய்ப்புக் கிடைக்கிற சமயத்தில் சிதைப்பது கூட தற்காலத்தில் நடந்துவருகிறது. இங்கு மடங்களின் மீதும் நிறுவனங்களின் மீதும் காட்டப்படுகிற கருணைகள் கேள்விகளாகிறது. இங்கு அரவிந்தரின் புகழும் மகத்தான கவிதைகளும் நம் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கம் கேள்விக்குள்ளாகிறது. மொழியிலும் கவிதையிலும் தனிமனித பிம்பங்களின் மீது உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் புகழ் பணம் பொருள் சம்பாத்தியம் எல்லாம் அச்சத்தைத் தரவல்லதாக மாறியிருக்கிறது. புகழ்பெற்ற பிம்பத்தின் பெயரால் ஏற்படுத்தப்படுகிற ஒழுங்குகள் நம் காலத்தில் தகர்க்கப்படுகிறது.
       இப்படித்தான் காந்திய நெறியும் சர்வோதய நெறியும் கிராமப்புற மேம்பாடுகளும் கைவினை பொருட்களும் கதர் உடைகளும் அழிக்கப்பட்ட வரலாறுகள். ஐம்பதாண்டுகளுக்குள்ளாக ஒரு கவிதையும் கவிதையியக்கம் காலாவதியாகிப் போவதை திராவிடம் சார்ந்த மதிப்பீடுகளையும் உள்ளடக்கலாம்.
காந்தி குறித்த கவிதை பெரியசாமி எழுதியிருப்பது அற்புதமான குறிப்பான். காந்திய நெறிகளை கொள்கைகளை அழிப்பது உள்ளிட்ட வேலைகளைக் காங்கிரஸ் கட்சிக்காரர்களே அழித்தார்கள் அல்லவா அப்படித்தான். ஒரு வகையில் எம்ஜியார் புகழை அழிக்க அந்தக் கட்சிக்காரர்களே முனைகிறார்கள் அல்லவா அப்படித்தான். சில ஆளுமைகளின் புகழை அழித்து ஒழிக்கும் பட்சத்தில் தன் புகழை நிலைநாட்ட முடியும் என்பதை இந்த நவீன நூற்றாண்டு நமக்குக் கற்றுத் தருகிறது. அப்படியாக மூத்த நவீன கவிஞர்களின் புகழையும் சொற்களையும் அவர்களின் கவிதைப் படிமங்களையும் அழித்து வருகிறார்கள். குறிப்பாக அவருடைய சீடர்கள் என்று தங்களை அறிவித்துக் கொள்கிறவர்களே அந்தப்பணியைத் தைரியமாகச் செய்கிறார்கள்.
காந்தி..,
சிறு தொலைவிற்குப் பின்
தோட்டம் ஒன்றில்
வட்டமாக
“இளைஞர்கள்
என்ன செய்கிறார்கள்“

“வேண்டாம் போகலாம்“ என்றேன்
அவரின் பார்வைக்கு
பொய்யுரைக்க மறந்து..
“மது அருந்துகிறார்கள்“- என்றேன்
ஹேராமெனத் தலையிலடித்து
“அரசு என்ன செய்கிறது“
பார்வையைக் கேள்வியாக்கினார்
சிரிப்பைக் கட்டுப்படுத்த இயலாது
கடை நடத்துவதே அரசென்றேன்
ஐயோவென மயங்கிச்சரிந்தார்.... பக்-40

மேம்போக்காக வாசித்தால் சாதாரணமான கவிதையாகத் தெரிந்தாலும் உண்மையை கவிதை பேசுகிற பொழுது சாதாண நடையும் எளிமையான கவிமொழியும் அவசியம் என்று தோன்றுகிறது. கவிதைகளுக்குள்ளாக கருத்துகள் போதிப்பது கவிதையின் அமைப்பியலுக்கு ஒவ்வாமை யாகப் பட்டாலும் சமூகத்தின் பெரும் அவலத்தை கவிஞனாக குறிப்பிடவும் வேண்டியிருக்கிறது. மேற்கண்ட கவிதை மிக நீண்ட கவிதையிலிருந்து சிலவரிகள் மட்டுமே. மதுபானம் விற்ற பணத்தில்தான் இலவசங்கள் வழங்கப்படுகிறது என்கிற உண்மையையும் கவிஞர் சேர்த்திருக்கலாம்.
           ந.பெரியசாமியின் கவிதைகள் அப்பழுக்கற்ற நிலத்தைப் பேசுகிறது. கள்ளம் கபடம் ஏதுமறியாத மனிதனின் நுட்பமான கற்பனைப் புனைவுகளையும் பேசுகிறது. கவிதை ஒருதலைப்பட்சமான இலக்கிய வடிவமல்ல. சாதமான அம்சங்களை மட்டுமே பேசுகிறவையும் அல்ல. இயற்கை முரண்களையும் வாழ்வியல் நெறிகளையும் பேசிவருகிறது. ஒரு கவிதை எழுதப்பட்ட பிறகு இது கவிதைதானா என்கிற குழப்பம் தேவையற்றது. ந.பெரியசாமியின் பல கவிதைகள் நவீன கவிதைகளின் கட்டமைப்பிலும் எழுதப்பட்டிருக்கிறது. தொகுப்பில் பல கவிதைகள் அபாரமான சொல்லாட்சியில் எழுதப்பட்டிருக்கிறது. வாழ்த்துகளும் அன்பும்...
வெளியீடு
தோட்டாக்கள் பாயும் வெளி
ந.பெரியசாமி-கவிதைகள்-94876 46819
Na.periyasamy@gmail.com
புது எழுத்து
2-205 அண்ணா நகர்
காவேரிப்பட்டினம்.-635 112
கிருஷ்ணகிரி மாவட்டம்
90421 58667

Tuesday, December 23, 2014

சாறற்ற சோள தக்கைகள்...

சாறற்ற சோள தக்கைகள்...
ந. பெரியசாமி

எறும்புகள் நொறுங்கிய அரிசிகளை சுமந்தவாறு அங்குமிங்குமாக ஊர்ந்துகொண்டிருந்தன. அதிசயமாக எவ்வித தீங்கும் கொடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன் எனை பார்க்க எங்கப்பா போகுது என்றான். அதன் புற்றுக்கு என்றேன். புற்றுனா? வினாவினான். அதன் வீட்டிற்கு என்றேன். நாம கடையில சிநாக்ஸ் வாங்கி வந்து வீட்டில் தின்பதுபோன்றா என்றான். இது அப்படி அல்ல உணவு கிடைக்காத காலங்களில் பசியாற சேமிப்பதற்கு கொண்டு செல்கிறதென்றேன். சேமிப்பு என்றால்.... அவனும் நானும் தொடர்ந்த உரையாடல் நினைவுக்கு வந்தது வெ.வெங்கடாசலத்தின் திமிர் கவிதைத் தொகுப்பை வாசித்து முடிக்க.

எல்லோருக்கும் 'சேமிப்பு' என்பது எதிர்காலத்தின் தேவையை பூர்த்திகொள்வதற்காக இருக்க. தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஒரு இனத்திற்கு சேமிப்பு என்பது அழிக்கப்படவேண்டியதாக இருக்கிறது. 'எனது நாட்குறிப்பு' எனும் கவிதையில் இதை உணர முடிகிறது. காலகாலமாக இடமற்றவர்களாக மாற்றி, கற்பழிப்புகளை நடத்தி, உழைப்பைச் சுரண்டி, சொத்துக்களை பறிமுதல் செய்து, மலத்தின் நாற்றத்தோடு இருக்கச் செய்து, மலத்தை தின்னச் செய்து, கொத்துக் கொத்தாய் உயிரைப் பறித்து, செருப்புப்போட அனுமதி மறுத்து, துண்டுகளை தோல் ஏற்ற மறுத்து, குடிக்க நீர் கொடுக்காதிருந்து, கல்வியற்றவர்களாக மாற்றி, கையேந்தி நிற்கச் செய்து, வன்புணர்ச்சி செய்தல் என எமாற்றத்தின் வலி அவமானத்தின் வலி என வலிகளையும் அவமானங்களையும் சேர்ந்து வைத்திருப்பதைக் காணச் சகிக்காது திமிரி எழுந்து கல்விகற்று கேள்வி கேட்டு மானமும் ரோசமும் எனக்கு உண்டென  அதிர அதிர ஒலிக்கும் பறையாக இத்தொகுப்பைப் பார்க்க முடிகிறது.

உடல்நீர் வற்றி உலர்ந்து
விலா எலும்புகள் துருத்தி நிற்கும்
அந்த கறுத்தமேனி முதியவரை
டேய் என்று அதட்டியது ஒரு சிறுவன் குரல்
அந்த அதட்டலுக்கு வயது ஈராயிரமாண்டுகள்
அந்த அதட்டலை
திரும்பி முறைத்தது ஒரு பார்வை
அந்தப் பார்வைக்கு வயது கால் நூற்றாண்டு
அந்த அதட்டல்
அந்த முறைப்புமுன் முதன்முறையாக பம்மியபோது
அம்முதியவர் கண்களில் விரிந்தது புலரி.
என முடியும் திமிர் கவிதையில் இதற்கான கூறுகளை பார்க்க முடிகிறது.

விசையோடு எழுந்து கல்வி கற்று  பெரும் உழைப்பைச் செலுத்தி முன்னேற்றம் கொண்டிருப்பதை காணச் சகிக்காது கிடைக்கும் காரணங்களை புள்ளியாக்கி அழிவின் வட்டங்களை வரைந்தபடி இருக்கும் ஆதிக்க திமிரின் நீளும் பட்டியலில் என்றென்றும் நினைவிலிருக்கும் இளவரசன் திவ்யாவின் காதலை பகடையாக்கி மூன்று கிராமங்களை காவுகொண்ட கயமையை இவ்வுலகம் மறவாது. அக்கிராமங்களை நேரில் சென்று பார்க்கையில் அழிவின் துயர்களை பேசிய அப்பகுதி மக்களின் வலியை தாங்காது திரண்ட நீர்கள் எற்பட்ட கோபத்தால் உடலுறிய வெப்பத்தால் ஆவியாக்கிட நீரற்ற வெறித்த விழிகளோடு பார்த்து திரும்பிய நாட்களை நினைவூட்டின கவிதைகள். பயம் எனும் சொல்லை விதைக்க இளவரசனை பலியிட்டு வலம் வரும் காட்சியை வேடிக்கைப் பார்த்தபடி இருக்கும் வாழ்வை ஏளனமாக பார்க்கின்றன கவிதைகள்.

தொகுப்பில் நிறைய்ய கவிதைகள் எள்ளலோடு எழுதப்பட்டிருக்கிறது. அதிகாரத்திற்கு எதிரான கோபத்தின் மிக வலிமையான வடிவம் எள்ளல்கள்தான் என்பது மேலும் நிரூபனமாகியது.

துயரமும், வலியும் நிறைந்த வாழ்விலிருக்கும் அழகியலையும் அவ்வப்போது காட்சிபடுத்தும் கவிதைகள் வாசிப்பில் ஆசுவாசப்படுத்துகின்றன. 'தாத்தா கோவணம்' கவிதை தெரிந்த தாத்தாக்களையெல்லாம் கண் நிறைத்தது. அவர்களின் உருவமே அழகிய ஓவியம். பார்த்து ரசிக்கவும், வாழ்வை படிக்கவுமாக நடமாடும் சிற்பங்கள் தாத்தாக்கள் என்பதை கவிதையில் காட்சியாக்கியுள்ளார் வெங்கடாசலம்.

வளர்ந்துகொண்டே இருக்கும் நகரில் நம்மின் இழப்பை இவரும் தன் பார்வையில்பட்டியலிட்டுள்ளார். நமக்கான பட்டியலாகவும் அது  இருப்பதோடு துயரின் வடிகாலாகவும் இருக்கிறது.

எனக்காக நீ எதுவும் பேச வழியற்று இருக்க பெய்யும் கருணை மழையால் சாரு வத்திப்போன சோளத்தக்கையை மேலும் பொடிந்துபோகச் செய்யுமே ஒழிய துளிர்ப்புக்கு வழிவகுக்காது எனும் எள்ளல் நிழலாய் தொடர்கிறது.

எதுவுமற்றவன் எதை இழந்து எதைப் பெறுவது எனும் கேள்விக்கு இச் சமூகம் என்ன பதில் வைத்திருக்கிறது? தள்ளி உட்காரும் நீதியில்தான் 'இடம்' கிடைக்கும் என்பது காலத்தின் உண்மை.

கருப்பனும் சடையனும் புரண்டெழுந்து கருப்புச் சூரியனாக வலம் வந்து அவமானங்களை அழித்து பரிணாமம் கொள்ள வேண்டிய வாழ்வின் இலக்கு வெகு தூரத்தில் இல்லையெனும் இவரின் நம்பிக்கை நமக்கும் பற்றிக்கொள்கிறது.

வெளியீடு
மருதம், பெரியகாப்பன்குளம், நெய்வேலி-607802
விலை-ரூ.40

nantri:malaigal.com

Saturday, December 13, 2014

nantri:karikalan

கவிஞர் ந.பெரியசாமியின் மூன்றாவது தொகுப்பு தோட்டாக்கள் பாயும் வெளி வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இது இவரது மூன்றாவது தொகுப்பு.இவர் இடதுசாரி பண்பாட்டமைப்பான தமுஎகச மூலமும் விசை இதழ் மூலமாகவும் செயல்பட்டு வருவது மகிழ்வையும் நம்பிக்கையையும் தருகிறது.

இன்று கவிதை சிக்கலற்ற எளியநடைக்கு வந்துவிட்டது.இதன் பின்னால் நிகழ்ந்திருக்கும் அரசியல் மாற்றமே இதற்கு காரணம். நம் சமூகத்தின் பன்மைத் தன்மை இலக்கிய வெளியிலும் அதன் பிரதிநிதித்துவத்தை கைப்பற்றியிருப்பதை நாம் அவதானிக்கலாம்..இதன் காரணமாகவே எளிய மனிதர்கள் எளிய எழுத்துக்கள் .
எளிமையே இலக்கியத்திலும் அழகு.

தோட்டாக்கள் பாயும் வெளி இத் தலைப்பும் கவிதையும் நாம் வாழ நேர்ந்த இவ்வுலகை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது.ஒரு இடத்தில் மனிதன் பிரவேசிக்கத் தொடங்கியதும் அவ்விடத்தில் நிலவிய அமைதி சமத்துவம் சுதந்திரம் விலகி சுயநலம்,அமைதியின்மை,அதிகாரம்,வன்முறை போன்ற எதிர்மறை விஷயங்கள் பரவிவடும் நிலையை சிறிய இக்கவிதை துல்லியமாகக் காட்டிச் செல்கிறது.

கவிதை எழுதுவதென்பது ஒருவித பணபாட்டு அசைவு.நமது இறுகிய மதிப்பீடுகளில் கலையின் வழியாக ஒரு உடைப்பை நிகழ்தும் முயற்சி.சாதி மத இன வெறியற்ற போரற்ற அன்பும் இணக்கமும் நிறைந்த உலகை கனவு காணும் ஒரு விழைவு.பெரியசாமிக்கும் இப்படி பறந்து பட்ட கனவுகளிருப்பதை இவரது கவிதைகள் வழி அறியமுடிகிறது.இது கனவாகத் தேங்கிவிடப் போவதில்லை.ஏனென்றால் வாசிப்பவர்களின் மனங்களில் இக் கவிதைகள் எழுப்பும் கேள்விகள் ஆழ்ந்த விளைவுகளைத் தோற்றுவிக்கும் ஆற்றல் படைத்தவை..

இன்று காந்தியே வந்தாலும் பாக்கெட் பாலையே தருகிற அளவில்தான் நமது சுதேசித் தன்மை இருக்கிறது என்கிறார் ஒரு கவிதையில்.பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் அழிந்த நம் விவசாயம்,இயற்கை,சிறுதொழில்,விழுமியங்கள் என விரிவாக சிந்திக்கம் வாய்ப்பை இக்கவிதை நமக்கு வழங்குகிறது.

குடும்ப உறவுகள்,அழியும் இயற்கை வளம்,பண்பாடு சார்ந்த நுண் அரசியல் என தொட்டுத் தழுவிச் செல்கிறது பெரியசாமியின் கவிதைகள்.

பெரியசாமிக்கு வாழ்த்துககள்.கவிதை ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நல்ல தொகுப்பு தோட்டாக்கள் பாயும் வெளி.

nantri:karikalan

Sunday, December 7, 2014

கரகோசம் எழுப்புங்கள்
வானவேடிக்கை நிகழ்த்தி
பட்டாசுகளை கொளுத்தி போடுங்கள்
சூழல் குறித்து
சாவகாசமாக கவலைகொள்ளலாம்
ஆங்காங்கே கும்பல் கூடி
விசில் அடித்து ஆர்ப்பரியுங்கள்
அவரவர்களுக்கும் தெரிந்த கலைகளில்
கொண்டுவாருங்கள் கொண்டாட்டங்களை
அரசுகளின் புதிய திட்டங்களை
கேள்வியற்று இப்படித்தான் வரவேற்கவேண்டும்

இல்லையேல் உங்களுக்கு
நல்புத்தி புகட்ட வேண்டி
பக்தி பாடல்களோடு பஜனை நடத்துவார்கள்...

Monday, December 1, 2014

nantri: Lakshmi Manivannan

தோட்டாக்கள் பாயும் வெளி
-------------------------------------------
ந .பெரியசாமி கவிதைகள்

வெளியீடு :
புது எழுத்து
2/205 ,அண்ணாநகர் ,காவேரிப் பட்டினம் -635112
கிருஷ்ணகிரி மாவட்டம்

பக்கம் ; 68 விலை ;ரூ 70

"ஆசை கொண்டு வாங்கிய மூன்று சக்கர சைக்கிளை வீட்டினுள் விருப்பம்போல ஓட்டித் திரிந்தேன் . வளர்ச்சி கொள்ள சற்றே பெரிய சைக்கிள் .தள்ளிப் பழகி சிறுசிறு காயங்களுடன் பெடல் அடித்துக் கொண்டிருந்தேன் .விடாபிடியாக அதனோடு பிரியம் கொள்ள நண்பர்களின் ஆலோசனையோடு தொடர்ந்தேன் .அதன் நுணுக்கங்கள் பிடிபட வீதியில் நானும் எல்லோரோடும் ஓட்டினேன் "
முன்னுரையில் பெரியசாமி கூறும் வார்த்தைகள் இவை .இத்தொகுப்புக்குப் பொருத்தமான வார்த்தைகளும் கூட .

மிதமிஞ்சிய சரளம்தான் தற்போதைய தமிழ்க் கவிதை எதிர்கொள்ளும் அவலம் .மற்றபடி பொதுச் சரடை நேர்மையுடன் எதிர்கொள்ளும் கவிதைகளால் நிரம்பி இருக்கின்றன பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளி .போலியான .பாசாங்குகள் அற்ற,தனது உலகம் பற்றி மிகையான பற்றுதல்கள் அற்ற கவிதைகளை இத்தொகுப்பில் பெரியசாமி எழுதிச் செல்கிறார் .இது இப்போது காண்பதற்கரிய பண்பு .எனினும் கவிதை சொல்லல் முறையில் தென்படும் அலுப்பு குறைபாடுதான் . ஒரேவகையான வாக்கிய அமைப்புகள் இதற்குக் காரணம் .லௌகீகத்திலிருந்து வெளிப்படும் இவரது கவிதைகள் முடக்கு வாதம் வந்தவற்றைப்போல உள்ளன .சில கவிதைகளைப் படித்து முடித்ததும் ஏதோ ஒரு குறைபாடு இருக்கிறது எனும் எண்ணத்தை மனதில் ஏற்றுகிறது அக்டோபர் முதல் நாளில் , நிறம் மாறும் தேவதை, எழுத மறந்த பக்கங்களில் ஆகிய கவிதைகள் இதற்கு உதாரணங்கள் .

தோட்டாக்கள் பாயும் வெளி , நட்சத்திரத்தை அறையுள் அடைத்தவள்,சங்கடை அமுது ,பாம்புகள் பாம்புகளாயின,வண்ணக்கிளி ,வேர்கள் வான்நோக்கி வளர்ந்தன ,மழை,உயிர்ப்பு ,நித்திரையை உருட்டும் பூனை ,எனது கடல் ,ஓணான் உருவாக்கிய பகை ,அணிலோடு மழை என பல கவிதைகள் சிறப்பானவை .

இத்தொகுப்பில் "நிலையானது " என்கிற கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது .

கவிதை ஆகச் சிறந்த ,எளிய கலை வெளிப்பாட்டு வடிவம் என்பதில் சந்தேகமே இல்லை .அது எழுதுகிறவனின் மன ஓட்டத்தையும் காட்டித் தந்து விடுகிறது .பெரியசாமி எனக்கு நல்ல நண்பர் . அவர் கவிதையை கண்டுபிடித்தலின் விஞ்ஞானமாக மாற்றித் தரவேண்டும் என்பது ஆசை .

நிலையானது

அந்தி வேளையில்
விளையாடிக் கொண்டிருந்தனர் சிறார்கள்
தன்னிடமிருந்த சாக்பீசால் ஒருவன்
நிறைய கட்டங்களை வரைந்தான்
சிறுமி ஒரு கட்டத்துள்
தாமரை வரைந்தாள்
மற்றவள் வேறொன்றில்
சூரிய காந்திப் பூ
அடுத்து வந்தவர்கள்
மாதுளை கொய்யா மாங்காவென
கட்டங்களை நிரப்பினர் .
திடுமென கோடுகள் மறைந்து
வரைந்தவற்றை கட்டங்கள்
உயிர்ப்பிக்கச் செய்தன .
தெருவில் மின்சாரம் பூக்கச் சிரித்து
அவர்களுக்கானதை எடுத்துக் கலைந்தனர் .
எனக்கானதை நிரப்ப கட்டங்களற்று
வெறிச்சோடிப் போனேன்

Thursday, November 27, 2014

பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. அருகில் அண்டியது பூனை. நீவிடத் துவங்கினேன். என் உடலின் வெப்பம் கைகளில் இறங்கியபடி இருக்க, சுகமாக அணைந்துகொண்டிருந்த பூனை விருட்டென ஓடத் துவங்கியது. சூழல் சலனத்தால் நினைவுகொள்ள மீண்டும் வாசித்தேன் 'குருதட்சணை' கவிதையை. குருவாகிறார் ஏகலைவன். சன்னமாக பேசத் துவங்கிய மொழி பெரும் கதகதப்பை ஏற்படுத்தியபடி இருக்கிறது.
பட்டாம்பூச்சிக்களுக்கு மலரை கொடுத்து, அலையடிக்கும் கடல் ரசித்து, நிழலோடு யுத்தம் செய்து, ஆழிலையின் பழுப்பு நிறத்திற்காக வருந்தி, பிரியத்தின் குருதியை கசிவித்து, நீரோவிற்கு நன்றியை தெரிவிக்கச் சொல்லி, கோப்பைகளில் வழியும் இரவொன்றில் உயிர்த்தெழும் புத்தனுக்காக காத்திருந்து, பூத்தலின் ரகசியம் பேசி சிவனாக மாறுபவனின் அசலான வாழ்வை பேசுகின்றன...
யாழியின்
மகா சிவராத்திரியும்
சில
தேநீர் கோப்பைகளும்...

Saturday, November 22, 2014

nantri: Nalla thambi

A poem by N. Periyasamy in Tamil. Translated to Kannada. Like this very much. Please see Tamil below
*ಬರೆಯಲು ಮರೆತ ಪುಟಗಳಲ್ಲಿ.....
ಪ್ರತಿ ದಿನ ಬರೆಯಲು ತೀರ್ಮಾನಿಸಿದೆ
ಹಾಲು ಬಿಳಿಯ ಹಾಳೆಗಳು ತುಂಬಿದ
ನೋಟ್ ಪುಸ್ತಕವ ಕೊಂಡು ತಂದೆ
ಒಂದೇ ಒಂದು ಚಿತ್ರ ಬಿಡಿಸುವೆ
ಆಸೆಯಿಂದ ಕೇಳಿದವನಿಗೆ ಇಲ್ಲ ಎನಲಿಲ್ಲ
ಮರ ಒಂದ ಬಿಡಿಸಿದ್ದ
ನಾಳೆಯಿಂದ ಬರೆಯುವ ಎಂದುಕೊಂಡೆ
ತುಂಬ ದಿನಗಳು ಕಳೆದುಹೋದವು.

ದಿಢೀರೆಂದು ನೆನಪು ಕಾಡಲು
ಬರೆಯಲು ನಿರ್ಧರಿಸಿ ಕೈಗೆತ್ತಿಕೊಂಡೆ
ಮೊದಲ ಪುಟದಲ್ಲಿದ್ದ ಮರ
ಮುಂದಿನ ಪುಟದಲ್ಲಿ ಚಿಗುರಿತ್ತು
ಪುಟ ತಿರುವಿದಾಗ ಅಲ್ಲಿ
ಕಾಗೆ ಗೂಡು ಕಟ್ಟಿತ್ತು
ಪುಟಗಳ ತಿರುವಿ ಹಾಕಿದಂತೆ
ಎಲೆಗಳು ಉದುರಿದ್ದವು
ಕಾಯಿಗಳೂ ಚದುರಿದ್ದವು
ಮರದ ನೆರಳಲ್ಲಿ ದಣಿವಾರಿಸಿಕೊಂಡವರು
ಹಣ್ಣುಗಳ ಆಯ್ದು ತಿಂದರು
ಉಗುಳಿದ್ದ ಬೀಜಗಳಲ್ಲಿ
ಕೆಲವು ಮೊಳಕೆ ಬಿಟ್ಟಿದ್ದವು
ಇಡೀ ವಿಶ್ವದಲಿ.
ತಮಿಳಿಲ್ಲಿ: ನ. ಪೆರಿಯಸಾಮಿ
ಕನ್ನಡದಲ್ಲಿ: K.ನಲ್ಲತಂಬಿ
*எழுத மறந்த பக்கங்கள்....
தினமும் எழுதத் தீர்மானித்தேன்
வெண்மை மிளிரும் தாள்கள் நிறைந்த
நோட்டு ஒன்றை வாங்கி வந்தேன்
ஒரே ஒரு படம் வரைஞ்சிக்கிறேன்
ஆசையாக கேட்டவனிடம் தந்தேன்
மரம் ஒன்றை வரைந்திருந்தான்
நாளையிலிருந்து துவங்கலாமென வைத்தேன்
நிறைய்ய கடந்தன நாட்கள்.
திடுமென நினைவு சுட
எழுதத் தீர்மானித்து எடுத்தேன்
முதல் பக்கத்தில் இருந்த மரம்
அடுத்த பக்கத்தில் துளிர்ந்திருந்தது
அடுத்தடுத்த பக்கங்களில்
காக்கை கூடு கட்டியிருந்தது
மேலும் பல பக்கங்களில்
இலைகள் உதிர்ந்து கிடக்க
காய்களும் இறைந்து கிடந்தன
மர நிழலில் அமர்ந்தவர்கள்
சேகரித்த பழங்களைத் தின்றனர்
துப்பிய கொட்டைகளில்
சிலது துளிர்தும் இருந்தன
பிரபஞ்சம் எங்கும்.

ந. பெரியசாமி

Wednesday, November 19, 2014

நன்றி- புத்தகம் பேசுது

ஆசை கொண்டு வாங்கிய மூன்று சக்கர சைக்கிளை வீட்டினுள் விருப்பம்போல் ஓடித் திரிந்தேன். வளர்ச்சி கொள்ள சற்றே பெரிய சைக்கிள். தள்ளிப் பழகி சிறுசிறு காயங்களுடன் பெடல் அடித்துக் கொண்டிருந்தேன். விடாப்பிடியாக அதனோடு பிரியம் கொள்ள நண்பர்களின் ஆலோசனைகளோடு தொடர்ந்தேன். அதன் நுணுக்கங்கள் பிடிபட வீதியில் நானும் எல்லோரோடும் ஓட்டினேன். இது என் கவிதைகளுக்கும் பொருந்தும்... என்று தன் தொகுப்பின் முன்னுரையில் எழுதும் ந.பெரியசாமி நதிச்சிறை, மதுவாகினி ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே கொடுத்தவர். தமிழ்ச்சூழலில் தொடர்ந்து இயங்கிவரும் ஒரு படைப்பாளி. புதுவிசை இதழின் குழுவில் அங்கம் வகிப்பவர்.

தனது மன அவசங்களையும், புறஉலகின் யதார்த்தங்களையும், சமூகத்தின் மீதான கோபதாபங்களையும், அடர்த்தியான கவிதை மொழியில் வெளிப்படுத்தும் இவர் குழந்தைமையின் அன்பிலும், கருணையிலும் மனம் நெகிழ்பவர். தோட்டாக்கள் பாயும் வெளி என்னும் இவருடைய மூன்றாவது தொகுப்பு நல்ல சில கவிதைகளை உள்ளடக்கிய பிரதி. இருளும் ஒளியும் என்ற தலைப்பிலான அவருடைய ஒரு கவிதையை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மரம்
தன் நிழலைக் கிடத்தி
இரண்டாகக் கிழித்தது என்னை.
அம்மணச் சிறுவனாகி
மிதந்தலைந்தேன் குளத்தில்
அருகிலிருக்கும் நந்தவனத்தில்
எச்சிலாக்கினேன் புளியமரம் ஒன்றை
தோழிகளுக்குப் பூக்களைக் கொய்தேன்
காம்புகளில் மீந்த தேன் சுவைத்தேன்
மயக்கத்தில் புரண்டேன்
வெய்யில் சுட்டது.
கூலிச் சீருடை அணிந்து
பிழைப்புக்குத் தயாரானேன்
சுருங்கியது மர நிழல்.

-சிகப்பு


Monday, November 3, 2014

என்றும் ஆறாதது பிரியத்தின் காபி

ஒன்றைப்பற்றி சரியான புரிதலற்றிருக்க
அது குறித்து பொதுவான கருத்துரைப்பது அறமாகாது...

சில சம்பவங்கள் நினைவில் இறப்பதில்லை. பல ஆண்டுகளுக்கு முன் நண்பர்களோடு சின்னசேலம் ரயில் பாதையின் அருகில் விளையாடிய களைப்பகற்ற ரயில் நிலையத்தின் உள்ளிருந்த மரத்தினடியில் அமர்ந்திருந்தோம். அருகிலிருந்த காத்திருப்பு பலகையில் அமர்ந்திருந்த மூன்று பெரியவர்கள் உரையாடலில் எங்கள் கவனம் குவிந்தது. இதுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கம் மானம் இருக்காதா? ரயில்வே ட்ரேக் ஓரத்தில் ஒதுங்கி நடக்கக்கூட வழியில்லாம அசிங்கம் செய்து வைக்குதுங்க. ஆம்பள வராங்களேன்னு கொஞ்சம்கூட மரியாத இல்லாம ஒட்காந்திருக்காளுங்கவென திட்டியபடி இருந்தார்கள். அவர்கள் வாயில் மூத்திரம் பெய்ய வேண்டுமென்ற ஆத்திரம் எழுந்தது. அவசரமாக வெளியே வரும் மலம் அறியுமா ஆம்பளையா பொம்பளையான்னு? அவங்களுக்கு மட்டும் என்ன ஆசையா இப்படி வெளியே வந்து மலம் கழிக்க. அப்பகுதியில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் கழிப்பறை கிடையாது.  வேறு என்னதான் செய்வார்கள். அரசின் பொதுக்கழிவறையும் அப்பகுதிக்கு கட்டித்தரவில்லை. அப்படியே கட்டினாலும் தண்ணீர் வராது. அவர்களோடு சேர்ந்து அரசிடம் கோரிக்கை வைக்கவோ போராடவோ ஒருநாளும் வரமாட்டார்கள். அதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட விசயமென்றால் போதும் கலாச்சாரம் கலங்கிப்போச்சு வெட்கம்போச்சு மானம் போச்சு என புலம்பித் திரிவார்கள். பெண்களின் வாழ்வும் வலியும் சார்ந்து எவ்வித அக்கறையும் புரிதலுமற்று ஒழுக்கம் சார்ந்து ஏதாவது கருத்து சொல்லிக்கொண்டிருப்பவர்களை பரிகாசப்படுத்துகிறது நறுமுகை தேவியின் 'சாத்தான்களின் அந்தப்புரம்'

மற்றவர்களால் உணர்ந்து கொள்ளப்பட இயலாத உணர்வும் அனுபவமும் நிறைந்த பெண்கள் மீது ஆண் சார்ந்த ஒடுக்குதலாலும் அதிகாரங்களாலும் உண்டாகும் வலியைக்கூறி எதிர்புணர்வையும் ஏற்படுத்துகின்றன பெரும்பாலான கவிதைகள்.

எதையாவது பற்றிக்கொண்டு வாழ அலைவுறாது தானே வேறொன்றுக்கு பற்றுதலாக இருக்கத் துடிக்கும் மனநிலையை வெளிப்படுத்துகின்றன கவிதைகள்.

நண்பர்களாக இருந்துகொண்டே வேற்று ஆடவர்களோடு இணைத்துப்பேசி நடைபாதையில் பள்ளம் பறித்தபடி இருக்கும் மலின யுத்தியால் மண்டை பெருத்து அலையும் கூட்டம் சகித்து, காதல் சார்ந்தோ காமம் சார்ந்தோ எழுதப்படும் கவிதைகளில் இருக்கும் பெண்ணை எழுதுபவரோடு சுருக்கிப் பார்த்து பரிகாசப்படுத்தும் கழுகுப்பார்வையை பொருட்படுத்தாது தொடர்ந்து இயங்குவார் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது தொகுப்பு.

ஏமாற்றம், விரக்தியால் உண்டாகும் வலி, நிறைவேறா தன் விருப்பம் ஏற்படுத்தும் வலி, இழப்பின் வலி, காதலை சுமக்கும் வலி, பிரிவின் வலி, மறதியின் வலி, அக்கறையின்மையின் வலி, தீரா காமத்தின் வலி, முத்தத்தின் வலி, மூத்திரத்தின்வலி, நிராகரிப்பின் வலி, தோற்றப்பிழையின் வலி, ஒடுக்கப்படுவதின் வலி, செய்திகள் உண்டாக்கும் வலி, உயிர்தெழாத தேவனின் வலியென தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் தகிக்கும் வலியோடு இருக்கின்றன.

தன்னை ஒப்புக்கொடுத்தல், குழந்தையின் கோபம், உயிர்த்தெழும் பிரியம், காத்திருப்பின் காதல், பிரிவின் காதல், சமாதானத்திற்குப் பதுங்கும் காதல், ஒற்றைச் சொல்லில் உலாவரச்செய்யும் காதல், செல்லக் கோபங்கள், அருந்தும் பிரியத்தின் காபி, சங்கப் பாடலில் தலைவியின் காத்திருப்பை நினைவூட்டல், கடந்த காலத்தை இன்றைய நினைவில் நிகழ்காலமாக்கல், மிதக்கும் குழந்தமையென பயணிக்கும் கவிதைகளில் ஆசுவாசம் கொள்ள முடிகிறது.

பழக பழக பாலும் புளிக்கும் என்பர். சிலரின் ஆளுமையில் வியந்து நெருக்கம் கொள்ள பூஞ்சை பூத்த அவர்களின் செயல்பாடுகளால் உடைபடும் அபிப்ராயங்கள் எல்லோருக்கும் நிகழ்வதுண்டு. 'பிம்பங்கள் உடைபடும் தருணம்' கவிதையும் அப்படியாததொன்றுதான்.

நீர் கரைத்துக்கொள்ளும். சக்கரை உப்பு என்ற பாகுபாடெல்லாம் அதற்கு கிடையாது. காதலும் அப்படித்தான் பாகுபாடற்றது. தான் இருந்தும் தன்னை இல்லாததுபோல் உணரச் செய்யும்  தன்மை காதலுக்குத்தான் உண்டு. 'திரும்பி ஓடும் கவிதை' நல்ல காட்சியைத் தந்தது.

மிதந்தலையும் பெருங்காமம், மாறத் துவங்கம் தன்னியல்பு, தலைமுறைகளின் சிந்தனைமாற்றம், தன்னை ஒப்புக்கொடுத்து மீட்கும் சிறு சிறு சந்தோசங்கள் என அனுபவங்களைத் தரும் கவிதைகளில் லகுவாக பயணிக்க முடிகிறது.

சிறு துளி உடலில் ஏற்படுத்தும் சில்லிடலில் நெகிழ்ந்து போகக் கூடியவர்கள் நாம். எப்பொழுதும் தளர்ந்த பாகு நிலையில்தான் நாமிருக்கிறோம். எதிர்பாராத கணத்தில் எதிர்பாராதவர்களிடமிருந்து கிடைக்கம் பரிசு நமை எப்படியெல்லாம் மகிழ்த்திருக்கும். அப்படியானதொரு பரிசை வாழ்நாள் முழுவதும் உடன் வைத்திருக்க ஆசைகொள்வோம். அதை பயன்படுத்த முடியாதபோதும். நம் வீடுகளிலும் இருக்கும் இப்படியானதொரு அன்பின் பரிசை நினைவூட்டியது தேவியின் 'உடை' கவிதை.

சமகால விளம்பரங்கள் குறித்த எரிச்சல், புனிதப்படுத்தப்படும் ஆணின் நிர்வானம் குறித்த ஏளனம், அரசின் மீதிருக்கும் தன் விமர்சனத்தை நய்யாண்டி மூலம் கடந்து செல்தலில் நமக்கான மனநிலையும் காட்சிபடுத்துகின்றன கவிதைகள்.

சிலருக்கு பிரியத்தைக் கூட  அன்பாய் வெளிக்காட்டத் தெரியாது. அப்படியானவர்களை 'அமுதவிஷம்' கவிதையில் தேனீக்களோடு ஒப்புமைப்படுத்தியிருப்பது சரியானதாக இருக்கிறது.

மற்றவர்களால் முழுமையாக அறிந்து கொள்ள இயலாத பெண்ணின் வாழ்வில் இருக்கும் உன்னதங்களைக் கூறும் கவிதை ஏதும் இத்தொகுப்பில் இல்லாதிருப்பது ஏமாற்றமே. கொஞ்சம் நிதானித்திருந்து சில கவிதைகளை தவிர்த்திருந்திருக்கலாம்.

கேரளாவில் கிராம வளர்ச்சி சார்ந்த திட்டக்குழுவின் தலைவராக இ.எம்.எஸ் அவர்கள் இருந்தபோது ஒரு கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் போடப்படும் விளக்கு உடனுக்குடன் உடைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. யார் உடைக்கிறார்கள் என்பதை மறைந்திருந்து கண்கானிக்க அப்பகுதி பெண்கள்தான் உடைக்கிறார்கள். ஏன் என விசாரிக்க அப்பகுதியில்தான் சிறுநீர், மலம் கழிக்க பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். விளக்கின் வெளிச்சம் அவர்களுக்கு சங்கடங்களை உண்டாக்குவதால் உடைக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்கின்றனர். இது தோழர் இ.எம்.எஸ் க்கு தெரியவர பெண்களுக்கு எது தேவை என்பதை அவர்கள் சார்பில் நாமே தீர்மானிப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? இனி ஊர் கூட்டங்களில் அவர்களையும் பங்கெடுக்கச் செய்து அவர்களின் ஆலோசனைப்படியும் செயல்பட வேண்டும் என்கிறார். இச்சம்பவத்தை கேள்விப்பட்டு நீண்ட நாளகியும் தேவியின் சாத்தான்களின் அந்தப்புரம் தொகுப்பை வாசித்து முடிக்கையில் இச்சம்பவம் நினைவிற்கு வந்தது சரியானதாகத்தான் இருக்கிறது.

சாத்தான்களின் அந்தப்புரம்
நறுமுகை தேவியின் கவிதைகள்
புது எழுத்து பதிப்பகம்

nantri:malaigal.com

Sunday, October 19, 2014

18-10-2014 தமிழ் இந்துவில் வந்த மதிப்புரையின் விரிவாக்கம்...

சொல்லப்படவேண்டிய நன்றிகள்...
-ந.பெரியசாமி


மகனுக்கு மடல் எனும் இப்புத்தகம் புதுக்கோட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் நா.ஜெயராமன் ஹாக்காங்கில்  படிக்கும் தன் மகன் ஜெயகுமாருக்கு எழுதிய நான்கு கடிதங்களும், ஜெயகுமார் எழுதிய ஒரு கடிதமென ஐந்து கடிதங்களைக் கொண்டது.

கடிதங்கள் புனைவற்று உண்மைகள் நிரம்பிக் கிடப்பவை. வாழ்வின் அடுக்குகளை உரித்துப் பார்க்க ஏதுவான களம். தந்தைக்கும் மகனுக்குமான குடும்ப கடிதமாக பார்க்க முடியாது ஒரு சமூகத்தின் பரிணாமத்திற்கான சாட்சியாகவும் இப்புத்தகம் இருக்கிறது.

உயர்கல்வி எனும் தலைப்பிட்ட நீண்ட கடிதத்தில் பெற்றோரும், பிள்ளைகளும் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கம் நன்றி குறித்த உரையாடல்கள், வாசிப்பவர்களையும் ஏற்றுக்கொள்ளச் செய்து சொல்லப்படவேண்டிய நன்றிகள் நமக்கும் இருக்கு என்பதை நினைவூட்டுகிறது. பொற்றோர்கள் பிள்ளைகளின் மீது வைக்கப்படவேண்டிய நம்பிக்கைகளையும் நமக்கு இக்கடிதம் உணர்த்துகிறது.

‘இந்த தேசத்தின் மீது எனக்கு எப்படி மரியாதை வரும்? இந்த தேசம் என்மீதும் என் மக்கள் மீதும் எண்ணற்ற அவமானங்களையும் இழிவுகளையும் சுமத்தியிருக்கின்றபோது இந்தியாவை என் தாய்நாடு என்று எப்படி கூறுவேன்?’ என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பகிரங்கமான குற்றச் சாட்டை நினைவூட்டி ஒருவரின் தகுதியும், திறமையும் பிறப்பு தீர்மானிப்பதில்லை என உணர்த்தி மகனின் பல் மருத்துவ படிப்பு குறித்து தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறியிருப்பது நம்பிக்கையூட்டும் செயலாக இருக்கிறது. இக் கடிதத் தொகுப்பில் நிறைய்ய இடங்களில் அம்பேத்கரின் கூற்றுகளை பயன்படுத்தி இருக்கிறார். தேவையான இடங்களில் தேவையான கூற்றாக இருப்பதால் கடிதத்தின் ஒரு அங்கமாகவே மாறியிருப்பது கவனிக்கத்தக்கது.

சாக்கடையான பெரும் கருத்தியல்களை வைத்துக்கொண்டிருக்கும் இந்தியா எப்படி புனிததேசமாகும் எனும் அவரின் கோபம் நமக்கமான கோபமாகவும் இருக்கிறது. ‘தீண்டத்தகாதவர்கள்’ எனும் கூற்றுக்குள் அடங்கியிருக்கும் அவமானங்கள் இழிவுகளை சமூகத்தில் நிகழ்ந்தேறிய சம்பவங்களை நினைவூட்டி கூறியிருக்கிறார். கூடவே அச்சமூகத்தில் வசதி வாய்ப்பு பெற்று முன்னேறியவர்கள் உயர் சாதியினரின் சடங்கு சம்பிரதாயங்களில் தன்னை ஒப்புக்கொடுத்து தன் சமூகத்தை இடத்தாலும் மனத்தாலும் விலகி நடக்கும் துரோகங்களையும் விமர்சிக்கிறார். நீந்த கற்றுக்கொள்வதற்கு பயன்பட்ட சுரக்குடுக்கையை கற்றபின் உடைத்தெறியும் செயலுக்கு ஒப்பானது என்பதை வாசிப்பவர்கள் உணரக்கூடும்.

உன் பெயரைவிடவும் நீளமாக இருக்கும் பட்டங்களெல்லாம் சாதிய ஒடுக்குமுறைக்குள் சீரழிந்துகொண்டிருக்கும் ஒரு தலித் சமூகத்து சராசரி மனிதன் பெற்ற வெற்றியால்  உலக அரங்கில் நீ புகழ் பெறுகின்ற இடங்களில், மேடைகளில் இந்தியாவில் மிகமிக மோசமாக ஒடுக்கிவைக்கப்பட்ட சாதியில் பிறந்தவன் என்பதையும், தீண்டத்தகாதவன் என்ற உண்மையையும் பட்டவர்த்தமாக எவ்வித ஒளிவு மறைவுமின்றி உரத்துச் சொல். சாதிவெறி பிடித்த இந்தியர்கள் உலக அரங்கில் வெட்கித் தலைகுனியட்டும் எனும் ஜெயராமனின் கோபம் நமக்கான கோபமாகவும் மாறுகிறது.

ஒரு காலத்தில் கல்வியும், அதற்கான வாய்ப்பும் மறுக்கப்பட்ட வழித்தோன்றலான டாக்டர்.ஜெயக்குமார் ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் பல்மருத்துவம் மற்றும் குற்றம்சார்ந்த பல்மருத்துவத்தில் தொடர் ஆய்வுகள், அகதிகளின் வயதுகுறித்த சர்வதேச சட்டவிதிகள் தொடர்பான விழிப்புணர்வு, மும்பையிலிருந்து வெளிவரும் இந்திய பல்மருத்துவக்கழகத்தின்(யிமிஞிகி) பத்திரிகையின் இணை ஆசிரியர். மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை உலகின் கவனிக்கத்தக்க சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். சென்னையில் உள்ள ‘’இச்சா’’ மையத்தால் ‘’சாதனைத்தமிழர்’’ எனும் விருதினை வழங்கி கௌரவப்படுத்தப்பட்டவர். (ஞிணீtமீ ளியீ ஙிவீக்ஷீtலீ) எனும் அமைப்பைத் துவங்கி அதன் மூலம் பிறப்புச்சான்றிதழ் இல்லா உலக மக்கள் யாவருக்கும் தன் சொந்த ஆராய்ச்சியின் மூலமாக சான்றிதழ் வழங்கும் பணி என இவரின் சேவைகள் நீண்டபடி இருக்கிறது.

நம்மால் மறக்க இயலாத கொடூரமான சம்பவமாக இருக்கும் டெல்லியில் நடந்த கூட்டு வன்புணர்ச்சிக் கொடூரத்தில் ஒருவர் வளர்இளம் பிராயத்தினர். அவரை சிறார் நீதிமன்றத்தில்தான் விசாரிக்கவேண்டுமென விவாதங்கள் நடந்துகொண்டிருந்தபோது ‘இந்தக் கற்பழிப்புக் குற்றச்சாட்டில், சிறார் பிரிவில் உள்ளவனின் சரியான வயது என்ன என்பதை எனது ஆராய்ச்சியின் மூலம் மிகத்துல்லியமாகக் கணக்கிட்டுத் தரமுடியும்’ என அரசுக்கு ஜெயக்குமார் பலமுறை தகவல் கொடுத்தும் அதை அரசு கண்டுகொள்ளவேயில்லை.

இந்தியாவில் ‘கற்றவனின்’ குரலுக்கு ஏது மரியாதை. சிறந்த ஆராய்ச்சியாளர்கள் வெளிநாடு ஓடுவது சம்பளத்திற்காக மட்டுமல்ல, சுயமரியாதைக்காகவும், மேலும் தங்கள் ஆராய்ச்சிக்கான தளமும் அமைத்துக்கொடுக்கும் இடங்களைத் தேடித்தான் எனும் ஜெயராமனின் ஆதங்கத்தில் இருக்கும் உண்மையை நாமும் உணரமுடிகிறது.

மேலும் அவர் கடிதத்தில் சமூக சிந்தனைதான் ஒரு மனிதனை முழுமையாக்கும் அதற்காக நீ டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நூல்களான 37ஐயும் படித்திட கேட்டுக்கொள்கிறார். தாய்மொழி சிறப்பு, போராட்டங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் நீளும் கடிதம் நம்மை தோய்வுறச்செய்யாது உடன் பயனிக்கச்செய்கிறது.

கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக்கொண்ட சராசரி மனிதனாகவே என்னைப் பார்க்கிறேன். சாதிப்பதற்கு 100/100 மதிப்பெண்கள் தேவையில்லை. விடாமுயற்சியும், செய்யும் வேலையில் ஈடுபாடும், கவனமும் இருந்தால் போதும் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் ஒரு மனிதனின் அனைத்து திறமைகளும் சாதியாகப் பார்க்கப்படுகிறது. நம் சமூக விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் எண்ணற்றவர்களுடன் நானும் ஒருவனாக இருப்பேன். இப்போராட்டத்தில் தோற்கலாம். ஆனால் முயற்சி எடுப்பதில் எந்த தோல்வியும் இருக்காது என்று நம்புகிறேன் என முடிவுறும் ஜெயக்குமாரின் கடிதம் நமக்கும் ஆறுதலாக இருக்கிறது. வளர்ந்து வளம் இளைஞர்களிடையே சமூக விடுதலைக்கான வேட்கை இருப்பதை கண்டுணர்ந்து அதை வளர்த்தெடுக்க நம்மின் பங்களிப்பும் வேண்டியிருப்பதன் அவசியத்தை இக் கடிதங்கள் உணர்த்துகின்றன.

மகனுக்கு மடல்
மருத்துவர்.நா.ஜெயராமன்
அபெகா வெளியீடு
832, கீழராஜ வீதி 2ம் தளம்,
புதுக்கோட்டை-622001
விலை-ரூ.80

Wednesday, August 27, 2014

தோட்டாக்கள் பாயும் வெளி

மாடிக்கு ஏறுகிறீர்கள்
அமைதியான சூழல் இருக்க
கொண்டு சென்ற தாளை விரித்து
பிடித்த முயலை வரைகிறீர்கள்
உணவும் வசிப்பிடமும் வேண்டி
புற்கள் சூழ்ந்த புதரை ஏற்படுத்துகிறீர்கள்
ஏனோ நிறைவுகொள்ளாதிருக்க
ஒன்றிரண்டு மரங்களை உருவாக்குகிறீர்கள்
அழகு சூழ மகிழ்ந்தீர்
கணத்தில் கவலையடைந்தீர்கள்
முயல் தனித்திருக்குமென
இணை ஒன்றை தருவிக்கிறீர்கள்
இரண்டும் முத்தமிட்டபடி
சந்தோசமாக உலவிக்கொண்டிருக்கிறது
உங்களுக்கான இடம் அற்றிருப்பதை உணர்ந்து
நிழலான மரத்தடியில்
ஒரு கல்லைப் போடுகிறீர்கள்
அமர்ந்து வேடிக்கையில் களித்திருக்க

மெல்லிய சப்தத்தோடு இரண்டு தோட்டாக்கள்.

நன்றி: கல்குதிரை

Monday, August 11, 2014

இதிகாச கட்டுடைப்புகள் காலத்தின் கட்டாயமாகிறது
-சூரிய நிலா

2004ஆம் ஆண்டு ‘நதிச்சிறை’ கவிதை நூலின் வழியாக அறிமுகமானவர் ந.பெரியசாமி. பத்தாண்டுகளெனும் நீண்ட இடைவெளிக்குப் பின்  ’மதுவாகினி’  எனும் இந்த நூலின் வழியாக தமது இலக்கிய வேட்கையைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.

கவிதைக்கான பாகுபொருட்கள் சமூகக் கட்டமைப்பில் ஏராளமாகயிருப்பினும், தனது கவிதைக்கான பாகுபொருளினை, தான் சார்ந்த வாழ்வியலிலிருந்தே எடுத்துக் கொண்டிருப்பது கவிஞரின் மிகப் பெரும் பலமாகவேயுள்ளது. ‘தோத்தான் கோழி’ போன்ற கவிதையில் தன்னை உருவகப்படுத்திக் கொண்டு சமூகத்தை கட்டுடைப்பது. அல்லது தன்னை உடைத்துக் கொண்டு சமூகத்தை கேள்விக்குள்ளாக்குவது என்ற இவரின் கவித்தன்மையுடன் கூடிய உசாவல் வெகு அற்புதம்.

அற்புத திருவந்தாதியில் காரைக்காலம்மை பாடுவார்...
மகிழ்திடே நெஞ்சே மானுடரில் நீயுந்
திகழ்தி பெருஞ் சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனும் அணிந் துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னம் பெருக்கு

அறியாமை உடைய மனதை - மனிதர்களோடு சேர்ந்து மகிழ்வாகயிருக்கச் சொல்லும் பாட்டுதானிது.
தோத்தாத் கோழி நான்
வலியவனிடம் மட்டுமல்ல எளியவனிடமும்
என் பலத்தைக் காட்டுவேன் என்று ந.பெரியசாமி அழுத்தமாக கூறும்போது இதை அம்மையைப் போல ‘மட நெஞ்சே... மனிதர்களோடு சேர் அவர்களோடு மகிழ்வாயிரு’ என்று சொல்லத்தானே வேண்டும்.

மழையற்றும் மிகு வெப்பம் உமிழாதபோதும்
கைக் கொண்டலைகிறேன் என்கிறார்.

அதாவது குடையைக் கைக்கொண்டு அவர் அலையும் போது- பைத்தியமென தலையிலடித்து/முகத்துக்கு நேரும் / முதுகுக்குப் பின் / வசவை வீசுபவர்களுக்கு/எங்ஙனம் புரியச் செய்ய/ மழை விடாது பொழிகிறது/என் கனவு தேசத்திலென்று.

கவிஞன் தனது கனவில் கூட மழையைப் பிடித்துக் கொண்டு திரிகிறான். பிறகு ஊர் என்ன செய்யும்? சிரிக்கத்தானே செய்யும்?

‘மாமாயை’ என்னும் வனத்தில் அலைகிறன்டா
தாமாயுலகனைத்தும் தாது கலங்கிறண்டா
என்று பட்டினத்தார் பாடுவார்.

‘காது அவிஞ்சான்பட்டி’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில் அழகான எள்ளல் தன்மை துள்ளி விளையாடுகிறது. நோய் மிகுந்த நம் தேசத்திற்கு நூலகங்கள் எதற்கு? இப்படி முடிக்கப்படும் இக்கவிதை மிக இலாகவமாக எழுதப்பட்டதொரு காட்டமான கவிதை. ‘வதைகளின் ருசியறிந்தவர்கள்’ என்ற கவிதையும் மேற்படி தொனியில் எழுதப்பட்ட அற்புதமான கவிதைதான்.

இத்தலைப்பிட்ட கவிதைகளில் எழுதப்பட்ட வரிகள்-மக்கள் சீற்றத்தை உள்வாங்கி வெளிப்படுத்தும் நல்லதொரு கவிஞனை அடையாளம் காட்டுகின்றது.


ஈழ வதையில்
வழிந்த ரத்தங்களை வாக்குக்காக
மணக்க மணக்க வதக்கியபடி இருக்கிறார்கள்
ஒரே சட்டியில்
இரு அகப்பையோடு
ஆண்ட கிழவனாரும் ஆளும் குமரியும்.

ஈழப் பிரச்சினையில் எவருக்கும் அக்கறையில்லை. என்ற குற்றச்சாட்டினை இக் கவிதையில் பதிவு செய்துள்ளது பாராட்டத்தக்கது.

‘வன தேவதை’ என்ற தலைப்பிட்ட கவிதை இராமாயண தொன்மத்தை மறுபரிசீலனைக்கு கொண்டு செல்கிறது. சூர்ப்பனகை இதில் வன தேவதையாகிறாள். இக் கவிதையில் மூக்கறுப்பட்டது இராமன். அதுவும் சூர்ப்பனகையின் மேல் காதல் வயப்பட்ட இராமன். இதிகாச கட்டுடைப்புகள் காலத்தின் பட்டாயமாகின்றது. கவிதை அதை முன்னெடுத்துச் செல்கின்றது.

‘மதுவாகினி’ இவரது பல கவிதைகளில் வந்து போகும் இடுகுறிப் பெயராகவுள்ளது. காதலியாக, அன்னையாக, அஃறிணைப் பொருளாக மதுவாகினியை இவர் வடிவமைத்துள்ளார். ஒரு பெயர் பிடித்துப் போய்விட்டால் கனவிலும், நனவிலும் அது தொக்கி நிற்கும் எங்கும் உடனலையும் மனதுக்குள் உட்கார்ந்து கொண்டு மகுடி வாசிக்கும். அப்பெயர் கவிஞனுக்கு பிடித்துப் போய்விட்டது என்றால் இப்படித்தான் பல கவிதைகளில் அப் பெயர் ஒட்டிக் கொண்டிருக்கும். அதனால்தான் குளித்து வந்த மதுவாகினியின்/கூந்தலில் வடிந்த நீர்த்துளிக(ள்)ளை-

நீராடி கேசம் நீவிய துரோபதையை-ஒப்புமையாக்கியது. அந்த பெயரின் பிரேமையின்றி வேறென்ன?

கனவு வேட்டை, பொக்கை வானம் போன்ற கவிதைகளில் சிறுவர்களின் மன கிலேசங்கள் அழகாக பதிவாகியுள்ளன.

வாழ்வெனும் நீண்ட பாதையில் பயணித்து வந்த ஒரு கவிஞன். அதன் திரட்சிகளை நனவின் உக்கிரத்தோடும், மிகு கவனமாக தனது நினைவலைகளை பரப்பிச் செல்லும் உத்வேகத்தோடும் தனது - கவிதைப் படைப்பை உலகிற்கு தருகிறான். இவ்வுலகம் அதை ஏற்றுக் கொண்டால் மிகுந்த போதைக்குள்ளாகிறான். இல்லாவிட்டால் தொடர்ந்து போராடுகிறான். கவிதைகளை நாமள்ளிக் கொள்ளும் வரை கவிஞனின் போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அத்தகையானதுதான் ந.பெரியசாமியின் இவ்விரண்டாம் முயற்சி.

நன்றி: தீராநதி.


Thursday, July 10, 2014

நடுகல் நாயகர்களோடு...


என்றாவதுதான் வாய்ப்பதுண்டு. நண்பர்களோடு ஊர் சுற்றுவது. ஒருநாள் நானும் கவிஞர்.பத்மபாரதியும் நாங்களிருக்கும் ஓசூர் பகுதியைச் சுற்றினோம். ஒரு சிறிய கோவிலைச் சுற்றிலும் சதுரமான பெரிய பெரிய கற்கள் அடுக்கப்பட்டிருந்தன. அதில் நிறைய சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. சிதைந்து கிடந்த கற்களிலும் சிற்பங்கள் இருந்தன. உடனடியாக மனோன்மணியை தொடர்புகொண்டு கூறினோம். அடுத்த வாரமே ஓசூர் வந்துவிட்டார்.

எங்களோடு அவ்வூருக்குச் செல்லும் வழியில் அவர் நடுகல் ஒன்றைப் பார்க்க வேகமாக ஓடினார். எங்களை அழைத்து ஆச்சரியமாக இது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இப்பகுதியில் வாழ்ந்த வீரன் ஒருவனுக்காக நடப்பட்டிருக்கு என்றார். பக்கத்தில் இருந்த சிறிய கோவிலை பார்த்து மீண்டும் ஓடினார். அங்கிருந்த ஒரு கல்லில் கல்வெட்டுகள் இருப்பதைப் பார்த்து அங்குமிங்குமாக ஓடி இலைதழைகளைப் பறித்து வந்து அதில் தேய்த்தார். எழுத்துக்கள் தெரிய ஆரம்பிக்க ஓவென கூச்சலிட்டு வேகமாக படித்துக் காட்டினார். அவரது செயல் தொப்புள் கொடியின் ஈரப் பிசுபிசுப்போடு இருக்கும் குழந்தையை ஏந்திய தாயின் பரவசத்தை நினைவூட்டியது.

நடு கற்கள் வெறும் சாவுச் செய்தி கற்களல்ல. அதற்கும் உயிர் உண்டு. வாழ்வு இருக்கிறது.தன் இனக்குழுவை காப்பதற்காக புலியைக் கொன்றவன், போரிட்டு இறந்த வீரன் போன்றோருக்குத்தான் நடுகல் வைக்கப்பட்டிருக்கு. நடுகற்களுக்கு உண்மையான வரலாறு  உண்டு என்பதை அறிந்த தருணம் மகத்தானது. சில மகத்தான தருணங்கள் மனிதனை செழுமைப்படுத்தும். அன்றிலிருந்து பாறை தகர்க்கும் வெடிச் சத்தம் கேட்கையில் அவசர ஊர்தியின் ஓசை கேட்டு உண்டாகும் பதற்றம் தொற்றுகிறது. ஏதாவது கல்வெட்டுகள் அழிந்திருக்குமோ, பாறை ஓவியங்கள் சிதைவடைந்திருக்குமோவென..

அடிக்கடி மனோன்மணியோடு சுற்றத் துவங்கினேன். அதன் நீட்சியாகத்தான் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையம், ஓசூர் ஏற்பாடு செய்த நடுகற்கள்-தேசிய கருத்தரங்கில் கலந்துகொண்டேன். ஓசூரில் ஜூன்21 மற்றும் 22ம் தேதிகளில் நடந்தது. புத்தக வெளியீடு, தொல்லியலாளர் மங்கை-வீரராகவன் ஆகியோரின் நடுகற்கள் பற்றிய கண்காட்சி, புத்தக கண்காட்சியும் நிகழ்ந்தன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா தொல்லியல்  ஆய்வு அறிஞர்களின் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. ஒவ்வொரு அறிஞர்களும் அவர்களின் கண்டுபிடிப்புகளை குறுந்திரையில்  ஒளிபரப்பி விளக்கம் சொல்லியது சிறப்பான ஏற்பாடாக இருந்தது. கர்நாடக இதிகாச அகாதெமி பெங்களூர் (ஹம்பி பல்கலைக்கழகம்) தலைவர் பேரா.முனைவர் தேவர கொண்டா ரெட்டி, வணிகவரி இணை ஆணையர் பா.தேவேந்திரபூபதியும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அன்று  மாலையில் ஓசூரிலிருந்து பாகலூர் செல்லும் சாலையில் இருக்கும் குடிசெட்லு கிராமத்தில் இருந்த நடுகல் கோவிலுக்கு சிற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, போய் வந்தது எல்லோருக்கும் நல்ல அனுபவமாக இருந்தது. அதைத் தொடர்ந்து இரவு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் கி.பார்த்திபராஜா தலைமையில் மாற்று நாடக குழுவினரின் பறை, செண்டை இசை நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு பெரும் துடிப்பை உண்டாக்கியது.

22ம்தேதியும் நடுகல் அறிஞர்களின் கட்டுரை வாசிப்பு தொடர்ந்தது. பின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த தியோடர் பாஸ்கரன் உரையாற்றினார்.  அவரைத் தொடர்ந்து தார்வாட் கன்னட ஆய்வு மையம் கர்நாடக பல்கலைக்கழகத்தில் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற ஷதக்ஷரய்யா உரையாற்றினார். கர்நாடக பகுதி தொல்லியல் ஆய்வு குறித்து அறிந்துகொள்ள ஏதுவாக இருந்தது.

முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் கே.எ.மனோகரன் மற்றும் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரிச் செயலாளர் குமார் தலைமையில் பேராசிரியர் கோவிந்தன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்வு தொடங்கியது. நடுகற்களில் இருந்த கல்வெட்டுகளை திரையிட்டு அதை வாசித்துக் காட்டி அவற்றில் இருக்கும் ஈர்ப்பான சொற்களை குறிப்பிட்டு அதனோடு தொடர்புடைய சங்க இலக்கியப் பாடல்களை கூறினார் தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் இர.பூங்குன்றன்.

வரலாறு மன்னர்களுக்கானது மட்டும் அல்ல. மக்களுக்கானதும்தான் என்பதை உணர்த்தும் நடுகற்களின் முக்கியத்துவம் அறிந்து ஆதிக்கும் ஆதியில் வாழ்ந்த நடுகல் நாயகர்களோடு அலைந்து திரிந்த அனுபவத்தைத் தந்தது நிகழ்வு.

Saturday, May 31, 2014

டாக்டர் சித்தார்த்!

பள்ளியின் வளாகத்தில்
நீங்களும் காத்திருக்கிறீர்கள்
எல்.கே.ஜி. அட்மிசனுக்காக.
ஒருவர் பின் ஒருவராகச் சென்றுவர
இப்போது உங்களது முறை
பையனது பெயர் கேட்க
'டாக்டர் சித்தார்த்' என்கிறீர்கள்.
எல்லோரும் உங்களையே வியந்து பார்க்க
பெருமிதங்களோடு வெளியேறுகிறீர்கள்.
அக்கம் பக்கத்தினரும்
அழைக்கத் தொடங்கினர்
டாக்டர் அப்பா... டாக்டர் அப்பாவென.
உங்களது கனவு வளர்ந்துகொண்டே இருக்க
டாக்டர் சித்தார்த்
பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சியடைந்தார்.
ஓவியக் கல்லூரியில் சேர
விருப்பம் தெரிவித்தார்.
அறுந்தது உங்களது கனவு.
விடுவீர்களா என்ன...
விஷப்புட்டி ஒன்றை கையிலெடுக்கிறீர்கள்.
தன் ஆசையைப் பலியிட்டு
டாக்டர் சித்தார்த்
'டாக்டர் சித்தார்த்' ஆனார்!

நன்றி: ஆனந்த விகடன்

நீரைத் தேடிப் பயணிக்கும் வேர்களாக...

படித்து முடித்தோம், வேலைக்குச் சேர்ந்தோம், நன்றாக சம்பாதித்தோம், திருமணம் முடித்து செட்டிலாகிவிட்டோம் எனும் மனநிறைவோடு வாழ்வை நகர்த்தாது தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் தன் மாதச்சம்பளத்தில் சிறு தொகையை பகிர்ந்து 1995ல் ‘அன்புக்கரங்கள்’ எனும் அமைப்பை உருவாக்கினர். அதன் மூலம் மேல்படிப்பிற்கு வழியற்று ஆர்வம் இருந்தும் வறுமையால் படிக்க இயலாது தவிக்கும் மாணவ மாணவிகளை கண்டடைந்து அவர்களுக்கு உதவத் துவங்கினர். பின் மருத்துவச் செலவிற்கும் உதவத்துவங்கினர். நீரைத் தேடிப் பயணிக்கும் வேர்களாக தங்களின் பயணத்தை வேறுவேறு தளங்களில் துவங்கினர்.

2004-ல் இரத்தக் கொடையாளர்களை ஒருங்கிணைக்க ‘உதிரம்’ அமைப்பும், கண்தானம் செய்ய விரும்புவர்களுக்காக 2009ல் ‘விழி’ என்ற அமைப்பையும், குழந்தைகளின் மாற்றுச் சிந்தனைப் போக்கை வளர்த்தெடுக்க ‘குட்டி யானைகள்’ என்ற அமைப்பையும் உருவாக்கி அன்புக்கரங்களின் பரிணாமம் நீண்டுகொண்டே சென்றது.

‘கூட்டு முயற்சி’ என்னும் வார்த்தையில் மிகுதியான நம்பிக்கை வைத்திருப்பதால் எந்த ஒரு தனிநபர் பெயரையும் அமைப்போடு பொருத்திப் பார்க்காது எல்லோருக்குமானதாக இருப்பதால் அது தன் தொடர் பயணத்தில் எவ்வித இடையூறுமின்றி வளர்ந்துகொண்டிருக்கிறது.

01 மே 2014 உதிரம் அமைப்புத் துவங்கி பத்தாம் ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும் மே முதல்நாள் இரத்தக்கொடை முகாம் நடத்தப்படும். தொழிலாளர்களும் பொதுமக்களும் ஆர்வாமாக வந்து பங்குகொள்வார்கள். இவ்வாண்டு இரத்தக்கொடையாளர்களின் எண்ணிக்கை 949 ஆக எட்டியது. ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளும், பெங்களுர் டி.டி.கே இரத்த வங்கியும் வந்திருந்து இரத்தக்கொடை முகாம் சிறப்புற உதவினர்.

குடும்பம் குடும்பமாக நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு தங்களின் மேலான உழைப்பை எவ்வித சலிப்புமின்றி ஆண்டுதோறும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆணும், பெண்ணுமாக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, அவர்களது குழந்தைகள் ‘குட்டி யானைகள்’ அமைப்பில் ஓவியம் வரைதல், கதை சொல்லல், விடுகதை போடுதல், சிறுசிறு விளையாட்டென கொண்டாட்டமாக இருப்பார்கள். சற்றே வளர்ந்த மாணவர்கள் மரக்கன்றுகள் விநியோகிக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்வார்கள். முகாம் ஆண்டுதோறும் சிறக்க ஒசூர் ஆட்டோ தொழிலாளர்களின் பங்களிப்பு மகத்தானது. அவர்களின் சவாரியில் முகாமின் விளம்பரமும் பயணிக்கும். பழங்கள், பழச்சாறு, இளநீர், கேக், மற்றம் சிறுசிறு பரிசுபொருள்கள் என வருடம் தோறும் முகம் சுளிக்காமல் வழங்கிக்கொண்டிருக்கும் நன்கொடையாளர்களின் தாராளமான மனமும் முகாமிற்கு மகுடம் சேர்க்கும்.

ஓசூரில் வெவ்வேறு அமைப்புகளால் அடிக்கடி இரத்தக்கொடை முகாம் நடப்பதுண்டு. ஆனாலும் மே முதல்நாள் கொடுப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்தபடி இருக்கும். சுற்றுப்புற ஊர்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் தங்கள் இரவுப்பணி முடித்து நண்பர்களின் அறைகளில் தங்கி காலையிலேயே வந்திருந்து இரத்தம் வழங்கி பின்னர் ஊருக்குச்செல்வார்கள். தொழிலாளர்களின் மேதின பணிகளில் முதன்மையாக இரத்தம் கொடுப்பதும் முதன்மையானதாக மாறிப்போனது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக் குழுவினர், தன்னார்வலர்கள், இரத்தக்கொடையாளர்கள், பார்வையாளர்கள் என திரண்டிருக்கும் அவையின் மையத்தில் ஒசூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களை அழைத்துவந்து ஒவ்வொருவராக அமரச்செய்து துண்டு போர்த்தி, மெடல், கேடயம், மற்றும் சிறு பரிசும் வழங்கி அவர்களை கௌரவித்தது நெகிழ்வான சம்பவமாக இருந்தது.

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் விபத்துகளின் எண்ணிக்கை பெரும் கவலையை அளித்துக்கொண்டிருக்கையில் உதிரம் போன்ற அமைப்புகளின் பணி மேலும் சிறக்க நாமும் பக்கமிருப்போம்..

Saturday, May 17, 2014

nantri: malaigal.com

சாபவிமோசனம்

ஒரு பூ
பாறையாகிக் கொண்டிருந்தது
சாபத்தினால் அல்ல
வேறு கதை உங்களுக்கு
நினைவிற்கு வரலாம்
பாதகமொன்றுமில்லை
வேகமாக அடிவாங்கிய
மட்டை பந்தை தேடிப் போனபோது
பெரும் குழியொன்றில் கண்டேன்
அதிசயித்து சப்தமெழுப்ப
திரண்ட பெருங் கூட்டத்தின்
வியப்பு அடங்கும் முன்
இனிப்புகளை வழங்கத் துவங்கினான்
வந்திருந்த பாறை வியபாரி.
*

வாக்கு மூலம்

அரசு கர்ஜித்தது
விஞ்ஞானிகளின் திசை அதிர
கூடியது ரகசிய மாநாடு
ஆனவத்தைக் காட்டி
அறிவை வாங்க முடியாது
ஆவேசமாக சிலர்
நடுநிலைவாதிகள் பரிந்துபேசி
ஆராய்ந்திடலாமென ஆமோதிக்கச் செய்தனர்
ஓராண்டுக்குப் பின்னர்
மனு ஒன்று அனுப்பப்பட்டது
மண்ணில் விளைவிக்க இயலாது
வேண்டுமானால் தாளில்
குழந்தைகள் பிறப்பிப்பார்களென.

அறிக்கை வாசிக்கிறது அரசு
விஞ்ஞானிகள் கடும் முயற்சியில் இருக்கிறார்கள்
விரைவில் பாறைகள் உருவாக்கப்படுமென.

nantri: malaigal.com

Thursday, May 15, 2014

நாமும் காணாமல் போகிறோம்

நாமும் காணாமல் போகிறோம்


'யானை காணாமலாகிறது’ இது ஹாருகி முரகாமியின் சிறுகதை. ச.ஆறுமுகம் மொழிபெயர்ப்பில் மலைகள் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இக்கதையை வாசித்திருந்ததால் இதை எப்படி நாடகமாக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் இருக்கும் ஒரு வனவிலங்குப் பூங்காவை நடத்தும் தனியாரொருவர் அதனை நடத்த முடியாமல் கட்டுமான நிறுவனமான பன்னாட்டு கம்பெனி யொன்றிற்கு விற்றுவிட, அப்பூங்காவில் இருக்கும் யானையை மட்டும் யாரும் வாங்கிச்செல்லாமல் இருக்க அதுவே அவ்விடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டவிருந்த அந்நிறுவனத்திற்கு பெரிய இடைஞ்சலாகிவிட, பின்னர் அப்பன்னாட்டு நிறுவனத்திற்கு உதவும் விதமாக அந்த யானையை நகர மன்றமே தத்தெடுத்து அதைப் பராமரித்துக்கொண்டிருக்கையில் அது ஒரு நாள் காணாமல் போய்விடுகிறது.

இக்கதையில் யானை ஒரு குறியீடாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது.

பரபரப்பாகப் பேசப்படும் விஷயங்கள் பிறகு நாளடைவில் ஒரு கட்டத்தில் சுவடற்றுப் போய்விடுகின்றன என்பதை வெளிப்படையாகவும், வளர்ச்சியில் ஏற்படும் சூழல் மாற்றம், இயற்கை அழிவு என்பதைப் பூடகமாகவும் இக்கதை பேசுகிறது. பிரளயன் தன் அனுபவ முதிர்ச்சியால் யானை கதையையும் சொல்லி, கதையின் உள்ளீடாக இருக்கும் அதன் விளைவுகளையும் நாடகமாக்கியிருப்பது சவாலானது.

நாடகத்தில் கதைசொல்லிகளாய் வரும் குழுவினரது உரையாடல் மூலம் முரகாமியின் கதையைக் கூறப் பின் காட்சியாக்கம் செய்திருப்பது நல்ல யுத்தி. இடையிடையே யானைகள் பற்றிய காணொளிப் படக் காட்சியும் ஒளிபரப்பியது தனித்திருந்து உறுத்தலாக இல்லாமல் நாடகத்தின் காட்சிகளோடு அதுவும் ஒரு காட்சியாக மாறியிருந்தது. வனவிலங்குப் பூங்காவை பன்னாட்டு நிறுவனத்திற்கு விற்றுவிட, அதிலிருக்கும் யானையை நகரம் தத்தெடுக்கும் தீர்மானத்தை நகர மன்றத்தில் நிறைவேற்றும் காட்சியில் கட்சிகளின் பொறுப்பற்ற விவாதங்கள், ஊழல்கள், மிளகாய்ப்பொடி வீசுதல், சபை வெளியேற்றம், தீர்மான நிறைவேற்றம் எனச் சமகால அரசியல் கட்சிகளின் போக்குகளை நினைவூட்ட அப்போதைக்கு நாம் சிரித்தாலும் இவர்களின் பொறுப்பற்ற தீர்மானங்களில்தானே நம் வாழ்வும் இருக்கிறது என்பதை நினைக்க நமக்கென்னவென நாம் ஒதுங்கியிருப்பதும் சுட்டது.

அதேபோல் யானையை நகரத்திற்கு அர்ப்பணிக்கும் நாளில் தலைவர் வருவதைச் சித்தரிக்கும் காட்சியில் நடந்துகொண்டிருக்கும் தேர்தல் கூத்துகள் நினைவூட்டின. விண்ணில் விமானம் கடக்கும் ஓசைக்கு அமைச்சர்கள் மண்ணில் வீழ்ந்து வணங்கும் காட்சியில் அரங்கில் சிரிப்படங்க நெடுநேரமானது.

பல சமகால உண்மை முடிச்சுகளை அவிழ்த்தபடியே இருந்தன அடுத்தடுத்த காட்சிகள்.

இரவில் யானைக் கொட்டகையில் தனித்திருக்கும் யானையிடம் யானைப் பாகன் உரையாடும் காட்சியில் கண்கலங்கியது.

கதையில் வருவது போலவே நாடகத்திலும் முரகாமியும் ஒரு பாத்திரமாக வருகிறார். நடைப்பயிற்சியின்போது ஒரு பாறை மீதிருந்து பார்க்க யானைக் கொட்டகையின் மேலிருக்கும் ஜன்னல் வழியே யானையும் யானைப் பாகனும் நன்றாக தெரிகிறார்கள். தினசரி அவர்களைக் கவனிப்பது அவருக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டிருந்தது. ஒரு நாள் யானை சிறியதாகிக்கொண்டிருக்க, பாகன் பெரியதாகிக்கொண்டிருந்ததைக் காண்கிறார்.

அதன் பின் இக்காட்சிமீது, கதைசொல்லிகள் குழு நிகழ்த்தும் உரையாடல் சமகாலச் சூழலை பிரதிபலிப்பதாக இருக்கிறது. முரகாமியோ, மொழிபெயர்ப்புசெய்த ச. ஆறுமுகமோ ஓசூரில் வாழ்ந்தவர்கள் அல்ல.

எனினும் இந்நாடக நிகழ்வு இதனை ஓசூருக்கான ஒன்றாக மாற்றிவிட்டது. ஏனெனில் இவ்வூரில்தான் யானை அடிக்கடி ஊருக்குள் வந்துவிடுகிறது. இவ்வூரைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில்தான் கிரானைட் நிறுவனங்கள் மலைகளை வெடிவைத்து தகர்த்து,காட்டுயிரிகளை வனங்களை விட்டு விரட்டிக்கொண்டிருக்கின்றன. அசோக் லேலண்ட் தொழிலகப் பள்ளியில் ஒரு யானை வந்து பதினைந்து நாட்கள் இருந்துவிட்டுப் போனது. பதினைந்து நாளும் பள்ளிக்கு விடுமுறை.

இயற்கை வளங்கள் கண்முன்னால் அழிந்துகொண்டிருப்பதை இம்மி பிசகாமல் சொல்லிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது இந்நாடகம்.

யாரின் அழிவில் யாரின் வளர்ச்சி என்பது முக்கியம். வளர்ச்சி குறித்தே நாம் சொல்லிக்கொள்ளும் நியாயங்கள். அதன் விளைவால் உண்டாகும் கேடுகள் குறித்தெல்லாம் கிஞ்த்தும் கவலைப்படுவதில்லை. தன் வளர்ச்சிக்காக எல்லாவற்றையும் கடந்த காலமாக்கும் போக்கும் நிலவுகிறது.

இது யானை வாழ்ந்த இடம், இது மயில் வாழ்ந்த இடம் என நாடகத்தில் காட்டப்படுவதுபோல. மனிதன்தான் முதன்மையானவன், ஆளப் பிறந்தவன் மனிதன், அவனுக்கு எதையும் அழிக்கும் உரிமை உண்டு. அவன் வளர்ச்சியே சமூக வளர்ச்சி என்பதான ஆங்காரத்தால் அவன் செய்யும் அட்டூழியங்களை நினைவூட்டியது நாடகம்.

திடுமென ஒரு நாள் யானை காணாமல் போகிறது. எங்கும் ஒரே பரபரப்பு, அது குறித்த பரபரப்பான செய்திகள், யூகங்கள், சாமியார்களின் குறிகள் என ஒரே பதற்றமான சூழல், பின் அதுகுறித்த எந்த நினைவும் இல்லாமல் போதல், இன்னும் இச்சூழல் தொடர்ந்தபடியே இருப்பதைக் கேள்விக்குள்ளாக்கின காட்சிகள். மனம் பதைபதைக்கும் விஷயங்களையும் மறந்துவிட்டதாக கூறி இயல்பான நம் வாழ்விற்கு எவ்வித குந்தகமும் ஏற்படாது பார்த்துக்கொள்வதை நினைவூட்டியது.

சீரியல்களைவிட அதிகமாகிப்போனது டாக்-ஷோ. பிரளயனும் நாடகத்தில் அப்படியான ஒரு பேச்சரங்கத்தை ஏற்படுத்தியிருந்தார். குரலற்றவர்களின் குரல் எனும் நிகழ்வில் இன்று வளர்ச்சி, வரமா? சாபமா? எனும் தலைப்போடு. இதில் மனிதர்களோடு மான் முயல் கரடி யானை மயில் என வன விலங்குகளும் கலந்துகொண்டு மனிதர்களின் அட்டூழியங்களைப் பேசியவனவெல்லாம் காட்சியாக்கப்பட்டிருந்தது நம்மின் கேவலமான நடவடிக்கைகளை நினைவூட்டின.

“யானைகளின் பாதைகளை மறித்து மனிதர்களின் அட்டூழியம்! பண்ணை வீடுகள் கட்டினர்” “பாம்புகளின் வாழ்விடமான பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் மனிதர்களின் அராஜகம்! பிறந்த மண்ணிலே அகதிகளாக்கப்படும் பாம்புகளின் அவலம்!!” என காட்டுயிரிகள் நடத்தும் பத்திரிகைச் செய்திகள் நகைச்சுவையாக இருந்தாலும் இருப்பதிலேயே மனிதன்தான் ஆபத்தான விலங்கு என்பதை உணர்த்தத் தவறவில்லை

முரகாமிக்கும் அவரது தோழிக்குமான உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்தது. தான் தினமும் யானைக் கொட்டகையின் பின்புறம் இருக்கும் பாறையின் மேல் இருந்து பார்க்க யானையும் யானைப் பாகனும் தெரிவார்கள். தனித்திருக்கையில் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொள்வார்கள். அப்படித்தான் ஒரு நாள் பார்க்கையில் யானை சிறிதாகிக்கொண்டே வந்தது, பாகன் பெரிதாகிக்கொண்டே போனான் என்கிறார். அவர் தோழியோ ‘‘அதாவது யானை சின்னதாகிக்கொண்டே போய் காற்றில் கரைந்து விட்டது என்கிறீர்” என மெல்லிய புன்னகையை உதிர்த்து நகர்ந்துவிடுகிறார். தான் கூறும் உண்மையை இப்படித்தான் எல்லோரும் புறக்கணிப்பார்கள் என விரக்தியோடு கதையை முடிக்கிறார் முரகாமி.

இயற்கை அழிந்துவருவதைத்தான் யானை சிறிதாகிவருகிறது என்றும் மனிதனின் பேராசை அகங்காரம் வளர்ந்துவருவதைத்தான் பாகன் பெரிதாகிவருவதாகவும் முரகாமி சொல்கிறாரோ என்று குறுக்கிடும் நாடகக் கதைசொல்லிகளின் கேள்வி, கதைக்குக் கூடுதல் அர்த்தத்தை பரிமாணத்தை வழங்குகிறது.

அதன் பின் நிகழ்த்திய காட்சியில் மனம் பதைத்தது. அரங்கில் யானை ஒன்று நிற்க, பன்னாட்டு முதலாளிகள் அதைத் துண்டுதுண்டாக வெட்டி வீசிவிட அது படிந்த காடுகளையெல்லாம் தங்களின் நிறுவனங்களை நிறுவிவிட, வனத்திலிருக்கும் பழங்குடிகளின் வாழ்வில் ஏற்படும் மாற்றம், அவர்களின் அலைக்கழிப்பு, துயர்களை வெளிப்படுத்திப் பெரும் குற்ற உணர்வுக்கு ஆளாக்கி முடிவுற்றது நாடகம்.

ஏப்ரல் 19 மாலை ஓசூர் டி.வி.எஸ் அகாடமியில் நடந்த இந்நாடகத்தை, மாணவ மாணவிகள் 90 பேர் சேர்ந்து நிகழ்த்தினர். ஆங்கிலவழிக் கல்வி பயின்றபோதிலும் தமிழ் வசனங்களை சரளமாக உச்சரித்தனர்.

Keywords: இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல், ஓசூர் டி.வி.எஸ் அகாடமி, 'யானை காணாமலாகிறது’

nantri: tamil hindu

Friday, March 21, 2014

நேசிப்பிற்காக நிரம்பும் மொழி...


மீச்சிறு அதிர்வாகத்தான் இருக்கும். ஆனால் அன்றைய பொழுதையே தனக்கானதாக மாற்றிக்கொள்ளும் கவிதைகள். நிறைய்ய கவிதைகள் நிறைய்ய பொழுதுகளை தனக்கானதாக மாற்றிக்கொள்கின்றன. அப்படியான கவிதைகளும், கவி சொல்லிகளும் என் பட்டியலில் நீண்டுகொண்டேதான் இருக்கிறார்கள். இப்பொழுது வேல்கண்ணனும் இசைக்காத இசை குறிப்போடு.

முதல் தொகுப்பைப்போலவே இல்லை அத்தனை கவிதைகளும் அற்புதம் என்றெல்லாம் பொய்யுரைக்க மனமில்லை. இது முதல் தொகுப்பாகவே இருக்கிறது என்பதுதான் சந்தோசம். மாடிக்குச் செல்ல ஒவ்வொரு முறையும் தாவிக்கொண்டே இருக்க முடியாது. படிகட்டுகள் அவசியம்தானே. முதல் படிக்கட்டு என்பதால் வசதியாக இருக்கிறது ஒட்கார்ந்து பேச...

தொகுப்பை சமர்ப்பனம் செய்திருப்பவரின் பெயரை படித்ததுமே பவா.செல்லதுரையின் ‘எல்லா நாளும் கார்த்திகை’ தொகுப்பிலிருக்கும் கட்டுரை நினைவில் வந்தது தவிர்க்க இயலவில்லை.

அவன் ஒரு காட்டாறு. அவனுக்கு அடங்கத் தெரியாது. அவன் துள்ளிக்கொண்டே இருந்த ஓர் இளங்கன்று. அவன் சொடுக்கில் கூட்டம் மொய்க்கும். தன் வெடிச்சிரிப்பால் ஒளியூட்டுவான் என ராஜவேலு குறித்து எழுதியிருப்பார். தன்னை விட்டு பிரியக்கூடாதென நேசிப்பவர்களை நாம் நமக்கருகிலேயே வைத்துக்கொள்ளத் தோன்றும். தன் அண்ணன் ராஜவேலுவின் நினைவுகளை தொடர்ந்து மீட்டெடுக்க இத்தொகுப்பை அவருக்கு சமர்ப்பித்துள்ளார்.

இடது கையால் நோயை துடைத்தெறிந்துவிட்டேன் என ராஜவேலு கூறியதை நினைவூட்டியது ‘பச்சையம்’ கவிதையில் மருத்துவமனையுள் இருந்த மரத்தடியில் அமர்ந்து இளைப்பார சாய்ந்திருக்க அம்மரம் மொத்த நோயையும் உறிஞ்சிக் கொள்ளாதோவெனும் வரிகள் சத்தியமானவை. மரத்திற்கு நோயை உறிஞ்சும் தன்மை இருந்தால் மருத்துவம் ஒரு தொழிலாக மாறியிருக்காது. அச்சகம் ஒன்றில் வேலை பார்க்கையில் உடன் வேலை பார்க்கும் சிறுவன் நோய் பீடித்து இறந்துவிட்டான். அவனை புதைத்து எல்லோரும் வெளியேறிய பின் அருகிலிருந்த தோப்பில் இருந்த வேப்பமரத்தில் சாய்ந்து அவன் குறித்த நினைவோடிருந்தேன். சற்றைக்குப்பின் என் துயர் முழுதையும் உறிஞ்சிக்கொண்டு எனை வெளியேற்றியது மரம். மரம் ஒரு அற்புத சிநேகிதம்.

 ‘சுமக்கும் சாலை’ கவிதையும் துயர்பனியை போர்த்தியது.

போதாமை மிகுந்து வாழும் வாழ்வு நமது.  எண்ணுவதையெல்லாம் செயலாக்கம் செய்ய முற்படும்போது ஏதோவொன்றால் தடை பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு வாரத்தில் முடிக்கவேண்டும் என படிக்கத் துவங்கினால் மாதக்கணக்கிலும் முடியாது நீள்வதுண்டு. நம் இயலாமையை எது ஒன்றையாவது வைத்து நிரப்பி சமாதானமோ மகிழ்வோ கொள்கிறோம். நட்சத்திரங்களை எண்ணுவதற்கு ஆசைபடும் வேல்கண்ணன் நிலவில் ஆறுதல் கொள்வதைப்போல.

விழிகளில் சொல்லைக் கண்டடைந்து,  முத்தங்கள் சேமிப்பிற்கானவை  அல்ல எனக்கூறி, வாழ்வும் மரணமுமாய் கலந்திருந்து,  பொழுதை நிந்தித்து, மிச்ச உயிரை கன்னக்குழியில் மச்சமாக்கி, தொடர்ந்து தவம் செய்து, மீள இயலாத பாதரசமாக உருண்டோடி, கலவியின் மிச்சங்களைத் தேடி ரகசிய அழைப்பிற்காக காத்திருந்து, மதுவின் இறுதி மிடராகி சிதறி, ஒற்றைச் சுடராய் உருமாறி நின்று, தனக்கான சில துளிகளில் உயிர்த்திருந்து, கவிதையாகி நெருங்கிக் கிடந்து, புதிரை விடுவிக்கும் ஒளியாகி, பாலையிலும் பூக்களை கொய்துகொண்டிருப்பவனாகி, அரங்கேற்றாத துரோக நாடகத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க கோருபவனாகி தொகுப்பு முழுமையும் நேசிப்பவளுக்கான மொழியால் நிரம்பிக் கிடக்கிறது.

தொகுப்பில் காதல் கவிதைகளைப்போல அடர்ந்திருக்கிறது மௌனமும்...

மௌனத்திற்கு முகங்கள் பல உண்டு. சிலரது மௌனம் கலவரப்படுத்தும், சிலரது மௌனம் அர்த்தமிக்கதாய் இருக்கும். சிலரது மௌனம் சந்தோசப்படுத்தவும் செய்யும். மௌனத்தின்போதுதான் வார்த்தைகள் நிறைய்ய சேகரமாகின்றன. நிரம்பும் தறுவாயில் சிறு கீரல் போதும் உடைபட்டு வெளியெங்கும் வீச்சோடு தெறிக்கும். அது நமை வீழ்த்தவும் செய்யும். மௌனம் குறித்த வேறு வேறு விதமான யோசிப்புகளைத் தூண்டியது ‘மௌனம் புரிதல்’ கவிதை. மேலும் மௌன வெளியில் தீராத இசையை மீட்டிப் பார்க்கிறார். ‘ஆதியும் அந்தமும்’ கவிதையில். மௌனத்தின் சொற்களுடன் ஒரு பறவை ஒரு மிருகத்தையும் எழச் செய்கிறார். ‘வேள்வி’ கவிதையில் மலையை நீளும் மௌனத்தோடு தவம் இருக்கச் செய்கிறார். நேசித்தவள் சொல்லிக்கொடுத்தவைகளிலிருந்து புழங்கத் தொடங்கியும் கற்றறியா அவளின் மெனனம் குறித்த ‘மௌன தவம்’ கவிதை. ‘ரகசிய அழைப்பு’ கவிதையில் இருக்கும் கள்ள மௌனம்,  கவிழ்ந்த இருளில், சிணுங்கிய கொலுசொலியில், வீணையில், கடலில், பிரிவின் வலியில், கருவறையற்றவளின் விசும்பலோசை என ஓசைகளின் நிழலாக கிடக்கும் மௌனம் குறித்த ‘ஓசை’ கவிதை, மரங்களுக்கு வாய்த்திருக்கும் சிலைத்த மௌனம் குறித்த கவிதை ‘மின்மினி’களிலும்... தொகுப்பில் மௌனம் பெரும் குறியீடாக இருக்கிறது.

தொகுப்பில் ஒவ்வொரு கவிதையும்  அதன் துவக்கத்தால் தன்னை வாசிக்கச் செய்திடுகிறது. கவிதை தனக்கான வாசகனை அடையாளம் கண்டுகொள்ளும்.

அரிதினும் அரிதான சிலரின் நட்பு கிடைத்துவிடும். அவர்களுடனான சந்திப்பு உடையாடல் என பொக்கிசமாக பொழுதுகள் கழியும். அப்படியானவர்களின் திடிர் இழப்பு ஈடுசெய்ய இயலாதது. அப்படியான துயரோடு ஒருநாள் அலைந்துகொண்டிருக்கையில் பெயர் மறந்து உருவம் மட்டுமே நினைவில் இருக்கும் பால்ய சிநேகிதனின் கரம் பற்ற இழந்தவரை மீட்டெடுத்து நீராடி வெளியேறும் புதியவனானேன்.  இப்படியான தருணங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதுண்டு. வேல்கண்ணனுக்கு வேல்விழி கிடைத்ததுபோல.

நெய்தலில் நடைபோட்டு முல்லையில் விளையாட நினைத்து சென்றவனுக்கு விரும்பாமலே பாலை வாய்த்துவிடுவதுண்டு. நேசிப்பவள் உடன் அற்ற பொழுது பாலைதானே.’ நீ வராத மாலை’ கவிதையில் நமக்கான பாலையையும் காட்சியாக்கியுள்ளார்.

நட்சத்திரங்களின் ஆவிகளை தன் போர்வைக்குள் ஒளிந்துகொள்ள இடம் கொடுத்த ‘மிச்ச உயிர்’ கவிதை மீண்டும் வாசிக்கத் தூண்டியது.

பொய்யும் புனைவுமற்ற நிர்வாணம் பேரழகு. அதனால்தானோ என்னவோ நிர்வாணத்தை ரசித்தபடியே இருக்கிறோம். நிஜ உருவம் என்றுமட்டுமல்ல நிழல் உருவத்திலும் கூட. இத்தொகுப்பிலும் நிர்வாணத்தை உற்று நோக்கும் ஒரு கவிதை உண்டு. அதில் அருவெருப்பான...அழுகும் என்ற வரியை தவிர்த்திருக்கலாமோவெனத் எனக்குத் தோன்றியது. பேரழகில் எதற்கு அருவெருப்பும் ஆழுகும்...

அந்தரத்தில் நடனமிட்டு நகரும் சிறுமியை அதிசயித்தும், இரத்தம் தெறிக்க தன்னை சாட்டையால் அடித்துக்கொள்பவனிடம் தன் பரிதாபத்தையும் காட்டியபடி நிற்பவர்கள் காசிற்காக தட்டேந்தி வரும் சிறுமியை பார்த்ததும் செல்லை காதில் வைத்தபடி நகருபவர்களை ஏளனப்படுத்துகிறது ‘நிறுத்தம்’ கவிதை.


நம் காலத்தின் கொடுந்துயரம் ஈழத்தில் நிகழ்ந்த  கொலைகள். அந்த வதை குறித்த பாதிப்பு யாரையும் விட்டுவைக்கவில்லை.  அவரவர் அளவில் அது குறித்த பதிவுகளை வலியோடு சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வேல்கண்ணனும் தனக்கான வலிகளை ‘இறுதிச்செய்தி’, ‘நிழற்படம்’, ‘முள்வேலிகளுக்கு அப்பால்’ கவிதைகளில் பகிர்ந்துள்ளார்.

விரும்பியோ விரும்பாமலோ பிழைக்க நேசித்த மண்ணை பிரிந்து வேறு எங்காவது போகவேண்டியிருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு இதுதான் நிலை என்பதால் அதில் படைப்பாளிகளும் தப்பவில்லை. ஆனால் எத்தனை வருடம் ஆனாலும் பிறந்த மண் வாசனையை மட்டுமே சுமந்து திரிகிறோம். போன ஊரின் மண்ணை தொட்டுப் பார்ப்பது கூட இல்லை. அதனோடு ஒட்டாமல் இருப்பதாலோ என்னவோ அம்மண் குறித்த எந்த பதிவையும் நம் படைப்புகளில் கொண்டுவராமல் இருக்கிறோம். ஆனால் இது தவிர்க்கக் கூடியது. நம்மை ஒரு விசயம் கூடவா இடையூறு செய்திருக்காது. இத்தொகுப்பிலும் காண கிடைக்கவில்லை.

அள்ளும் கை மணலில் ஓடும் நதியை தரிசிக்கும் கவி மனதை என்றென்றும் வேல்கண்ணன் தக்கவைத்துக் கொள்வார் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது இசைக்காத இசைக் குறிப்பு.


வெளியீடு: வம்சி புக்ஸ்
19,டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை-606 601.

nantri:yaavarum.com

Tuesday, March 18, 2014

பூக்குட்டியின் சொந்த ரயில்

பூக்குட்டியின் சொந்த ரயில்


காத்திருக்கிறேன் பயணத்திற்காக. ரயில் வருகிறது. பஸ் டிரைவர், லாரி டிரைவர் என்பதபோல் ரயில் டிரைவர் என்ற யாரும் அழைப்பதாக தெரியவில்லை. முகப்பில் அவர் தெரியாது இருப்பதால் ரயில் என்பதே எல்லாவற்றிற்குமான பொதுப்பெயரானது போலும். ரயில் டிரைவரை மறந்து ரயிலை உற்று நோக்கினேன். அதன் முகப்பில் இரட்டைச் சடையோடு ஒரு சிறுமியின் படம் இருப்பதை பார்த்து உற்சாகம் தொற்றிக்கொண்டது. ரயில் அருகில் வர ஏறி அமர்ந்தேன். தனது புறப்பாடை ஊராருக்குத் தெரிவித்து நகரத் தொடங்கியது.
யாரோ உற்று நோக்குவதுபோல் இருக்க சட்டென திரும்பிப் பார்க்கிறேன். எதிரில் ஜன்னலோரத்திலிருந்த குழந்தை எனைப் பார்த்துக்கொண்டிருந்தது. கண் சிமிட்ட காத்திருந்தாற்போல் அவளது கண்களும் சிரித்தன. உடல்மொழியால் விளையாடத் துவங்கினோம். சிநேகிதம் நெருங்க அருகில் அழைத்தேன். தயங்கித் தயங்கி அம்மாவின் அனுமதியோடு வந்தவளிடம் பெயர் கேட்டேன். ரோஜா என்றாள். அம்மா அப்பா பெயர் கேட்க ரோஜாப்பா, ரோஜாம்மா, ரோஜாஅண்ணன், ரோஜா தம்பி ரோஜா வீடென விடாது கூறியவாறு பெரும் ரோஜாவனத்தையே தன் கைகளால் காட்சியாக்கினாள். எனக்கும் என் பக்கத்து வீட்டுக்காரர்கள் நினைவு வந்தது. பத்தாண்டு ஆகியும் இன்னமும் முகில் அப்பா முகில் அம்மா என்று அழைப்பது. தனாக சிரிப்பதை பார்த்து லூசா அங்கில் எதுவுமே சொல்லாம சிரிக்கிறிங்க என்றாள். அதற்கும் சிரித்து ஒரு முத்தமிட வேண்டினேன். ஆங்.... அஸ்க்கு.... நான் தரமாட்டேன் என்றாள்.
எப்படியாவது முத்தம் பெற்றுவிட வேண்டுமென அவளோடு உரையாடலை துவங்கினேன். ரோஜாவிற்கு பூக்குட்டியென பெயரிட்டேன். அவளுக்கும் பிடித்துப்போக சந்தோசமானாள். பூக்குட்டிக்கு என்ன வேண்டுமென கேட்க, எதையும் யோசிக்காமல் டக்கென கரடி பொம்மை என்றாள். நெடுநாளாக பெரிய கரடி பொம்மை கேட்டு அடம்கொள்ளும் என் மகனின் நினைவு வர வாங்கும் சக்தியற்று வாழ்வது குறித்த கவலையில் சுருங்கினேன். பூக்குட்டியின் கவனத்தைத் திருப்ப சோட்டா பீம் குறித்து உரையாடினேன்.
இம்முறையும் பூக்குட்டி முத்தம் கொடுக்க மறுத்துவிட்டாள். பாரதியின் மீசை, சூ அணிந்து வந்த வள்ளுவர், பெரியாரின் தடியென நிறைய்ய கதைகளை சொல்லத் துவங்கினேன். நிறைய்ய கேள்விகளோடு ஊம் கொட்டிக்கொண்டிருந்தவள்.டக்கென பிரகாசமானாள். அறுந்த புலி வாலைத் தைக்க குண்டூசி தேடிக்கொண்டிருந்த முயலின் கதையைக் கூறுகையில்.
பூக்குட்டி ரயிலில் கிடந்த விளம்பர நோட்டீஸ்களை எடுத்துவந்தாள். ஒரு பக்கம் எழுத்தில்லாமல் இருந்தவைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவைகளை தூக்கி எறிந்தாள். பையிலிருந்த என் பேனாவை பிடிங்கினாள். மேலிருந்து கீழாக ஒ,ஃ,த,ந,ஊ என நிறைய்ய எழுதிக்கொண்டே வந்தவள் ஒவ்வொரு எழுத்திற்கும் நேராக கையை வைத்து இது எப்படி இருக்கென கேட்கத் துவங்கினாள். யானை, காகம், புறா, அன்னம், தண்ணீ லாரி என எங்கள் பெட்டி நிறைய்யத் துவங்கியது.
அடிக்கடி எழுந்த வாம்மா... அங்கிளை டிஸ்டர்ப் செய்யாதே எனும் குரலை காதுகொள்ளாதிருந்தவள் என்னிடம் அவளின் அம்மாவை பழிப்புக்காட்டிக்கொண்டிருந்தாள். மறுபடியும் கதை கேட்டாள். குடுவையின் அடியில் இருந்த நீரை அருந்த சிறுசிறு கற்களை பொறுக்கப்போன காகத்தின் கதையைக் கூற தலையில் அடித்துக்கொண்டு காக்கா டீச்சர் சரியாகவே சொல்லித்தரல அங்கில், பேசாம ஒரே ஒரு ஸ்ட்ராவை எடுத்து வர சொல்லிக்கொடுத்திருக்கலாம் என்று சிரித்தவள் மேலே பார்த்தபடி இருந்தாள். நானும் பார்க்க இயேசுவின் படம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. என்ன பூக்குட்டி இயேசப்பாவா என்றேன். இல்ல, இயேசு தாத்தா என்றாள். புன்னகைத்த இயேசு தன் மடியிலிருந்த ஆட்டுக்குட்டியை பூக்குட்டியோடு வி¬ளாயட அனுப்பிவைக்க இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். என் பால்யத்தில் பக்கத்துவீட்டு பையன்களோடு ராசு தாத்தா கதை சொல்லிய இரவில் பெய்த மழை நினைவில் வர நனைந்துகொண்டிருந்தேன். என் ஈரம் உலர்த்த ஆட்டை அனுப்பிவிட்டு சூரியனை அழைத்து வந்தாள் பூக்குட்டி.
கை தட்டும் ஓசை கேட்க இருவரும் திரும்பினோம். தேவதைகளாக திருநங்கைகள். கொடுத்த பத்து ரூபாயிற்கு இருவரையும் தலையில் கைவைத்து ஆசிர்வதிக்க பூக்குட்டி அவர்களுக்கு முத்தத்தை பரிசாக்கினாள். நானும் ஆசையாக கன்னம் காட்ட அன்பால் அடி ஒன்று கிடைத்தது.
விரல்களிடம் தன் அப்பா குறித்து கோள்மூட்டிக்கொண்டிருந்தவளை இடைமறித்து போதும் விடுப்பா அப்பா பாவம் என்றேன். ஆமாம் அப்பா பாவம்தான் என அவளும் கூறினாள் அவள் அம்மாவை ஓரக் கண்ணால் பார்த்தபடி.
எங்கள் பெட்டிக்கு இப்போ கிளி ஜோசியர் வர கிளியை வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் பூக்குட்டி. கூண்டிலிருக்கும் கிளி பள்ளியிலிருக்கும் குழந்தையாக எனக்குத் தோன்றியது. அக்குழந்தை திரும்பி எனைப் பார்த்து சிரிக்க பூக்குட்டியாக இருக்க அதிர்ந்தேன். கிளிக்கூண்டின் முகப்பில் எல்.கே .ஜி என எழுதியிருந்தது. ஒரு டீச்சர் உள்ளே நுழைந்தார். ராபிட்-முயல், பேரட்-கிளி, டக்-வாத்து என சொல்லிக்கொடுத்தபடி இருந்த டீச்சரை இடை மறித்து மிஸ் பெங்குவினுக்கு தமிழ் பெயர் என்ன? எனக் கேட்க, எத்தனை முறை உங்களுக்கு சொல்வது பாடம் நடத்தும்போது டிஸ்டர்ப் செய்யக் கூடாதென. பிறகு கேளுங்க என அதட்டியபடி வெளியேறினார். எழுந்த மணியோசைக்கு எல்லோரும் சர்ச் பக்கம் விளையாடப்போக சத்தம் போடாதிங்க என பாதிரியார் விரட்ட தூரமாக விளையாடச் செல்கிறார்கள் உடன் இயேசுவும் சென்றுகொண்டிருந்தார். அவர்களை நோக்கி கை அசைத்துக்கொண்டிருந்தேன்.
ஐய்யோ அங்கிள் அங்க யாரு இருக்கா டாட்டா காட்டிக்கிட்டிருக்கீங்கவென என் தலையிலடித்தாள். உனக்குத்தான் காட்டினேன் பூக்குட்டியென மழுப்பினேன். சரி உங்களுக்குத் தெரியுமா எனக்கு எங்க ஹெல்மெட் கிடைக்குமென எங்க அப்பாவுக்கு தெரியல என்றாள். குழந்தைகளுக்கெல்லாம் ஹெல்மெட் தயாரிப்பதில்லை என்றேன். நாங்களும்தானே வண்டியில் போகிறோமென்றாள். குற்ற உணர்வில் முகம் பார்க்க தவறினேன். உங்க அப்பா எங்கேவென கேட்ட பக்கத்துவீட்டு சிறுமியிடம் அவர் சாமியிடம் போயிருக்கார் என நான் கூற, சாமிதான் முதலில் செத்தாரா எனக் கேட்டதும் நினைவில் வர இதுகாறும் குழந்தைகள் மீதான என் புரிதல் குறித்து ஏற்பட்ட குழப்பத்தோடு இருந்தேன்.
திடுமென பூக்குட்டி முத்தமிட்டாள். இறங்கப்போறோம் டாட்டா அங்கிள் என்றாள். அவளின் ஈரம் என்னுள் மகிழ்வை விதைத்தபடி இருக்க வாசித்துக்கொண்டிருந்த சொந்த ரயில்காரி தொகுப்பை பையிலிட்டு எனது நிறுத்தத்தை எதிர்பார்த்திருக்கையில் மறவாது கைகுலுக்கினேன். வாழ்த்துக்கள் ஜான் சுந்தர்.
சொந்த ரயில்காரி
ஜான்சுந்தர் கவிதைகள்
அகநாழிகை பதிப்பகம்.
nantri:malaigal.com

Saturday, February 1, 2014

nantri:puthu visai

மரணத்தோடு கண்ணாமூச்சு...
-ந.பெரியசாமி

பெரும் மரமெங்கும்
துளிர்த்திருக்கும் இலைக்கொன்றாக பறவைகள்
அதிசயித்துக் கேட்டான் வழிப்போக்கன்
அறியாயோ...
மரணமற்ற ஊர் இது
ஜீவிதம் முடிய பறவையாவார்களென்றேன்
அருகிலொருவன் அழைத்துக்கொண்டிருந்தான்
தன் மூதாதைப் பறவையை
உணவூட்டலுக்காக...

பால் சக்காரியாவின் சந்தனுவின் பறவைகள் கதை வாசிக்க நான் எழுதிய கவிதை.. ஒரு நல்ல படைப்பு எதையாவது செய்யத் தூண்டும்தானே...

நான் கேட்கத் துவங்கிய முதல் கதை வாசித்த முதல் கதை எதுவாக இருக்குமென அப்பப்போ தேடிப் பயணிப்பதுண்டு விடையற்று வானமாய் பெரும் தடுப்பு ஏற்பட பயணம் மறந்து போகும். நிச்சயம் ஒரு நல்ல கதையைத்தான் கேட்டிருப்பேன். இல்லையெனில் தொடர்ந்து கதை கேட்கும் ஆர்வம் இருந்திருக்காது. கதை படிக்கும் ஆர்வமும் ஏற்பட்டிருக்காது. நல்ல எழுத்துக்களை அப்பப்போ வாசிப்பதால்தான் தொடர்ந்து இன்னும் வாசித்துக்கொண்டே இருக்க முடிகிறது. பால்சக்காரியாவின் அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும் தொகுப்பும் மேலும் என் வாசிப்பை நீட்டிக்கச் செய்தது.

அழுது தொலைக்க வேண்டியதாகிவிட்டது. சனியன் எவ்வளவு கட்டுப்படுத்தியும் அடக்க முடியவில்லை.

அப்பா, பறவைகள் சாவதில்லையா?

இல்லை சந்தனு அவைகள் பறந்து பறந்து மேகம் கடந்து விண்வெளியை அடைந்து விடுகிறது.

அம்மா பறவையாகி பறந்து போவதை பார்த்தியாப்பாவெனும் கேள்வி கண்களை நீர்க்குமிழியாக்கிவிடுகிறது. ஏதோ குழந்தைகளுக்கு கதை சொல்லியிருக்கிறார் என வாசித்து வர மரணத்தை பறவையில் ஏற்றி மிதக்கச் செய்துவிடுகிறார் சந்தனுவின் பறவைகள் கதையில்...

என்றோ செய்த பயணத்தின்போது பார்க்க நேர்ந்த விபத்தில் சிதைந்த உடல் அவ்விடத்தை எப்பொழுது கடந்தாலும் நினைவில் வருவதை தவிர்க்க முடிவதில்லை. கருத்து முரண்பாடுகளோடு அடிக்கடி சண்டையிட்டு வாழும் தம்பதியர் பார்க்க ஒருவனை தற்கொலை செய்து ‘கடல்’ கதையில் கூறுகிறார் நினைவில் தேங்கி நிற்கும் மரணத்தை...

அந்தகாரம் கொடுத்த அமைதியையும் பாதுகாப்பையும் அங்கிகரிக்காது கிணறே உலகமாய் சுற்றி வலம் வர, கிணற்றின் பொந்துகளில் மறைந்துகிடக்கும் மரணங்களோடு இதுதான் உலகம் இதுதான் உலகமென கவிதையாய் நீண்ட தவளையின் பயணத்தில் மரணத்தையும் கூறிச்செல்கிறார் ‘பிரபஞ்சத்தின் சிதைவுகள்’ கதையில்.

விசில் ஒலியை ஒரு புள்ளியாக்கி மொழியால் அப்புள்ளியை பாவு காய்ச்சி அதை ‘ஒரு குறுகலான இடம்’ ஊற்றி வாசிக்கவும் கேட்கவுமாக இசையாகிறது மரணம்...

எனக்கும் ஆசையாகிவிட்டது. இறந்து பின் எழுந்து பார்த்தேன். உறவுகளின் துயர் பீறிட்ட அழுகை, மௌனம், யார் யாரெல்லாம் வந்துகொண்டிருக்கிறார்கள், பசிதாங்காதவர்கள் வேறெங்கோ போகிறமாதிரி போய் டீயோ ரொட்டியோ தின்று வருவது, எதையாவது காரணம் சொல்லி வராது இருப்பவர்கள், புதைப்பதாக இருந்தால் எந்த இடத்தில் புதைப்பார்கள், எரிப்பதாக இருந்தால் எந்த இடத்தில் எரிப்பார்கள். நண்பர்கள் பேஸ்புக்கில் போடும் மரணச்செய்திக்கு எத்தனை லைக் கிடைக்கும். உள் நாட்டில் எத்தனை நண்பர்கள் வெளி நாட்டில் எத்தனை நண்பர்கள் லைக் இட்டார்கள். அஞ்சலி கருத்து எத்தனைபேர் எழுதுவார்கள். நான் இருந்துகொண்டிருக்கும் தமுஎகச அமைப்பு அஞ்சலி நோட்டீஸ் அடிப்பார்களா, என்ன மாதிரி அடிப்பார்கள். எந்த போட்டோ பயன்படுத்துவார்கள். இப்ப ஒன்றும் பிரச்சினையில்லை பேஸ்புக்கில் நிறைய நல்ல போட்டோக்கள் இருக்கு. எனக்காக மெனக்கிட்டு எந்தந்த தோழிகள் வருவார்கள், மரணிக்கும் தருவாயில் யார்யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும். இத்தனை வருட வாழ்வில் யார் யாரெல்லாம் நம்முடன் உண்மையாக இருந்தார்கள். கொஞ்சம் கவிதைகள் எழுதியிருப்பதால் எழுத்தாளன் என மதித்து ஏதாவது இதழ்களில் அஞ்சலி கட்டுரை வருமா. யார் யாரெல்லாம் எந்தெந்த பத்திரிகையில் எழுத சாத்தியமிருக்கிறது, வாய் மூடி கண்மூடி அழகாக உறங்குவதுபோலத்தான் இருக்கும் எனது பிரேதம் என நீண்ட நேரம் அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும் கதையில் வரும் அல்ஃபோன்சம்மாவாகவே இருக்க செய்துவிட்டார்...

மரணம் குறித்திருந்த பயத்தை பிடிங்கி எறிந்து மரணத்தை ஒரு குழந்தையாக்கி மடியிலிட்டு கொஞ்சவும், அதனோடு கண்ணாமூச்சாடாவும் செய்த சக்காரியாவை என்றாவது பார்க்க தழுவி கைகுலுக்க ஆவலோடு இருக்கச் செய்தது தொகுப்பு.

தொகுப்பில் வேறு கதைகளும் நிழலாய் உடன் வந்தபடி இருந்தன. சிறுவயதில் பாட்டியிடம் கேட்ட கதைகளில் வரும் ஆடு, மாடு, கிளி, மரம், வண்டு என எல்லாமே பேசும். அடுத்த நாள் காலை போய் அதுகளிடம் நீண்ட நேரம் பேசிப்பார்க்க எப்பதிலும் அதுகளிடமிருந்து வராதிருக்க ஏமாற்றங்களோடு பாட்டியிடம் போய் ஏன் என்னிடம் எதுவும் பேசமாட்டேன் என்கிறது எனக் கேட்க, போட போக்கத்தவனே அது கதையில்தான் பேசும் என்பார். ‘ஓரிடத்தில்’ கதையில் தவளை மூலம் நம் இயலாமையின் வலியை பேசிச் செல்கிறார்.

சில கதைகள் அது சொல்லப்பட்ட விதத்தில் நம் நினைவின் குடிபெயர்ந்து விடுவதுண்டு. ‘ரகசியப் போலீசும் ஓர் ஆட்டிடையனும்’ கதையும் அப்படித்தான். ஒரு கதை மர்மமாக முடிச்சுகளை போட்டுக்கொண்டே செல்வதும், அக்கதையில் இருக்கும் வேறு கதை அதை அவிழ்த்தப்படியே தொடர்வதாக பின்னப்பட்ட இக்கதையின் போக்கில் இராணுவத்தின் வறண்ட தன்மையையும், சாமானிய எழுத்தாளனின் கரிசனம் மிக்க போக்கையும் போகிற போக்கில் இசைத்து காட்டியிருப்பது அழகு...

‘குஞ்ஞாப்பு எப்படிப்பட்ட ஆளு, குஞ்ஞாப்புவுக்கு எல்லாம் தெரியும். வானத்தைப் பார்த்துக்கொண்டே ‘இதோ, இப்ப மழை வரப் போகுது என்பார் மழையைச் சும்மா அப்படியே தோளில் போட்டுக்கொண்டு எவ்வளவு வேகமாக நடக்கிறார். இப்போ மழை கீழே விழுமெனத் தோன்றும் அது சுகமாயிருக்கும்...’ குஞ்ஞாப்பு போன்றவர்களை எங்காவது சந்திக்க நேர்வதுண்டு. எல்லா விசயங்களிலும் குழந்தைமையோடு இருப்பார்கள். குஞ்ஞாப்புக்கும் உண்ணிக்குமான உறவுகளின் காட்சி கவிதையாக விரிகிறது ‘குழந்தை உண்ணி’ கதையில்.

நவீன மனிதனின் மன இடைவெளிக்குள் மற்றொரு மனிதன் நுழைய முடியாதபோது அவனது இடைவெளியில் பியானோ, புத்தகங்கள் மட்டுமே நுழைய முடியும் சாத்தியங்கள் இருப்பதால் எனது விரல்கள் பியனோவையும், புத்தகங்களையும் பற்றியிருக்கிறது என்பார் கோணங்கி.-இத்தொகுப்பின் கதைகள் வாசித்த நாட்களில் மனம் நிரம்பி விரல் பிடித்து உடன் அலைந்துகொண்டேயிருந்தனர் தொகுப்பிலிருந்த மனிதர்கள்.

நான் சிறுவனாக இருந்தபோது அம்மா இரண்டு ஆட்டுக்குட்டிகளை வாங்கி வந்தார். அதிலொன்றை சித்தி வளர்க்க எடுத்துச்சென்றார். சிறிது காலம் கழித்து வளர்ப்பதற்கான சூழல் இல்லையென திரும்ப அக்குட்டியை விட்டுச்சென்றார். இரண்டு குட்டிகளும் ஒன்றைப்போலவே இருப்பதால் என் தங்கைக்கு அடிக்கடி சந்தேகம் வரும் சித்தி விட்டுச்சென்ற குட்டி எதுவென. இத்தொகுப்பை வாசித்து முடிக்க நானும் என் தங்கையின் நிலையில்... கே.வி.ஜெயஸ்ரீ தமிழில் எழுதிய கதைகளா மொழிபெயர்த்த கதைகளாவென... நெருக்கமான நிறைவான மொழியக்கம் செய்துள்ளார் கே.வி.ஜெயஸ்ரீ.

அல்ஃபோன்சாம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்
பால் சக்காரியா - தமிழில்-கே.வி.ஜெயஸ்ரீ
வம்சி புக்ஸ், 19டி.எம்.சாரோன், திருவண்ணாமலை. விலை-100.

Friday, January 31, 2014

nantri: Ungal Noolagam

போராளிகள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்
-ந.பெரியசாமி

ஏழு எட்டு ஆண்டுகள் இருக்கும் குளிர் நிறைந்த மாலைப் பொழுதொன்றில் தமுஎச நிகழ்வு ஒன்றிற்காக நானும் ஆதவன் தீட்சண்யாவும் ஒசூரில் தொழிலதிபர்களுள் ஒருவராக அறியப்பட்ட திரு.வசந்தசந்திரன் என்பவரை காணச் சென்றோம். அவரது அலுவலகத்தில் ஒரு போட்டோ மாட்டியிருந்தார். அதில் ஜி.நாராயணம்மாள் தனிநபர் சத்யாகிரகி என எழுதப்பட்டிருந்தது. அவர் குறித்து விசாரிக்க, தனது அத்தை என தொடங்கி 1941ல் காந்தி தனிநபர் சத்யாகிரகப் போராட்டத்தை துவங்கினார். காந்தியிடம் அனுமதி பெற்று அத்தையும் ஊரில் சத்யாகிரகப் போராட்டத்தை ஊரில் நடத்தி சிறைபிடிக்கப்பட்டு சிறையில் தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்திருக்கிறார்கள். காந்திக்கு இத்தகவல் அறிய வைஸ்ராய்க்கு கடிதம் எழுதி அந்த சப் இன்ஸ்பெக்டர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அத்தைக்கு மூன்று மாத தண்டனை அல்லது அபதாரம் விதிக்கப்பட்டது. அபதார தொகைக்காக கோர்ட்டில் அத்தையின் தாலி ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த செய்தி காந்தியின் ஹரிஜன் பத்திரிக்கையில் வெளிவந்திருக்கு. அதனால் அத்தையை பார்க்க அப்போ நிறைய்ய தோழர்கள் வந்துபோவார்கள் எனக் கூறியவர் அப்பாவும் இராமநாதபுர ஜில்லாவில் விவசாய சங்கம் அமைத்து போராடியவர். சுதந்திரப்போராட்ட போராளிதான் எனக்கூறி ஒரு டைரியை எடுத்துக் காட்டினார்.

பக்கங்கள் மடங்கி எழுத்துக்கள் ஆங்காங்கே அழிந்த நிலையிலும் இருந்த தாளில் ஒரு சில பகுதியை வாசித்து அப்படியே விட்டுவிடாம சீக்கிரம் புத்தகமா கொண்டு வர முயற்சிக்கலாம் தோழர் என கூறி எனக்கு காட்டினார்.

எனக்குத் தெரிந்த, பாடபுத்தகங்கள், கேட்டறிந்த வரலாறு என்பதன் அர்த்தம் சிதறுண்டது. வரலாறு என்பது பெரும் தலைவர்களோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல சாமானியர்களுக்கும் முக்கிய பங்குண்டு என்பதை அறியத் துவங்கினேன்.

டைரியின் ஒரு பக்கத்தை திறந்து வாசிக்கத் துவங்கினேன். ‘’நாங்கள் சிறை சென்ற சமயம் ஐரிஸ் பெண்ணை மணந்த ஆங்கிலேயர் சிறை சூப்பரிண்டெண்டாக இருந்தார். அப்பெண்மணி அயர்லாந்து சுதந்திரப்போரில் ஈடுபட்ட குடும்பத்தை சேர்ந்தவராம். அப்பெண்மணி தனது கணவரிடம் அரசியல் கைதிகளைத் தொந்தரவு செய்தால் நான் விவாகரத்து செய்து கொண்டு போய் விடுவேன் என்று எச்சரித்தாராம். அதனால் அச்சமயம் திருச்சி சிறை எங்களுக்கு சுதந்திர உலகமாக இருந்தது. சிறையில் நல்ல தேகப்பயிற்சிகள் செய்து வந்தோம்.” என்ற பகுதியை வாசித்ததும் எதையோ கண்டடைந்ததைப்போல உடல் விழித்தது.

அன்றைய இரவு டைரியின் விரிந்த பக்கங்களும் எழுத்துக்களுமாக கனவில் ஓடிக்கொண்டிருந்தது. அன்றைய சிப்ட் முடிந்ததும் நேராக வசந்தசந்திரன் அலுவலகம் சென்று நான் அந்த டைரியை உங்கள் கம்ப்யூட்டரில் டைப் செய்து வைக்கவா என அனுமதி கேட்டேன். அவரும் உற்சாகமாகி ஒத்துக்கொண்டார். தினசரி அங்கு சென்று கொஞ்சம் கொஞ்சமாக அடித்து முடித்தேன். அதன் பிறகு அவரது அலுவலகம் போகும்போதெல்லாம் கேட்டபடியே இருப்பேன். எப்ப சார் புத்தகம் கொண்டு வருவீங்கவென. ஊரில் அண்ணனும் அதற்கான முயற்சியில் இருக்கார் விரைவாக வந்துவிடும் என்ற பதிலோடு இருப்பார். நீண்ட காலங்கள் காத்திருக்கச்செய்து இப்பொழுதுதான் வந்திருக்கு பாவை பப்ளிகேசன் வெளியீடாக. புத்தகத்தை கையிலெடுத்த சமயம் உடல் சிலிர்த்து பழைய நாட்களின் நினைவில் கண்கள் பனித்தன.

“தொண்டர் பல்லாயிரவர் சூழ்ந்து நிற்கின்றோம்- என்ற பாடலின் கருத்தை கவனித்து அந்த தொண்டர் பல்லாயிரவர்களில் நாமும் ஒருவன் ஏன் ஆகக் கூடாது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதன் பின் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தேன்” எனக்கூறும் போராளி ஜி.ராமச்சந்திரன் மதுரையில் அன்னியத் துணி எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்று ஆறுமாத கடுங்காவல் தண்டனையை அனுபவித்து பின்னர் நிறைய்ய சுதந்திர போராட்டங்களில் கலந்துகொண்டவராறு இருந்தவர். 1942 ஆகஸ்டில் நிகழ்ந் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரப் போராட்டத்திலும் கலந்துகொண்டதால் போலிஸ் படை இவரது வீட்டிற்கு வந்தது. “ வீட்டை சோதனை செய்து பிரசுரங்கள் மற்றும் வெள்ளைப் பேப்பர்களை எடுத்துக்கொண்டு நீ எந்த ஊர் எங்கே வந்தாய் எனக் கேட்டனர். நான் உட்கார்ந்து பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அதைக் கண்ட சிவகாசி சப் இன்ஸ்பெக்டர் எஜமான் நின்று கொண்டிருக்கிறார் நீ உட்கார்ந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என அடித்தான். நான், பிரிட்டீஸ்காரன் பூட்ஸ் கால் நக்கும் உனக்கு மரியாதையா ராஸ்கல்? என எழுந்தேன். பத்துபோர் சேர்ந்து என்னை அடித்தார்கள். கைது செய்திருப்பதாக கூறினார்கள். சட்டைபையில் வைத்திருந்த மற்ற தோழர்களின் விலாசங்களை வாயில் போட்டு மென்றுகொண்டேயிருந்தேன்.” எனக்கூறும் ராமச்சந்திரன் இதற்காக நிறைய்ய இன்னல்களை அனுபவித்திருப்பதை படிக்க உடல் சிலிர்த்து. தொடர்ந்து அலிப்புரம் சிறை சென்றிருக்கிறார். அங்கு கம்யூனிஸ்ட் தேச பக்தர்கள் சிறையில் அரசியல் வகுப்பு நடத்தியிருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் வெறுமனே பஜனை பாடுவதும், காந்தியைப் போற்றுவதுமாய் இருந்ததால் சலிப்புற்றிருந்த ராமச்சந்திரன் அலிப்புரம் சிறையில் முழு கம்யூனிஸ்டாகவே மாறி பி.சீனிவாசராவைச் சந்தித்து அதன் பின் இராமநாதபுர ஜில்லாவில் விவசாச சங்கம் கட்டமைத்து விவசாயிகளுக்காக நிறைய்ய போராட்டங்களை நடத்தி சிறைசென்று வருகிறார். வாழ்வின் பெரும் காலம் சிறையிலும் தலைமறைவு வாழ்க்கையிலுமாக கடந்துகொண்டிருக்க 1950ல் கைதான சம்பவத்தை ஒட்டி நிகழ்ந்ததிது. “சப் மாஜிஸ்ட்ரேடிடம் அரசியல் கைதியாக நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டதற்கு, சப்மாஜிஸ்ட்ரேட் அரசியல் கைதியாக நடத்துவதற்குள்ள(செக்சன்) சட்ட விபரம் தெரியாது. நான் புதியவன் தேவகோட்டை ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டிடம் கேட்டுக்கொள்ளச் சொல்லுங்களென்று சொல்லி எனது வாரண்டில் ‘பயங்கர கம்யூனிஸ்ட்” என்று எழுதிவிட்டான். அதனால் ஸ்டேசனில் லாக்கப்பில் சட்டை போட்டுக்கொள்ள அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். ‘பயங்கர கம்யூனிஸ்ட்’ என்று எழுதப்பட்ட விசயம் போலிஸ்க்கு பீதியை உண்டாக்கிவிட்டது. எனது கை விலங்கில் நீண்ட சங்கிலியைப் பூட்டி எந்நேரமும் பிடித்துக்கொண்டே நின்றனர்” என எழுதியுள்ளதை வாசிக்க சாமானியர்கள் பட்ட பாடு குறித்து எவ்வித பதிவும் அற்று ஏனோ தலைவர்களால் மட்டுமே சுதந்திரம் கிடைத்ததுபோல் வரலாறுகளை திரும்பத் திரும்ப புதிப்பித்துக்கொண்டே இருக்கிறார்களே என வலியோடு கடக்கவேண்டியிருந்தது.

இவரின் சுயசரிதையோடு இவரை அடிக்கடி தேடி அலைந்தபடியே இருக்கும் இவரது தாயர் ஒரு முறை இவரை கண்கள் வீங்க அடித்த போலிஸ் ஸ்டேசனுக்கு சென்று எவன் என் மகனை கைதுசெய்து அடித்து இம்சித்தது என பெரும் சப்தம் போட்டது... தனிநபர் சத்யாகிரகம் துவங்கி தொடர்ந்து சுதந்திர போராட்டங்களில் பங்கெடுத்த இவரது தமைக்கை ஜி.நாராயணம்மாள், தன் குடும்பத்தாருக்குப் பிடிக்காது போனாலும் தன் கணவரின் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த அவரது துணைவியாருமென மூன்று பெண்களின் வரலாறும் பதிவாகி இருப்பது இப்புத்தகத்தின் மிகச் சிறப்பு.

ஜனசக்தியில் இவர் எழுதியி கட்டுரைகளும், இவர் குறித்து தலைவர்களின் கட்டுரைகளும், மற்றும் தாயார் துணைவியார் எழுதிய கடிதங்கள் என முக்கிய ஆவணங்களாக உள்ளன.

விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்த ஜி.இராமச்சந்திரனின் சுயசரிதை இப்பொழுதாவது வந்திருக்கென ஆறுதல்கொள்ளும் வேலையில் இவரைப்போன்று எத்தனையோ போராளிகள் எதையுமே பதிய வைக்காது வாய்வழிக்கதையாக மட்டுமே சொல்லி மறைந்திருக்கக்கூடும். எத்தனையோ வரலாறுகள் மண்ணோடு மண்ணாக கலந்திருக்கும் என்ற வருத்தமும் மேலோங்கியது...

விடுதலைப்போராளி ஜி.இராமச்சந்திரன்
தொகுப்பு- ஆர்.பாலச்சந்திரன்

வெளியீடு- பாவை பப்ளிகேஷன்ஸ்
142,ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014
விலை- ரூ.80

Thursday, January 23, 2014

உங்களின் நெருக்கடியான போராட்டச் சூழலிலும் எனது தொகுப்பை வாசித்து பகிர்வு கொண்டமைக்கு மிகவும் நன்றி தோழர்
ந. பெரியசாமி, _மதுவாகினி_. மதுராந்தகம்: அகநாழிகை பதிப்பகம், 2012 (பக். 80; ரூ. 70; 9994541010).

மதுவாகினியும், கோபமும், சிகப்புச் சிந்தையும் சேர்ந்தே பயணிக்கின்றனர் கவிதைகளின் ஊடே. சிந்திக்க, சீர்தூக்க, செயலில் இறங்க எண்ணிறந்த முத்துக்கள் இந்நூல் முழுவதும்:

[] தீதும் நன்றும் பிறர்தர வாராதென்பது
நாய்களுக்குப் பொருந்தக்கூடும்.

[] ஈழ வதையில்
வழிந்த ரத்தங்களை வாக்குக்காக
மணக்க மணக்க வதக்கியபடி இருக்கிறார்கள்
ஒரே சட்டியில் இரு அகப்பையோடு
ஆண்ட கிழவனாரும்
ஆளும் குமரியும்.

[] எதையும் செவிகொள்ளாது
சுயம் வளர்க்க தீராபசியோடிருக்கும்
அழிவின் வேட்டையில் தீராதிருக்கும்
மயிராண்டிகளின் வாழ்வின் மீது
சாவகாசமாய் நின்று
நிறைவான மூத்திரம் பெய்வோம்.

Saturday, January 18, 2014

அணில் வரவற்ற வதை முகாம்கள்...

ஒரு நிமிடத்துக்கு முன் ·


இறைவன் சிவனடியாராக மாறுவேடம் தரித்து இயற்பகையாரிடம் அவரின் மனைவியை கேட்க, அவரும் எவ்வித மறுப்பும் சொல்லாமல் உடன் அனுப்பி, எதிர்த்த ஊர் மக்களை வெட்டி வீழ்த்தி காவலாகவும் செல்கிறார். இனி நாங்கள் பத்திரமாக சென்று விடுவோம் எனக் கூற திரும்பி நடக்கிறார். அவரை அழைத்து இறைவனாக காட்சி தந்து அவருடனே அவர் மனைவியை அனுப்பி வைத்து இயற்பகை நாயனாரின் சிவச்சேவையை உலகுக்கு உணர்த்தும் இது போன்ற கதைகளை வாசிக்கையில் எரிச்சலும், பரிகாசமும் தோன்றினாலும், தான் நம்பும் ஒன்றிற்காக தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் தன்மையை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

தான் வாழும் சமூகத்தின் மீதான அக்கறையில் தன்னை ஒருவன் முழுமையாக ஒப்புக்கொடுக்க நினைத்து வாழ முற்பட எதிர்கொள்ளும் சிக்கலும் அதனால் உண்டாகும் எரிச்சலும் பெரும் கோபத்தையே ஏற்படுத்தும். தன் மீதும், தன் சமகால மனிதர்கள் மீதான கோபத்தையும், தன் நிலைப்பாட்டின் மீதான தெளிவற்ற கருத்தை பெரிதும் நம்பி இடது வலது என குழம்பி நான் என்றும் நடுநிலைதான் எனக்கெதற்கு இந்த அரசியல் கருமமெல்லாம் என சொல்லித்திரியும் மயிராண்டிகளின் மீதான கோபத்தையும் கவிதையாக்கியுள்ளார் லிபி.

சீனாவைப் பார், ரஷ்யாவைப் பார், அமெரிக்காவைப் பார் என கையை தூக்கியபடியே திரியாமல் தன் வீடு, தன் பக்கத்து வீடு, தான் வாழும் ஊர் என அன்றாடம் நிகழும் பிரச்சினைகளை கண்டும் காணாமல் தான் உண்டு தன் வேலையுண்டென ரோபோ மனிதனாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும், தான் என்னவாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டும் நிழலாகவும் கவிதைகள் இருக்க வாசித்து முடித்த பின் அவசரத்திற்கு மஞ்சள் பை கிடைக்காவிட்டாலும்கூட பிளாஸ்டிக் பையிலாவது செருப்பை போட்டு அடித்துக்கொள்ள செய்கின்றன கவிதைகள்...

என்றோ ஓர் நாள் சூழலின் மீதான அக்கறையால் இலவச மரக்கன்றுகளை வைத்து புதைத்து வாழ்வில் நிறைய சாதித்து விட்டோமென பிளாஸ்டிக் கடைகளில் பேரம் பேசிக்கொண்டிருப்பதை போகிற போக்கில் நினைவூட்டி நம் யோக்கியதையை நிர்வாணப்படுத்துகின்றன கவிதைகள்.

கவிதை எழுதத் துவங்கியதும் ஏதோ ஒரு கவிதையையாவது நட்சத்திரமாக்கி விடுவது என எல்லா கவிதைகளையும் வான் நோக்கி வீச, எல்லாம் மோல்டிங்கில் முட்டி வெள்ளையடித்த தொழிலாளியின் உழைப்பை மட்டுமே கீறி வீழ்ந்து அது பேரிச்சம் பழத்திற்குக் கூட வழியற்று போனலும், மின்சாரமற்ற பொழுதில் ஒரு கொசு கடித்தாலும் இடிந்தகரை மக்களை திட்டும் அரசியல் ஞானவாதிகள் மிகுந்து வாழும் ஊரில் பத்தோடு பதினொன்றாக நானும் அவனோடு ஒருவனாக வாழ்ந்து மடியாது என்னை அவர்களிடமிருந்து பிரித்துக்காட்ட, நான் நீ இல்லையென துப்ப எதையாவது எழுதத்தான் வேண்டியிருக்கு. லிபிக்கு அன்பான வேண்டுகோள் தயவுசெய்து பழையபேப்பருக்கு பேரிச்சம் பழம் விற்பவனை அனுப்ப வேண்டாம்.

கின்னங்களில் மிதக்கும் நம் உடைந்த சிறுநீரக கற்களாக பொடிந்து போயின மலைகள். குன்றுமணி திருட்டைக்கூட பொறுத்துக்கொள்ளாத நம் அரசு குன்றுகளின் திருட்டில் சுகப்படுகிறது...

ஒரு நகரின் தூய்மை, அழகு, இயக்கம் என அனைத்தையும் நிகழ்த்துவது இயந்திரம் பிதுக்கி வெளித்தள்ளும் கருமை படிந்த கிரீஸ்களாக தன் உடலைக் கெடுத்து கழிவுகளை அகற்றி நகரின் உபரிகளாக வாழும் தொழிலாளிகளின் துயரம்...

கிறுமிகளின் கூடாரமாக இருக்கும் அரசு அலுவலகங்கள் குறித்த நையாண்டி...

முகம் பார்த்து சிரித்து பேசி ஓசு வாங்கி வீடு வரும் வாழ்க்கை இழந்து பெரும் பெரும் பிக் பஜார்களில் திரளச் செய்துவிட்ட சூதை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டதன் எரிச்சலை வெளிப்படுத்தி நம் போன்று எதற்கும் லாயக்கற்று நிற்கும் நம் கடவுளையும் ஏசுகிறார்.

தன் பள்ளியின் அருகில் இருக்கும் பழக்கடையில் புதுசா விரல்மாதிரி நீளமாக பழம் இருக்கு வாங்கிக்கொடுவென அடம் பிடிக்க, எதைச் சொல்கிறானென பழக்கடையில் பார்க்க எரியக்கூடாத இடமெல்லாம் எரிந்தது. அடப்பாவிகளா இதையுமாவென வாய்விட்டு புலம்பியபடி வாங்கினேன். மிக அழகாக பேக் செய்யப்பட்ட கவரில் 10 புளியம்பழம் இருந்தது. தூரதேசங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. எளிதில் கிடைக்கக்கூடிய நாவல், புளியம்பழம் கூட இறக்குமதிசெய்து விற்பனைக்கு வந்துவிட்டது நம் காலத்தின் பெரும் துயரம்தான். மக்களின் அவசரமும் வியபாரிகளின் பேராசையும் அறியாத மரங்கள் வழக்கம்போலவே அதன் சுழற்சியில் காய்களை கனியாக்குகிறது. நாம்தான் அதுவரை பொறுத்துக்கொள்ள முடியாதே. சுண்ணாம்புக்கல் வைத்து பழுக்கச்செய்து விடுகிறோம். பழ வியபாரிகளுக்கும் மருத்துவருக்கும் ஏதாவது ஒப்பந்தம் இருக்கும்போல நிறைய்ய நோயாளிகளை அனுப்பி வைப்பதில் இவர்கள் பங்கும் நிறைய்ய இருக்கு. அதைவிடக் கொடுமை வாழைத்தாரின் நுனியை அறுத்துவிட்டு பிளாஸ்டிக் பையில் யூரியாவை வைத்து கட்டிவிடுகிறார்கள். யூரியாவை உரிஞ்சும் வாழைத்தார் நல்ல பெருத்த வாழைப்பழங்களை பிறப்பிக்கிறது. நாமும் நல்ல சைஸ் என வாயில் வைத்துக்கொள்கிறோம். திராட்சை விளைவிப்பு அதைவிடக்கொடுமை... லிபியின் கவிதைகனை வாசித்துக்கொண்டிருக்கையில் நம்மாழ்வாரோடு திரிந்த மாலைகள் நினைவில்....

நாமே நம்மை வெகு நிதானமாக ஆர்வத்தோடு அழித்துக்கொண்டிருக்கிறோம் உலகமயமாக்கல் எனும் ரப்பரை வைத்து, ரப்பர் காலியாக காலியாக நட்சத்திரங்களிலிருந்து விழுந்துகொண்டே இருக்கின்றன ரப்பர்கள்.

மரத்திலிருந்தபடி பழங்களை உதிர்த்து சுட்டபழமிதுவென தன் மொழிவிளையாட்டை நிகழ்த்தி புத்திகூர்மைமிக்கவர்கள் குழந்தைகள் என நமக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த போதிலும் எதையும் காதுகொள்ளாது அவர்களுக்கு ஏதும் தெரியாது நாம் தான் எல்லாவற்றையும் கற்றுத்தர வேண்டுமென்ற அதிகார மமதையோடு திரியும் நமக்கு லிபி தன் கவிதைகளில் சூடுவைத்துள்ளார்.

குழந்தைகள் மீது புகார்கள் அற்று இருப்பவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் குழந்தைகளின் உலகில் நிகழும் அற்புதங்களை தரிசித்து சிலிர்ப்படையும் கணங்களில் கரைபவர்கள். அவர்களுக்குத்தான் தெரியும் சிலேட்டில் எழுதும் இ எண்ணையில் மிதக்கும் ஜாங்கிரியாக...

அலுப்பூட்டும் வீட்டுப் பாடங்களை குழந்தைகள் செய்ய டி.வி.யை பார்க்காமலும், பார்க்க விடாமலும் மனதுள் சனியன் சீக்கிரம் முடிக்கிறதா பாரென திட்டியபடி அவர்களை துரிதப்படுத்திக் கொண்டிருக்க அவர்கள் தங்களின் வீட்டுப் பாடங்களோடு நிகழ்த்தும் சுவாரசியமான உரையாடலை ரசிக்க மனநிலையற்று கடந்துகொண்டிருக்கும் நாட்களை நினைவூட்டி ஐயோ இவ்வளவு காலம் தவறவிட்டோமே எனும் மனநிலையை உண்டாக்குகின்றன கவிதைகள்.

கையில் ஒரு பிளேடை எடுத்துக்கொண்டு சிறுவனையோ சிறுமியையோ அழைத்து உடலில் கோடுபோடுதல், வட்டமிடுதல், பெருக்கல் குறியிடுதல் என யாராவது செய்தால் நம் மனம் எப்படி பதபதைக்கும். பார்த்து சும்மா இருந்துவிடுவோமா... அப்படித்தானே இருக்கும் குழந்தைகளுக்கும் அவர்களது விடைத்தாளை பார்க்க. உங்கள் பாடதிட்டமும் பாடங்களும் எதற்கு லாயக்கானது என்பதை அறியாதவர்களா நீங்கள். கால காலமாக விடைத்தாளில் காட்டும் உங்கள் அதிகாரத்தை தயவு செய்து இனியாவது உங்கள் நிர்வாகத்திடம் காட்டுங்கள். ஆசிரியர்கள் தகுதிதேர்வு எழுதவேண்டுமென்றதும் எப்படியெல்லாம் பதைத்தீர்கள். எத்தனை ஆசிரியர்கள் டியூசன் போய்க்கொண்டிருக்கிறீர்கள். எத்தனைபேர் பெயிலாயி பெயிலாயி பாஸ் செய்தீர்கள் தேர்ச்சிபெற எல்லாவித கயமைகளிலும் ஈடுபடத்தானே செய்கிறீர்கள். இதையெல்லாம் மறந்து எப்படி உங்களுக்கு மாணவர்கள் என்றால்மட்டும் கொம்பு முளைத்து அவர்களை குத்தி ரணப்படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள் எனும் நம்முள் இருக்கும் கோபத்தையும் கிளிறி வெளிக்கொணர்ந்துவிடுகிறார்.

வதைமுகாம்களாக மாற்றம் கொண்டு வரும் பள்ளியிலிருந்து வெளியேறி மாடுமேய்ப்பவனின் வெட்டவெளி ஆட்டம் பாட்டம் புல்வெளி புங்கநிழல் காட்டுப்பூ கவண்கல் தவளைவிடுதல் தும்மைப்பூவின் துளித்தேன் என அவரின் பட்டியலை வாசிக்கும் யாருக்கும் அப்படியொரு வாழ்வு கிடைக்காமைக்காக வருத்தப்படத்தான் செய்வார்கள்.

அணில்கள் வராதுபோன பள்ளிகள் வதைமுகாம்கள்தானே...

எனது பள்ளியின் பருவத்தில் கொடுக்கும் பைசாக்களுக்கு மிளாகய் தூளில் உருண்டபடி இருக்கும் நெல்லி மாங்காய் துண்டுகளை கையளித்து மலர்த்தும் பாட்டி, பஞ்சுமிட்டாய்க்காரர், ஐஸ் விற்பவர் என நிறைய சித்திரங்களை மீட்டுக்கொடுத்ததோடு மட்டுமல்லாது அன்றைய நாட்களையும் கொடுத்தவாறு இருந்தன கவிதைகள்.

நகரின் வளர்ச்சியில் தொலைந்த தன் வீட்டை அடையாளங்காட்ட இயலாது தேம்பி அழும் சிறுமியாகி பகடி செய்கின்றன.

கவிதைகள் நம் கயமைகளை தோலுரித்து நிர்வாணப்படுத்த அசிங்கம் தாளாது மனம் பதற தாயின் சாந்த நிலையம் சென்றேன். மூக்கறுக்கும் நெடி வரவேற்றது. தாயை பழித்தாலும் தண்ணியை பழிக்கக்கூடாதெனும் மூத்தோர் சொல்லை மதித்து கேட்டது கிடைக்காவிட்டாலும் கிடைத்ததை வாங்கி அமர்ந்தேன். மூலையில் நின்றவாறு மூத்திரம் பெய்துகொண்டிருந்தான் ஒருவன். எடுத்த வாந்தியில் ஈக்களோடு படுத்தபடியிருந்தான் மற்றொருவன். வேறொருவனோ காறி உமிழ்ந்துகொண்டே இருந்தான், தன் டேபிளிலேயே மூக்கை சிந்தியபடி இருந்தான். நமக்கான இடம்தானே நாம்தானே சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்ற நினைவு துளிகூட அற்று இந்த மாதத்தோடு பத்தாவது முறையாகிறது தொடர்ந்தாற்போல் கிரிவலம் போவது என்றும், நான் இந்த வருடம் போனால்15 வருடமாகிறது சபரிமலைக்குப்போய் என பெருமைபேசியவர்களிடம் மேலும் காது கொடுக்க சகிக்காது ஒவ்வாமையில் உடல் பதற லபக்கென்று ஊற்றிவைத்த கிளாஸை காலிசெய்ய சூழல் பழகிய இடமாக மாற்றம்கொண்டது. மனிதர்கள் மிகவும் இனிமையானவர்களாக மாறினார்கள். எதிரிலிருந்துவன் தனக்கான ஊறுகாயை எனக்கும் நீட்ட நக்கியபடி வெளியேறினேன். மார்வாடிப்பெண்கள் வலதுசாரிகள் மற்றவர்கள் இடதுசாரிகள் எனும் லிபியின் பார்வையில் மகிழ்ந்தேன். தொகுப்பிலிருந்த தேவதைகள் நினைவில் மிதக்கத் துவங்கினர்.

தன் கை அசைவில் சந்திப்புகளில் வாகனங்கனை வழிநடத்தும் இளவரசிகளை மனம் கடந்துபோகாதிருக்க நகர்ந்து...

மேலிமைகளின் சிமிட்டலில் கருணை கசிய சுகப்பட்டும் அகப்பட்டும் கடந்து...

புசித்த மீன் என ஊடுபவளை பசித்த மீனாக்கி நதியில் மிதக்கச் செய்து...

ஸ்கூட்டியில் மிதந்து போகும் ஒடிசல் தேவதையிடம் வாங்கிய பழத்தை முகத்தில் மட்டுமல்லாது வாயிலும் கொஞ்சம் போட்டுக்கொள்ள சொல்லும் லிபியின் அக்கறை நியாயமானதுதான். ஆனால் ஒடிசலாக இருப்பதால்தான் ஸ்கூட்டியில் தேவதைகளாக மிதக்குகிறார்கள். உறக்கம் பீடிக்க கனவிலும் நிறைய்ய தேவதைகள் மிதக்க கடுமையான தலைவலி நனவுலகுக்கு கொண்டுவர மூடிய ஜட்டரை வெறித்துப் பார்த்து சொட்டு கருணையுமற்று குவிந்துகிடக்கும் பாட்டில்களை எட்டி உதைத்து உடல் நடுங்க பிதற்றுபவனாக மாற்றம்கொள்ளச் செய்தது தொகுப்பு.

எடுக்க மறந்த சைடு ஸ்டேண்டை நினைவூட்டி, எதிர்வரும் வாகனத்தில் தேவையற்று எரியும் விளக்கை அணைக்கக்கோரி சைகை செய்து, பறக்கும் துப்பட்டா பின் சக்கரத்தில் சிக்குமென அக்கறையைச் சொல்லி நாம் மிகுந்த கருணைமிக்கவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எனும் நினைப்பை ஏளனப்படுத்தின கவிதைகள்.

எல்லாவற்றிலும் சமரசமென வாழப் பழகிபோன நம்மை வாழ்வு முச்சந்தியில் நிறுத்தியிருக்கிறது. வாகனங்களின் புகை படிந்து சாலை கருமையேறிக் கிடக்கிறது. அதில் எச்சமிட பறவைகளும் அருகிப்போய் மேலும் மேலும் கருமை பத்துகள் பிடித்துக்கொண்டிருப்பதை நினைவூட்டியவாறு இருக்கிறது லிபியின் உபரி வடைகளின் நகரம்.

nantri:malaigal.com