Sunday, May 15, 2022

கணையாழி

 

கனி நகைப்பு
*

மரத்தடியில்
நின்றவனின் கைகளில்
வீழ்ந்தது கனி.

ஐய்யத்தோடு
உண்ணாதிருக்க
அருகில் வந்தவன்
ஏதும் கேளாது எடுத்துத் தின்றான்.

சுவைமிகு பழமென
சொப்புக் கொட்டிச் சென்றவனை
கண்கொட்டாது பார்த்திருக்க
சிரித்துக்கொண்டிருந்தது.

கையில்
இல்லாக் கனி.

1 comment:

Rajesh said...

கைநழுவிய வாய்ப்பு ... !!!

Post a Comment