Saturday, December 13, 2014

nantri:karikalan

கவிஞர் ந.பெரியசாமியின் மூன்றாவது தொகுப்பு தோட்டாக்கள் பாயும் வெளி வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இது இவரது மூன்றாவது தொகுப்பு.இவர் இடதுசாரி பண்பாட்டமைப்பான தமுஎகச மூலமும் விசை இதழ் மூலமாகவும் செயல்பட்டு வருவது மகிழ்வையும் நம்பிக்கையையும் தருகிறது.

இன்று கவிதை சிக்கலற்ற எளியநடைக்கு வந்துவிட்டது.இதன் பின்னால் நிகழ்ந்திருக்கும் அரசியல் மாற்றமே இதற்கு காரணம். நம் சமூகத்தின் பன்மைத் தன்மை இலக்கிய வெளியிலும் அதன் பிரதிநிதித்துவத்தை கைப்பற்றியிருப்பதை நாம் அவதானிக்கலாம்..இதன் காரணமாகவே எளிய மனிதர்கள் எளிய எழுத்துக்கள் .
எளிமையே இலக்கியத்திலும் அழகு.

தோட்டாக்கள் பாயும் வெளி இத் தலைப்பும் கவிதையும் நாம் வாழ நேர்ந்த இவ்வுலகை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது.ஒரு இடத்தில் மனிதன் பிரவேசிக்கத் தொடங்கியதும் அவ்விடத்தில் நிலவிய அமைதி சமத்துவம் சுதந்திரம் விலகி சுயநலம்,அமைதியின்மை,அதிகாரம்,வன்முறை போன்ற எதிர்மறை விஷயங்கள் பரவிவடும் நிலையை சிறிய இக்கவிதை துல்லியமாகக் காட்டிச் செல்கிறது.

கவிதை எழுதுவதென்பது ஒருவித பணபாட்டு அசைவு.நமது இறுகிய மதிப்பீடுகளில் கலையின் வழியாக ஒரு உடைப்பை நிகழ்தும் முயற்சி.சாதி மத இன வெறியற்ற போரற்ற அன்பும் இணக்கமும் நிறைந்த உலகை கனவு காணும் ஒரு விழைவு.பெரியசாமிக்கும் இப்படி பறந்து பட்ட கனவுகளிருப்பதை இவரது கவிதைகள் வழி அறியமுடிகிறது.இது கனவாகத் தேங்கிவிடப் போவதில்லை.ஏனென்றால் வாசிப்பவர்களின் மனங்களில் இக் கவிதைகள் எழுப்பும் கேள்விகள் ஆழ்ந்த விளைவுகளைத் தோற்றுவிக்கும் ஆற்றல் படைத்தவை..

இன்று காந்தியே வந்தாலும் பாக்கெட் பாலையே தருகிற அளவில்தான் நமது சுதேசித் தன்மை இருக்கிறது என்கிறார் ஒரு கவிதையில்.பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் அழிந்த நம் விவசாயம்,இயற்கை,சிறுதொழில்,விழுமியங்கள் என விரிவாக சிந்திக்கம் வாய்ப்பை இக்கவிதை நமக்கு வழங்குகிறது.

குடும்ப உறவுகள்,அழியும் இயற்கை வளம்,பண்பாடு சார்ந்த நுண் அரசியல் என தொட்டுத் தழுவிச் செல்கிறது பெரியசாமியின் கவிதைகள்.

பெரியசாமிக்கு வாழ்த்துககள்.கவிதை ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நல்ல தொகுப்பு தோட்டாக்கள் பாயும் வெளி.

nantri:karikalan

No comments:

Post a Comment