Sunday, December 7, 2014

கரகோசம் எழுப்புங்கள்
வானவேடிக்கை நிகழ்த்தி
பட்டாசுகளை கொளுத்தி போடுங்கள்
சூழல் குறித்து
சாவகாசமாக கவலைகொள்ளலாம்
ஆங்காங்கே கும்பல் கூடி
விசில் அடித்து ஆர்ப்பரியுங்கள்
அவரவர்களுக்கும் தெரிந்த கலைகளில்
கொண்டுவாருங்கள் கொண்டாட்டங்களை
அரசுகளின் புதிய திட்டங்களை
கேள்வியற்று இப்படித்தான் வரவேற்கவேண்டும்

இல்லையேல் உங்களுக்கு
நல்புத்தி புகட்ட வேண்டி
பக்தி பாடல்களோடு பஜனை நடத்துவார்கள்...

No comments:

Post a Comment