Thursday, January 31, 2013

அவ்வப்போது உதிரியாகப் படித்திருக்கிறென். ஆனால், தொகுப்பாக ந.பெரியசாமியின் கவிதைகளைப் படிக்கும்போது, உயரத்திலிருந்து தவறிவிழப்போகும் குழந்தையைப்போல நமது கவனத்தை ஈர்க்கிறது.
மனதோடு நேரடியாக எந்த இடைஞ்சலுமின்றி பேசுகின்றன இவருடைய கவிதைகள்.
உணர்வின் கொந்தளிப்பை தணித்து, அதை உருமாற்றி நிதானமாக மனதோடு பேசுகின்றன.
அது நம் மனதோடு பேசும் முறைகளினால்,
யாராலும் உதறிவிட்டுக் கடந்து செல்ல முடியாதென்ற ஒரு கட்டாயத்தை உருவாக்கி விடுகிறது.

அக்கறை, அன்பு, கருணை போன்ற வற்றுக்கு நிதானமான உணர்வுநிலையுடன்கூடிய இடம் வாழ்வில் அனைத்து தருணங்களுக்கும் அவசியமானது என்ற செய்தியை மிக அழகாக புனைந்து காட்டியிருக்கின்றன.
ந.பெரியசாமியின் ”மதுவாகினி”


nantri: Riyas Qurana

No comments:

Post a Comment