Sunday, January 20, 2013

குறி அறிதல்

வெய்யல் பொசுக்கிய
புழுதி படிந்த வயோதிக நிலத்தில்
நிழல்விழ நின்ற வேலிமுள்ளின்
அருகமர்ந்து விடுகதை இட்டவாறு
வெளியேற்றிய கழிவுகளின்
வீச்சத்தால் நாசி தேய்த்து
நேற்றைய குழம்பு கூறி நகைத்து
திருட்டுத்தனமாகப் படித்த
அண்ணன்களின் காதல்வரி ஒப்பித்து
வாத்தியார்களை ஏமாற்றிய
வல்லமையைப் பாராட்டி
குழி தோண்டிப் பரித்த
திருட்டுக்கிழங்கின் சுவை பகிர்ந்து
கபட உறவுகளின்
களிப்பை ரசித்த காட்சி விளக்கி
ருசி அறிந்த புளியமரத்தின்
ரகசியம் பேசி
இரவுக் காட்சியின் கதை வியந்து
எழுந்து வரும்முன் மறவாது
நீண்டிருக்கும் நிழலைக் கணக்கிட்டு
சேக்காளிகளின் குறி நீளம் அறிவோம்...

நன்றி: கல்குதிரை

No comments:

Post a Comment