Tuesday, October 9, 2012

கனவில் கடவுளிடம்
குழந்தை கேட்டாள்
மழை வேண்டுமென
நேரில் குழந்தையிடம்
கடவுள் வேண்டினார்
நிறைய்ய செடிவளர்க்க வேண்டுமென…
0

அடப்பாவி
கொலைபாதகாவென
திட்டக்கூடும் நண்பர்களே
எறும்பிடமிருந்து பிடுங்கிய அரிசியால்
நாவை எச்சால் நனைத்த
நாட்களை நினைவுகூற

வேறு பருக்கைகள் அவைகளுக்கு
எளிதில் கிட்டிவிடும்…
0

நிரம்பாத போதையால்
தவிப்படைந்தவன்
அழைத்துக்கொண்டிருந்தான்
வாருங்களேன் தற்கொலை செய்துகொள்வோமென
நீங்கள் எல்லோரும் கொலைகாரர்கள்தானே
மறந்துவிட்டீர்களா
ஆத்மநாமை…

0000
nantri:eathuvarai

No comments:

Post a Comment