Monday, October 22, 2012

இருளும் ஒளியும்

மரம்
தன் நிழலைக் கிடத்தி
இல்லத்தை இரண்டாக கிழித்தது
ஒருபுறம் வெள்ளையும்
மறுபுறம் கருமையாகவும் மாறியது
தாவினேன் கருமையின் பகுதிக்கு
அம்மனச் சிறுவனாகி
மிதந்தலைந்தேன் குளத்தில்
அருகிலிருக்கும் நந்தவனத்தில்
எச்சிலாக்கினேன் புளியமரம் ஒன்றை
தோழிகளுக்கு பூக்களைக் கொய்தேன்
காம்புகளில் மீந்த தேன் சுவைத்தேன்
மயக்கத்தில் புரண்டேன் வெள்ளைப் பகுதிக்கு
வெய்யல் சுட உடல் பருத்தது
கூலிச் சீருடை அணிந்து
பிழைப்புக்கு தயாரானேன்
மரம் தன் நிழல் சுருக்கி
இல்லம் இணைத்தது...

நன்றி: மலைகள் இணைய இதழ்

No comments:

Post a Comment