Thursday, October 25, 2012

பாம்புகள் பாம்புகளாயின...


நிலத்தை
உயிர்ப்பித்துக் கொண்டிருந்த தென்னையிடம்
வாங்கிய கீற்றுகளை கிழித்து
பாம்பு செய்தனர்
பலரிடம் பயம்காட்டிச் சிரித்து
நெளியச் செய்து
ஒன்றோடு ஒன்றை பிணைத்து

சுருட்டி எறிந்து
கொடிக்கம்பாக தூக்கி ஓடி
தொலைத்தும் கண்டெடுத்தும்
வேகமாய் சுற்றிச்சுற்றி
பெரும்பாடாய் படுத்தினர்
களைப்படைந்த கணத்தில்
தூக்கி வீசி வீடு திரும்பினார்கள்
பாம்புகள் பாம்புகளாகவே மாறின
ஒன்றை ஒன்று கவ்விப் பிணைந்து
பெரும்மூச்சில் சீறி
தரை கொத்தி நச்சு கக்கி
சோர்வுகொள்ள திரும்பின
தென்னையின் உச்சிக்கு...

நன்றி: யாவரும்.காம்

No comments:

Post a Comment