Tuesday, October 16, 2012

விடை விரும்பா கேள்வி
-ந.பெரியசாமி

ஒளியை இருள் விழுங்கியது
உடலை கொசுக்கள் தின்னத் துவங்கிய கணத்தில்
வௌவ்வாள்களாக தொங்கத் துவங்கின
உள்ளிருந்து குதித்தேறிய கேள்விகள்
அருகிலிருக்கும் தோழிகளின் கேலிக்கும்
இது கூட தெரியாதாவெனும்
ஆசிரியர்களின் ஏளனப் பேச்சுக்கும
அச்சம் கொண்டதால் அல்ல
பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க
நாம் ஏன் முட்டையிடுவதில்ல
இக்கேள்வியால் நிகழ்ந்த
கசப்பான நிகழ்வுகளுக்குப் பின்தான்
தேங்கிடத் துவங்கின
காலம்
பதில்களை சொல்லி வளர்த்தெடுக்க
அடைகாத்திருக்கேன்
அறிந்து கொள்ள முயற்சிக்காது
ஒன்றிரண்டு கேள்விகளை
துள்ளலும் மகிழ்வும் கனிவதால்

உங்களுக்காக
விடை விரும்பா கேள்வியொன்று
மின்மினிகள் மிளிர்வது எதனால்?

நன்றி: வல்லினம் இணைய இதழ்

No comments:

Post a Comment