Sunday, October 21, 2012

காகம் ஏதும் வரவில்லை
வருகையை சொல்லிச்செல்ல
வேண்டுதலில் விரும்பிய
வண்ணப்பூவும் விழவில்லை
நினைவில் துளிர்த்த விரலை
எக்குழந்தையும் தொட்டுணர்த்தவில்லை
பூவா தலையா பார்க்கவும் இல்லை
காசுகளை சுண்டி
காட்சிப் படுத்தவில்லை கனவும்
நினைவலைகளும் சீராகவே
குறி சொல்லிச் செல்லவில்லை கோடாங்கியும்
விக்கலும் தடுக்கலும் கூடயில்லை
திடுமென்ற உன் வருகையால்
நிலம் கரைந்து
துளிர்க்கத் துவங்கினேன்
பச்சயத்தையும் பூக்களையும்
எழுந்த நறுமணத்தால்
மயக்கம் கொண்டது பிரதேசமே
மதுவாகினி தேவதையாகிக் கொண்டிருந்தாள்... 

nantri:malaigel.com

No comments:

Post a Comment