Tuesday, March 10, 2015

ஏக்கம்

காலை நடை
மைதானம் நோக்கி மாறியது
அங்குதான் மரங்களை விட்டுவைத்துள்ளார்கள்
நாவல் கொன்றையோடு
கசகசாவும் நிறைந்திருக்கும்
ஒத்தையாய் நிற்கும் வேம்பில்
சடை சடையாய் காக்கைகள்
கொண்டுசென்ற இட்லியை பிட்டெறிந்து
பினி நீக்க இலை பெறுவேன்
வைத்தியர் சொன்ன
மண்டலக் கணக்குகள் முடிய
மறந்தேன் மைதானத்தை

தினசரி கனவில்
உடலிலிருந்து வேப்பம் பழங்கள்
உதிர்ந்து கொண்டிருக்க
கரைந்துகொண்டிருக்கின்றன காக்கைகள்.
*
தேவதை சாத்தான்

புடைத்துத் தொங்கும் நெல்லிகள்
மாடியில் உருள
மருண்டு ஓடிய அணிலோடு
லயித்திருந்த அந்தியில்
செங்குத்தாக நிற்கும்
சுழல் படிகட்டுகளில்
கொலுசை இசைத்தபடி
மறைந்து மறைந்து
தாவி ஏறிய நைட்டி
அன்பில் தேவதையாகவும்..
பேரன்பில் சாத்தானாகவும்...
நன்றி: படிகம் நவீன கவிதைக்கான இதழ்

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சொல்லிய வரிகள் நன்று இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment