Friday, October 25, 2013

தன் இருப்பை நினைவூட்டக்கூடுமென்று
யாரோ விட்டுச் சென்ற குடுவை
வெய்யில் குடித்தும்
நினைவில் மழை பெய்ய
அடியில் தேங்கியது நீர்
தன் உயிரை எழுத்தாக்கி
மிதக்கச் செய்தாள்
யாரேனும் சிறு சிறு கல் நிரப்பி
வழியும் நீரில்
தனை வாசிக்கக் கூடுமென...

No comments:

Post a Comment