Sunday, March 24, 2013

மருதம் திரிந்த பாலை
1
இரு கண்களும்
பிடிவாதமாக உறக்கம்கொள்ள
என் சிருஷ்டியின் உலகில்
பச்சையங்களை விதைத்துக்
கொண்டிருப்பவளோடு
மகரந்தங்களை ஒட்டவைக்க
சட்டென முளைக்கத் துவங்கின
மேலும் இரு கண்கள்...
2.
நந்தவனமானது வானம்
நட்சத்திரங்கள் பூக்களாக
பறித்துக் கொண்டிருந்தவளின­்
நிறைந்த கூடையிலிருந்து வழிந்தன
அவளின் தீண்டுதலை சுகித்த இன்பத்தில்
விண்மீன்களாகிக் கொண்டிருந்தார்கள்...
3.
மருதம் திரிந்த பாலையில் பயணித்தேன்
கணம் சில்லிட பிறப்பெடுத்தது ஆறு
துளி அருந்த வழியற்றிருக்க
துளிர்த்த வேர்வையை நாவிலிட்டேன்
அடங்கா தாகம்
உடலில் பூத்தது உப்பாய்
நினைவில் ஆறு பெருக்கெடுத்தபடி

No comments:

Post a Comment