Friday, February 22, 2013

எனது கடல்

முதுகை கிழித்தது நத்தை
பிரதேசம் கடலாக விரிந்தது
கரை ஒதுங்கி அதிசயித்தேன்
என் வாசம் நுகர்ந்த அலை
அடுத்தடுத்து நெருங்க
கடலடைந்த நாட்கள் காட்சியானது
சிறார்கள் அலைகளைத் தாண்டி ஜெயித்தனர்
ஒருவன் மூதாதையரை
பிண்டமாக கரைத்துக்கொண்டிருந்தான்
ஈர யுவதிகள் சங்கு சேமித்தபடி
கடலை உறிஞ்சியபடி தனித்திருந்தவன்
அருகழைத்து கையளித்தான்
பிடி உப்பின் வெப்பத்தில்
கடல் காய்ந்தது.

No comments:

Post a Comment