Monday, July 2, 2012

நித்திரையை உருட்டும் பூனை
 

தோட்டங்களில் தப்பி முளைத்த
புல்லின் வளர்ச்சியோடிருந்தது
என்னுள்ளும் ஒரு பூனை
திடுமென வெளியேறுகிறது
பிடிக்காதவனை அறிந்து
இல்லம் புகுந்து அழிச்சாட்டியம் செய்கிறது
அவர்களின் நித்திரையை உருட்டிவிடுகிறது
மறந்தோ தவறியோ
ஒரு நாளும் பிடிப்பதில்லை
அவ் வீட்டில் எலியை
அவ்வப்போது நண்பர்களையும்
காயம் ஏற்பட பிறாண்டி விடுகிறது
தன் கள்ளத்தனங்களால் எனை
கிச்சுக்கிச்சு மூட்டி
மகிழ்வில் திக்குமுக்காடச் செய்கிறது
பாலின் அளவை அதிகரித்தேன்
வருடிக்கொடுக்கவும் செய்கிறேன்
தற்சமயம் என் விருப்பத்திற்கேற்பவும்
வெளியே சென்றுவர
பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன்...

நன்றி: வல்லினம்.காம்

No comments:

Post a Comment