Sunday, June 24, 2012

தவிப்பின் நிழல்கள்




உயிர் அறுந்து அறுந்து
உருமாறிக்கொண்டிருந்தது மதுவாகினி
தன் பச்சையத்தை உதிர்த்தன தாவரங்கள்
பெரும் நதியால் கைவிடப்பட்ட மணல்திட்டு
இரயில்கள் தொலைந்துபோக
வெறித்துக் கிடக்கும் தண்டவாளங்கள்
தொடுப்பார் இன்றிக் கிடந்த செருப்புகள்
பிடித்தவைகளை களவுகொடுத்த ஏமாற்றம்
ஈயம் பூசப்படாத பாத்திரமாய் வெறித்த சாலை
பிறரின் சுவாசம்படாது தொலைத்த எழுத்துக்கள்
வானம் பிதுக்கித் தள்ளிய நட்சத்திரங்கள்
ஈரம் துளிர்க்கும் துளைகள் தூர்ந்த பாறை
நாவின் ஈரம் தீண்டாத வைக்கோல் கன்று
கீறல்களின் ரணம் வடிக்கும் கள்ளிச்செடி
கண்ணடிகளால் வர்ணம் ஒடிந்த திருஷ்டிபொம்மை
உருவம் தீய்த்துக் கரையும் கற்பூரம்
எச்சங்கள் வறண்டு பொடுகாய் படிந்த
என் குலசாமியென
தவிப்பின் நடுக்கத்தோடு
நம் விரல்களின் ஸ்பரிசம்
வெட்டுண்ட கணத்தில்...

நன்றி: தீராநதி

2 comments:

Post a Comment