Tuesday, January 31, 2012

மரங்கொத்தி

உறிஞ்சி வீசப்பட்ட நொங்குக் குழியான
கண்ணுள் இருந்தும் வெளியேறியது மரங்கொத்தி
எளிதில் துளையிடக் கூடியதாகையால்
தென்படுவோரின் உள்ளாடைகளைக்
கொத்திக் கொத்தி எறிந்து கொண்டிருந்தது
உள்ளாடைகள் அற்றோரும் வந்திட
சபித்து
கடந்ததும் காண்போரை
சற்றே கடினமாகவும் கொத்திவிடுகிறது
வெளியெறிந்தவை பெரியதும் சிறியதுமாக
குத்திட்ட குன்றுகளாகி
குலை குலையாகத் தொங்கிக் கனக்க
குற்ற உணர்வு வேர்வையாகி வடிந்திட
ஒளிந்துகொள்ளும் மரங்கொத்திகள்
சும்மாவே இருப்பதில்லை...

சதா கொத்தித் திரியும் சிரமம் தவிர்க்க
வெளியெங்கும் மிதக்கவிட்ட நீலக்கன்னிகளின்
அவிழ்ந்து போடப்பட்ட ஆடைகளை
மோந்து கொழிக்கிறார்கள்...

nantri:uyirosai

3 comments:

மதுரை சரவணன் said...

arumai...vaalththukkal

rvelkannan said...

இறுதி பத்தி வேறு புரிதலை தருகிறது நண்பா
உயிரோசைக்கு - வாழ்த்துகள்

ந.பெரியசாமி said...

நன்றி நண்பர்களே...

Post a Comment