Thursday, February 2, 2012

பன்றிகளின் இருப்பைத் தேடும் மதுவாகினி

மதுவாகினிக்கு
பன்றிகள் மீது பரிவு அதிகம்
அவதாரத்தில் இறையடி கண்டதாலல்ல...
நோய் பரப்பும் அசிங்க ஜந்தென
முகம் சுழிப்போரை விலக்கி
தேடித்தேடி இருப்பை அடைவாள்
அதுஅதுகள் தன்போக்கில் திரிய
ஏமாற்றத்தால் சோம்பியும் கிடப்பாள்
என்றாவது தரிசிக்கும் பொழுதில்
தவத்தால் கரு தரித்தவளாய்
கண்கள் பனித்திருக்கும்
என் இருப்பு குறித்து
எச்சலனமுமின்றி
அனிச்சையாக அவளே
தன் முலை வருடியபடி
விதந்து கொண்டிருப்பாள்
முட்டி இழுக்கும் குட்டிகளுக்கு
ஒருசேர பசியடக்கும்
தாய்மையை...

nantri:vallinam

     

1 comment:

rvelkannan said...

ம் ... எல்லாவற்றையும் எப்படியிருந்தாலும் நேசிக்கும் தாய்மை. நல்ல இருக்கு நண்பா

Post a Comment