Thursday, January 5, 2012

புலியாகும் மதுவாகினி

ஓய்ந்த நேரங்களில்
விளையாடத் துவங்குவோம்
எப்பொழுதுமே மதுவாகினியின் தேர்வு
புலியாகவே இருக்கும்
நான் ஆடாகிக் கொண்டிருப்பேன்
ஒன்றிரண்டை காவுகொள்ள
மகிழ்வில் நடனமாடுவாள் கட்டங்களில்
நகர இயலாது ஒரு புலியை மடக்க
பெரும் காடாகிவிடும் கட்டங்கள்
உடல் சிலிர்க்க மாறுவாள்
புலியாக மதுவாகினி
உக்கிரம் தாளாது
பயத்தில் அலைவுறும் ஆடுகள்
வெற்றிகொள்ள சாந்தமாவாள்
காடு மீண்டும் கட்டமாகிட
கலைந்து போவோம்
மீந்த காய்கள்
பெரும் ஆடாக வளர்கிறது என்னுள்
என் புலி
எவ் வனத்திலோ...

நன்றி : வல்லினம்

No comments:

Post a Comment