Saturday, December 3, 2011

கசப்பு

சோம்பிக் கிடந்த குழாயிலிருந்து
மழையை வரவழைத்துக்
கழுவிய இரு பாகற்காயை
துண்டாடினேன்
அலுப்பூட்ட விரும்பவில்லை
பொன்நிறமாகிட
வதக்கினேன்
சுவையறிய சிறுதுண்டை
நாக்கிலிட்டேன்
ஊறி ஊறி வழிந்த எச்சில்கள்
உடலுள் வளர்த்தது
ஒரு வேப்பமரத்தை

3 comments:

rvelkannan said...

இன்று தான் தங்கள் பக்கம் வந்தேன், மிகவும் பிடித்திருக்கிறது. உங்களின் எல்லா முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகள்

rvelkannan said...

எனது face book லிலும் google buzz and google + லும் அறிமுகபடுத்தியுள்ளேன்

ந.பெரியசாமி said...

நன்றி கண்ணன்

Post a Comment