Saturday, December 3, 2011

இரு கோப்பைகளில்

இரு
கோப்பைகளில் கடலை
ஆற்றிக்கொண்டிருந்தவனிடம்
வேறெங்கு வாழ்வதென போராடின
மீன்கள்
மனமுடைந்த முதலைகள்
தற்கொலை பூண்டன
போக்கிடமற்று அலைந்தன பிற ஜீவராசிகள்
கூடை கூடையாய்
எல்லோரும் புசிக்கத் துவங்கினர்
மலிவு விலையில் மீன்களை...

No comments:

Post a Comment