Friday, December 2, 2011

தவளைக்கு சிக்கிய மீன்

தூண்டிலிட்டது 
குளக்கரையிலிருந்து தவளை 
நீர் அதிர 
சிரித்தது சிக்கிய மீன் 
எனை பிடித்தென் செய்வாய்? 
ஏளனம் தரையில் வழிந்தது
மனித வசிப்பிட சிறையிலடைப்பேன் 
அங்கு உன் பெயர் தொட்டிமீன் 
சிறார்கள் உணவிடுவார்கள் 
தாளில் 
பிறப்பித்த மீனை 
துணைக்கு மிதக்கச் செய்வர் 
கழிவில் கசடான நீரை 
மறவாது மாற்றம் செய்வர் 
உனது வளர்ச்சிக்கு உண்டங்கு ஊசி
பெருமையின் அடையாளமாவாய் 
வந்துபோவோரெல்லாம் வேடிக்கையில் மகிழ்வர் 
ஒளிரூட்டி கதகதப்பாக்குவார்கள் 
ஒத்துப்போக ஓடித்திரியலாம்
முரண்கொள்ள செத்து மிதப்பாய் 
வீசி எறிய வேரொன்று இடம் நிரப்பும் 
என்றாவது விடுவிக்கவும்படலாம் 
வதை என்பதறியும் சிசு அவதரிக்க...

No comments:

Post a Comment