Friday, July 1, 2022

உணவெனும் கலை

 உணவெனும் கலை

*

வாத்துகளாயிரம் அல்லிகளாய் மலர்ந்திருக்க
குருவியின் சிறுமனை
கிளைகளில் நிலவாய் தொங்கும்
ஆற்றின் அருகமர்ந்து
தீ பொசுக்கும் கறியிலிருந்து
சொட்டும் எண்ணை எச்சிலாகி
உடலை நனைத்த கதையைச் சொல்லியவாறு
குடல், ஈரல், தொடைக்கறியென
பந்தி விரித்து
பாங்காய் இது பங்கோடாவென
பொட்டலம் பிரித்த
ததும்பும் பிரியங்களால்
மாட்டுக்கறியின் ருசியை
அரூரில் சுவைக்கக் கற்றேன்.
ஆம்பூர், பேரணாம்பட்டென
பயணத்தில்  மனமும் மணக்க
சூப்பும் சுக்காவுமாக
அலைகள் அடித்தது புதுச்சேரியில்.

உண்பதும் உணர்தலும்
அவரவர்களுக்கனது
அவை அவைகளுக்கானதும்.

No comments:

Post a Comment