Tuesday, August 29, 2017

Siva Sankar SJ

nantri: Siva Sankar SJ
·
திராட்சையின் சாயலை விழுங்கியவன்
------------------------------------------------
(குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்
ந.பெரியசாமி)
மாலைப் பொழுதொன்றில்
உரையாடலை துவங்கினாள் சிறுமி
யானைக்கு யார் துணை
இன்னொரு யானைதான்
காக்காவிற்கு
மற்றொரு காக்கா
குருவிக்கு
மற்றொரு குருவி
இந்த மரத்துக்கு
அதோ அந்த மரம்
அப்ப வானத்துக்கு..?
.......................................
மௌனித்திருந்தேன்
(பக்:20)
"நாம் குழந்தைகளை நம் உயரங்களுக்கு தூக்கிக் கொள்கிறோம்.ஒருபோதும் அவர்கள் உயரத்திற்கு குனிவதில்லை"
குட்டிமீன்கள் வரைந்து தள்ளும் ஒரு உலகம் பெரியசாமியின் வழியாக நம் கண்களை திறக்ககிறது.குட்டிமீன்கள்தான் நிறங்களின் கடவுளர்கள்.அந்த கைகளின் லாவகம் புது பிரபஞ்சத்தை உருவாக்க வல்லது.அதை அறிய நாம் குனிய வேண்டும்.தரையோடு தரையாக தவழவேண்டும்."பெரிசு" தவழ்ந்திருக்கிறார்.
என் வானத்தின் குட்டிமீன்கள் எனக்கு கற்று தந்தது ஏராளம்.அதுவோர் தனி மொழியுலகம்...
1)மூத்த நந்தன்- "மீதியை சாப்பிட்டுட்டு பாதியை வச்சிருக்கேன்பா " என்பான்.அம்மா ஒட்டகச்சிவிங்கி/ஜிராஃபி என சொல்லிக்குடுக்க இவன் ஒட்டாஃபி என்பான்.
2)மற்றொரு குட்டிமீன் ஆயிஷா -மழையோடு பேசுவாள்.காக்கைக்கும் பூனைக்கும் பெயர் சூட்டுவாள்
3)ஆமினா - சின்ன சொல்லில் பெரியவர்களை கேலிச்சித்திரமாய் தீட்டி விடுவாள்.
4)சின்ன நந்தன் உலகத்தையே குட்டியாய் மாற்றிவிட்டான் ..
குழந்தைகளிடம் கொடுக்கப்படும் தாள்கள் பாக்கியம் செய்தவை..அதன் எல்லைகளுக்கு வெளியேதான் கிடக்கிறோம் நாம்
தமிழ் சினிமாவின் அதிகப்பிரசங்கி குழந்தைகள் -செய்யப்படுபவை..அசலான குழந்தைகள் இதுபோன்ற கவிதைகளில்தான் உலவுகிறார்கள் குட்டிமீன்களாய்..
அந்த வானம் பூரிப்பூட்டுகிறது,வண்ணங்களை பொழிகிறது..பாடல்களை தூவுகிறது..
நாம் உயரங்களை குறைப்போம்..தவழ்வோம்..மீன்களாவோம்..
Child is the father of man. (Father..?/ Man.....?)
அன்பும் வாழ்த்தும் ந.பெரியசாமி
குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்
தக்கை வெளியீடு
விலை:30/-

1 comment:

Post a Comment