Wednesday, September 4, 2013

சூரியனை
சிறு கயிறாக திரித்து
அறையுள் அனுப்பியது கூரைத்துளை
கயிற்றை கண்ணாடியால் அறுத்தேன்
வாசலில் வட்டத்தை இட்டது
கடந்தவள் வளையலால் மீண்டும்
உட்செலுத்தி கூசச்செய்து
சிரிப்பை நிறுத்திச் சென்றாள்
துளை இப்போ மழையை திரித்தனுப்ப
அறையும் குளிர்ந்தது

No comments:

Post a Comment