Sunday, September 1, 2013

பசியாற்றும் கண்கள்

மதநீர் சுரக்க
எனதுடல் பிரிந்த யானை
அறிந்தேன் நிகழும் மாற்றங்களை
மிளிரும் மூக்குத்தி
சிமிட்டும் தொங்கட்டான்கள்
மறையத் துவங்கின
நெளிவுறும் வானவில்
கிளர்த்தும் மதனமேடுகள்
அசைவுகளின் நளினமென
கள்ளத்தனமான கயமைகளை
பாசியாக்கி படியச் செய்தேன்
பசியடக்கத் தவறவில்லை
கண்கள்...

No comments:

Post a Comment