Sunday, June 16, 2013

ரயிலானவன்

தற்கொலை செய்துகொள்ள தோன்றியது
சலிப்பூட்டும் மருத்துவச் செலவீனங்களுக்குப் பின்னும்
துளிர்ப்பூட்டும் நோய்மை தீராதிருக்க

தூக்கிட்டுக் கொள்ளலாமென யோசிக்க
முன்பு பார்க்க நேர்ந்த
தூக்கிட்டு இறந்தவரின் காட்சி தோன்றியது
முடிவை மாற்றிக்கொண்டேன்

வரும் ரயிலின் முன் பாய்ந்திட தீர்மானித்தேன்
தற்கொலைக்காரர்களின் கனிவான கவனத்திற்கு
எதிர்பார்க்கப்படுகிறது
இன்னும் சற்று நேரத்திற்குள் வருமென
அறிவிப்புப் பெண்ணின் குரல் ரசித்துக் கடந்தேன்
நிலையத்திலிருந்து வேகமெடுக்கும்
இடம் கனித்து நின்றேன்

என்னுள் பச்சை நிறம் ஒளிர்ந்திட
வேகமெடுத்து அருகில் வந்தது
ஒவ்வொரு பெட்டியும்
ஒவ்வொரு குழந்தையானது
ஓடிப்போய் நானும் ரயிலானேன்.

1 comment:

இராய செல்லப்பா said...

ரயில் முன் பாய்ந்து ஒருவன் தற்கொலை செய்துகொண்டதை நேரில் பார்த்த அனுபவம் உண்டு. இப்படித்தான் அவனும் நினைத்திருப்பானோ? –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

Post a Comment