Tuesday, December 4, 2012

பிழை முடிச்சுகள்

சுருக்கம் கொள்வதில்லை
ஊர் என்பது வெறும் பெயர்களோடு
நெடிய வரலாறுகளின்
முடிச்சுகளால் ஆன கூடுகள்

காட்சியாகும் சில முடிச்சுகள்
கனவுகளை பரிசளித்து
ஏக்கப் பெருமூச்சுகளை வெளியேற்றும்

போக்க இயலாத ரத்த வாடையால்
உழன்று பித்தாவதும்...

மனிதத்தின் மீது வீழ்ந்த
இழி நிலை எச்ச
முடிச்சொன்று அண்மையில்
அதியமானின் காதல் நெல்லி
ஔவையின் கைகளில் கனியாகி
கலப்புமணம் கொண்ட நீட்சியை பொசுக்கியது

தீ கங்குகளை அடைகாக்கும் மனங்கள்
பெருக்கம் கொண்டு இனி
விழாதிருக்கட்டும்
பிழை முடிச்சுகள்...

நன்றி: வல்லினம் இணைய இதழ்

No comments:

Post a Comment