Friday, November 9, 2012

நீ அறியாய்

வென்றெடுக்க இயலாத கணங்களில்
பெருக்கெடுக்கும் வன்மத்தால்
சிதைக்க முற்படுகிறேன்
பெரும் பாறையை
சிறு கற்களாக்கும் பதட்டங்களோடு
வெப்பத்தால் நீர்மமாக்கி உதிர்க்க
பெரும் மழையாகி
மிதக்கச் செய்திடுகிறாய்

நுணுக்கி சிறு விதையாக்க
அடர் காடாகி தொலைத்திடுகிறாய்
பலூன் ஒன்றில் ஊதி அடைக்க
வானில் தூக்கி பறந்திடுகிறாய்
சமாதானம் கொள்கிறேன்
எல்லா கனவுகளும் பலித்திடாதென...

நன்றி: வல்லினம் இணைய இதழ்

No comments:

Post a Comment