Wednesday, August 8, 2012

நிறமாற்றம்

வாகான குச்சி ஒன்றை ஒடிப்பேன்
ஒரு முனையை நன்றாக மென்று
கசப்பை விழுங்கி குச்சியை
கற்றறிந்தவாறு பற்களில்
பயணிக்கச் செய்வேன்
குச்சியை இரண்டாக பிளந்து
நாக்கில்
சரஸ்வதி எழுதியதை
சுத்தமாக வழித்தெடுப்பேன்
பொழுதுகள் ஆரோக்கியமாகவும்
உற்சாகத்தோடும் உருண்டன
எழுத்துக்களால் நாக்கு தடித்தவர்கள்
நிறைய்ய சிந்திக்கலாயினர்
மரங்கள் சரிந்தன
இடப்பெயர்வில் மண் நிறமாறியது
உடல் நாணல் தன்மைகொள்ள
அவரவர் கூறுவதற்கேற்ப
தட்டை வளைவு குழி குவியென
மாற்றி மாற்றி துலக்கி
சோம்பியபடி வாழப்பழகினோம்
வேறு வக்கற்று...

nantri:vallinam.com

No comments:

Post a Comment