Monday, May 14, 2012

நகைப்புக் காலம்












ஆழமிகு கிணற்றிலிருந்து
ராட்டிணங்களின் துணையின்றி
மேலேறி வந்தன முக்காலமும்
பெருமைபேசி பயணிக்கத் தூண்டின
வாழ்ந்த காலமும்
இருக்கும் காலமும்
ஏற்கனவே அறியப்பட்டிருக்க
எதிர்காலத்தின் புதிர் மினுங்க
பயணித்திட ஆவல் மிகுந்தது
எப்படியும் போகத்தானே போகிறாய்
புத்தி கூற
தயங்கிய கால்கள்
நோக்கின கடந்த காலத்தை
சிற்சில இன்பங்கள் இருந்தபோதும்
துன்பமிகு நாளே நிறைந்திருக்க
நிதானிக்கத் துவங்கினேன்
உன் நிழல்தரும் மண்
பறிக்கப்படுவதை பார்க்கத் தவறாதெவென
நடப்புக் காலம் நகைத்து மறைந்தது…

nantri:malaikal.com

No comments:

Post a Comment