Tuesday, February 7, 2012

வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே...


சடசடவென பொழிந்த மழைக்குப் பின்னான புழுக்கம்

சரசரவென அடித்த காற்றால் தின்றழிக்கப்படுகிறது
ஒன்றை எப்பொழுதும் வேறொன்று வீழ்த்தக் காத்திருக்க
வருத்தமெதற்கு வளரும் தொப்பை குறித்து
பாரம் சுமக்கும் உடல் அறியும்
பருமன் குறைக்கும் ரகசியங்களை
மெலிந்த தேகத்தோடு இருந்தவன்
உரையாடிக் கொண்டிருந்தான்
சொல்லுதல் யாவர்க்கும்... குறள் தவளையாக குதிக்க
ஒரு கோலினால் திருப்பிவிட்டேன்
மனம் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை
மீண்டும் துழாவிடத் துவங்க
வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
என்னிடம் வாருங்கள்...

பாவம் இயேசுபிரான்

இப்பாரம் குறித்தெல்லாம் அறிந்திருக்கமாட்டார்.


nantri:thinnai.com

2 comments:

rvelkannan said...

கவிதைக்குள் இருக்கும் எள்ளலையும் யாதார்த்தையும் மிகவும் ரசித்தேன் நண்பரே

ந.பெரியசாமி said...

நன்றி கண்ணன்

Post a Comment