Thursday, January 23, 2014

உங்களின் நெருக்கடியான போராட்டச் சூழலிலும் எனது தொகுப்பை வாசித்து பகிர்வு கொண்டமைக்கு மிகவும் நன்றி தோழர்
ந. பெரியசாமி, _மதுவாகினி_. மதுராந்தகம்: அகநாழிகை பதிப்பகம், 2012 (பக். 80; ரூ. 70; 9994541010).

மதுவாகினியும், கோபமும், சிகப்புச் சிந்தையும் சேர்ந்தே பயணிக்கின்றனர் கவிதைகளின் ஊடே. சிந்திக்க, சீர்தூக்க, செயலில் இறங்க எண்ணிறந்த முத்துக்கள் இந்நூல் முழுவதும்:

[] தீதும் நன்றும் பிறர்தர வாராதென்பது
நாய்களுக்குப் பொருந்தக்கூடும்.

[] ஈழ வதையில்
வழிந்த ரத்தங்களை வாக்குக்காக
மணக்க மணக்க வதக்கியபடி இருக்கிறார்கள்
ஒரே சட்டியில் இரு அகப்பையோடு
ஆண்ட கிழவனாரும்
ஆளும் குமரியும்.

[] எதையும் செவிகொள்ளாது
சுயம் வளர்க்க தீராபசியோடிருக்கும்
அழிவின் வேட்டையில் தீராதிருக்கும்
மயிராண்டிகளின் வாழ்வின் மீது
சாவகாசமாய் நின்று
நிறைவான மூத்திரம் பெய்வோம்.

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment