Sunday, May 12, 2013

கசப்பேறிய சிந்தனை

சொற்களின் கலவியால்
விஷமேற்றப்பட்ட சாதிக்காயை
வழிய வழிய தின்னச் செய்கிறார்கள்
கசப்பான சிந்தனையால் கல்லெறிந்தான்
பிறந்திருக்கும் தன் பேத்தியை
நினைவில் கொஞ்சியவாறு
காணப் பயணித்தவரின்
கண்ணைத் தின்றது
... சேதாரங்கள் தலைவனை விடுவிக்கும்
நம்பிக்கையில் இல்லம் அடைய அதிர்ந்தான்
இணையாளும் குழந்தையும்
தீக்காயங்களோடு தப்பிக் கிடந்தனர்
கண் போன தந்தையைக் காண
பயணித்த பஸ் எரியூட்டப்பட்டதாம்
இன்னமும் விடுதலை செய்யப்படாமலிருக்க
தலைவன் சிறையில் வாசித்துக்கொண்டிருக்கிறார்
காந்திய சிந்தனைகளை...

1 comment:

செய்தாலி said...

சரியான கவிதை சார்
அருமை

Post a Comment