Friday, April 12, 2013

நீர்மமாதல்

நாயொன்று
பெருத்த தீ முடிச்சொன்றை
நெடுநாளாய் உருட்டித் திரிந்தது பந்தாக
அந்தியில் சிறுவர்கள்
கண்ணாமூச்சி ர்ரே ர்ரே விளையாடினர்
பார்வையை இருட்டாக்கிக் கொண்டவன்
அறியாது கிழித்தான்
சப்தம் திசையெங்கும் பரவ
வானில் தங்கியது இடி
அதிர்வில் எழுந்தது மின்னல்
சிறார்கள் நனையத் துவங்கினார்கள்...

No comments:

Post a Comment