Sunday, March 4, 2012

கை நிறைய்ய முத்தங்களோடு...


மூதாதைகளின் திரேகம் வழிந்த வியர்வையும்
பரிவும் படர்ந்த மண் அள்ளி
கோவிலின் கலசங்களுள்
தப்பிக்கிடந்த விதை பொறுக்கி
கனவை விதைத்தேன்
அன்பின் நீர் வார்த்து
காதலின் கதையை சொல்லிச்சொல்லி
எவரும் தீண்டிடாது நெடிதாய் வளர்ந்த மரம்
பிரசவித்த முதல் பூவை
கையேந்தி நாடலைந்தேன்
கண்டடையாது போக காடடைந்தேன்
கள்ளி நிறைந்த வனத்துள்
கவனிப்பற்றுக் கிடந்த
கிராம தேவதையின் கோயிலுள்
சிலையாக மதுவாகினியைக் கண்டேன்
காத்திருப்பின் நாட்களை
கணம் சிலிர்த்து
வேப்பம் பூக்களால் நனைத்து
பறவையாகி இசைத்தாள்
மிச்சமிருக்கும் இதழ்களிலும்
வசீகரித்த பூவை தலைச்சூடி
மௌனித்துக் கிடந்து
மீண்டும் திரியத் துவங்கினேன்
கனவை வடிவமாக்கிய கரம் பற்றிட
கை நிறைய்ய முத்தங்களோடு...

nantri : THEERANATHI

No comments:

Post a Comment