Friday, October 25, 2013
Wednesday, October 2, 2013
nantri:Slate
மழை
மீந்த மின்னலை
ஒரு சிப்பியுள் அடைத்தேன்
தன் நிழலை
தாண்ட முயற்ச்சித்தபடி ஆட்டுக்குட்டி
மேய்ச்சலில் இருந்த மாட்டிற்கு
உனி பிடுங்கியவாறு பூனை
குழாயிலிருந்து குதித்த நீர் துளிகளில்
தாகமடங்கியவாறு காக்கை
தன் வெறுமையை காட்சியாக்கி
நீண்டு கொண்டிருந்த நிலத்தில்
சாம்பல் படிந்த உடலோடு
எதிரில் வந்த மதுவாகினி
கொஞ்சமாவது மழை தந்திடு
வான் நோக்கி கை கூப்பினாள்
காத்திருந்தார்போல் சிப்பியை உடைத்தேன்
மிதந்தலைந்தோம் வண்ண மீன்களாக...
*
நிலையானது
இருள் விளைந்த வேளையில்
விளையாடிக்கொண்டிருந்தனர் சிறார்கள்
தன்னிடமிருந்த சாக்பீசால் ஒருவன்
நிறைய்ய கட்டங்களை வரைந்தான்
சிறுமி ஒரு கட்டத்துள் தாமரை வரைந்தாள்
மற்றவள் வேறொன்றில் சூரியகாந்திப்பூ
அடுத்தடுத்து வந்தவர்கள்
மாதுளை கொய்யா மாங்காவென
கட்டங்களை நிரப்பினர்
திடுமென கோடுகள் மறைந்து
வரைந்தவைகளை கட்டங்கள்
உயிர்ப்பிக்கச் செய்தன
தெருவில் மின்சாரம் பூக்கச் சிரித்து
அவரவர்களுக்கானதை எடுத்துக் கலைந்தனர்
எனக்கானதை நிரப்ப
கட்டங்களற்று வெறிச்சோடிப் போனேன்...
*
சங்கடை அமுது
நீர் கசிவிக்கும்
பார்வை குமிழியின்
பிணி தணிக்க முலை பிசைந்து
சங்கடையில் தேங்கிய அமுது நனைக்க
வழிந்த ஒரு சொட்டு
உதட்டில் பரவி
உடலை தித்திப்பின் துளிகளாக்கி
காலத்தை சுருட்டியவாறு
வயலடைந்தன
புழுக்கைகளை சதுரமாக காட்சிபடுத்தி
வளப்படுத்தும் கெடையில்
இருளை முத்தமிட்டவாறு இருந்த
ஆடொன்றின் நீண்ட காம்பிலிருந்து
பீச்சிய பால் மணத்தால்
மீண்டு உடலானேன்...
மீந்த மின்னலை
ஒரு சிப்பியுள் அடைத்தேன்
தன் நிழலை
தாண்ட முயற்ச்சித்தபடி ஆட்டுக்குட்டி
மேய்ச்சலில் இருந்த மாட்டிற்கு
உனி பிடுங்கியவாறு பூனை
குழாயிலிருந்து குதித்த நீர் துளிகளில்
தாகமடங்கியவாறு காக்கை
தன் வெறுமையை காட்சியாக்கி
நீண்டு கொண்டிருந்த நிலத்தில்
சாம்பல் படிந்த உடலோடு
எதிரில் வந்த மதுவாகினி
கொஞ்சமாவது மழை தந்திடு
வான் நோக்கி கை கூப்பினாள்
காத்திருந்தார்போல் சிப்பியை உடைத்தேன்
மிதந்தலைந்தோம் வண்ண மீன்களாக...
*
நிலையானது
இருள் விளைந்த வேளையில்
விளையாடிக்கொண்டிருந்தனர் சிறார்கள்
தன்னிடமிருந்த சாக்பீசால் ஒருவன்
நிறைய்ய கட்டங்களை வரைந்தான்
சிறுமி ஒரு கட்டத்துள் தாமரை வரைந்தாள்
மற்றவள் வேறொன்றில் சூரியகாந்திப்பூ
அடுத்தடுத்து வந்தவர்கள்
மாதுளை கொய்யா மாங்காவென
கட்டங்களை நிரப்பினர்
திடுமென கோடுகள் மறைந்து
வரைந்தவைகளை கட்டங்கள்
உயிர்ப்பிக்கச் செய்தன
தெருவில் மின்சாரம் பூக்கச் சிரித்து
அவரவர்களுக்கானதை எடுத்துக் கலைந்தனர்
எனக்கானதை நிரப்ப
கட்டங்களற்று வெறிச்சோடிப் போனேன்...
*
சங்கடை அமுது
நீர் கசிவிக்கும்
பார்வை குமிழியின்
பிணி தணிக்க முலை பிசைந்து
சங்கடையில் தேங்கிய அமுது நனைக்க
வழிந்த ஒரு சொட்டு
உதட்டில் பரவி
உடலை தித்திப்பின் துளிகளாக்கி
காலத்தை சுருட்டியவாறு
வயலடைந்தன
புழுக்கைகளை சதுரமாக காட்சிபடுத்தி
வளப்படுத்தும் கெடையில்
இருளை முத்தமிட்டவாறு இருந்த
ஆடொன்றின் நீண்ட காம்பிலிருந்து
பீச்சிய பால் மணத்தால்
மீண்டு உடலானேன்...
Friday, September 6, 2013
சாயக்கனி
தொட்டி ஒன்று
தன் குறுகிய எல்லைக்குள்
வேர்களை உயிர்ப்பிக்க வைத்து
நேர்த்தியாக வளர்த்திருந்தது
மணத்தக்காளிச் செடியை
சாயமேறித் தொங்கும் நீர்த்துளிகளாக
அதன் கனிகள்
அவசர அவசரமாக பறித்துத் தின்றவன்
சிறிதளவு என்னிடம் காட்டினான்
இது எப்போ சிவப்பாகுமென்றான்
கருப்பாகத்தானிருக்கும் இப்பழமென்றேன்
சிகப்பானால்தானே பழம்
எல்லா பழங்களும் சிகப்பாகாதென்றேன்
திருப்தியின்மையோடு ஓடிப்போனான்
அடுத்த நாளில் அதிசயம் கண்டேன்
கனிகளுக்கு சிவப்பு வர்ணம் பூசிக்கொண்டிருந்தவன்
மணத்தக்காளிக்கு அறிவுறுத்தினான்
இனி இப்படித்தான் பழமாக வேண்டுமென...
*
பவனி
தாள் ஒன்று
தன்னில் எதையாவது வரையுமாறு
அழைப்பதாக கூறிச் சென்றவன்
இருந்த வர்ணங்களை சரிபார்த்து
ஒன்றிரண்டை வாங்கிவர பணித்தான்
என்ன செய்ய போகிறாய்
மகாபாரதம் தொடரில் பார்த்த
ரதம் ஒன்றை வரையத் துவங்கினான்
ஒளிர்வில் வீடு மினுங்க
ரதம் நின்றது பேரழகோடு
வலம் வந்து நின்றவன்
மற்றொரு தாளில்
புரவிகளை உயிர்ப்பித்து பூட்டினான்
ஊரே அதிசயித்து நோக்க
வானில் பவனி வந்தான்
இந்நிகழ்விற்கு பின்னான நாட்களில்
வரையும் சித்திரங்கள் வாகனமாகிட
தொலைந்து போவது தொடர்கதையானது...
நன்றி: திராநதி.
தொட்டி ஒன்று
தன் குறுகிய எல்லைக்குள்
வேர்களை உயிர்ப்பிக்க வைத்து
நேர்த்தியாக வளர்த்திருந்தது
மணத்தக்காளிச் செடியை
சாயமேறித் தொங்கும் நீர்த்துளிகளாக
அதன் கனிகள்
அவசர அவசரமாக பறித்துத் தின்றவன்
சிறிதளவு என்னிடம் காட்டினான்
இது எப்போ சிவப்பாகுமென்றான்
கருப்பாகத்தானிருக்கும் இப்பழமென்றேன்
சிகப்பானால்தானே பழம்
எல்லா பழங்களும் சிகப்பாகாதென்றேன்
திருப்தியின்மையோடு ஓடிப்போனான்
அடுத்த நாளில் அதிசயம் கண்டேன்
கனிகளுக்கு சிவப்பு வர்ணம் பூசிக்கொண்டிருந்தவன்
மணத்தக்காளிக்கு அறிவுறுத்தினான்
இனி இப்படித்தான் பழமாக வேண்டுமென...
*
பவனி
தாள் ஒன்று
தன்னில் எதையாவது வரையுமாறு
அழைப்பதாக கூறிச் சென்றவன்
இருந்த வர்ணங்களை சரிபார்த்து
ஒன்றிரண்டை வாங்கிவர பணித்தான்
என்ன செய்ய போகிறாய்
மகாபாரதம் தொடரில் பார்த்த
ரதம் ஒன்றை வரையத் துவங்கினான்
ஒளிர்வில் வீடு மினுங்க
ரதம் நின்றது பேரழகோடு
வலம் வந்து நின்றவன்
மற்றொரு தாளில்
புரவிகளை உயிர்ப்பித்து பூட்டினான்
ஊரே அதிசயித்து நோக்க
வானில் பவனி வந்தான்
இந்நிகழ்விற்கு பின்னான நாட்களில்
வரையும் சித்திரங்கள் வாகனமாகிட
தொலைந்து போவது தொடர்கதையானது...
நன்றி: திராநதி.
Subscribe to:
Posts (Atom)